Friday, January 24, 2014

இறை நாமாவின் - அற்புதம் :



           மகாராஷ்டிரா  மாநிலத்தில்  முக்தாபாய்  என்ற  பெண்மணி  சர்வசதாவும்  இறைவனின்  நாமாவை  (ஓம் ஸ்ரீ  ராம்  ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் )
சொல்லிக்கொண்டே இருந்தார், தனது  தினசரி  வேலைகள் எல்லாம் ...... ராம  நாமாவுடன்  சொல்லிச்சொல்லி  மனம் முழுக்க  ராம நாமாவில்  லயிக்க தனது கை, கால்கள், மற்றும்  உடலின்  உணர்வின்றி  செய்துகொண்டு இருந்தாலும்,அவரது  மனமும், வாய் மூலம்  ராம  மந்திரம்  கூறிக்கொண்டும்  இருந்தார்.

        அருகில்  இருக்கும்  தனது  குருவான  துக்காரம்  சுவாமிகளுக்கும்,  சேவை செய்தும் வந்தார். தனது  தினசரி  வாழ்கைக்கு  பசுவின்  சாணத்தை  வெய்யிலில்  காயவைத்து , அதனை   விற்று கிடைக்கும் பணத்தில்  வாழ்க்கை  நடந்தது. 

       ஒருநாள்  அவளது  வீட்டின்  அருகிலிருக்கும் பெண்ணும்,  தனது வரட்டியை  காயவைக்கும் போது ( காய்ந்த பசுஞ்சாணம் )  முக்தாபாய்  வரட்டியுடன்  கலந்து விட்டது. பிரித்தெடுக்கும் போது  முக்தாபாய் வரட்டியும்  தன்னுடையது என  வாதிட்டாள் .அப்போது அந்த வழியே  துக்காரம் வர  முக்தாபாயும்  தம்முடைய  வரட்டியை  பிரித்து தருமாறு  வேண்ட  துக்காராமும்  சரியென  அதற்கு ஒத்துக்கொண்டார் .



     துக்காராமும்  ஒவ்வொரு  வரட்டியும்  தமது காதில் வைக்க.......அதிலிருந்து  "ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் "  என்று  ஒலித்தது. அப்படி  ராம நாமா  ஒலித்த வரட்டி  எல்லாம்  முக்தாபாய்  வரட்டி  எனவும்,  ஒன்றும் ஒலிகாத்தது  பக்கத்துக்கு  வீட்டு பெண்மணியின்  வரட்டி  எனவும் பிரித்து வைத்தார்,

   குழந்தைகளே ,  இது  முடியுமா?  கேள்வி  எழுகிறதா? முடியும்,  நிச்சயமாக  முடியும்.

        இங்கு  துக்காரமும்   இறை  நாமம்  சொல்லிச்சொல்லி   தனது மனதை  மிக  நுண்ணிய உணரவுகளை  உணரத்தக்கதாக மாற்றியுள்ளார். ஆம் , குழந்தைகளே   நமது  மனதின் உணர்வுகள்  நாம்   தொடும்  பொருளில்  எல்லாம்  பதியும்,  செயலில்  பதிவு  ஏற்படுத்தும்.  எனவே  எப்போதும்  இறை நாமா  சொல்லியே  நாமும்  வாழ்வில்  ஈடுபட்டால் ,  நமது  செயலெல்லாம்   நன்மையுடன்,  அடுத்தவர்களுக்கும்  நன்மையே   செய்யக்கூடியதாகவும்  அது   இருக்கும்.

Tuesday, January 21, 2014

மஹா  பெரியவாளின்  கருணை :



           1940 ம்  வருடம், பெரியவா  தனது  சாதுர்மாஸ்ய விரதத்தின்  போது  நாகபட்டினத்தில் இருந்தார். அங்கு  ஒரே வறட்சி  தாண்டவமாடியது.   நாகப்பட்டினம் சுற்றிலும்   எங்கும் மழையே இல்லை. ஆடிபூர  விழா  நெருங்கிகொண்டிருந்தது. நீலாயதாட்சி  அம்மன்  கோவில்  விழாக் குழுவினர்  வறட்சியின்  காரணமாக  விழா  நடத்தவேண்டாம் என முடிவுசெய்து  பெரியவரிடம் மேற்படி  விசயத்தை  எடுத்து சென்றனர் . ஆனால்  அவரிடம் இதை பற்றி  யாருக்கும்  வாய் திறக்க  தைரியமில்லை. 

          பெரியவா  அனைத்தும்  அறிந்தவர்  ஆயிற்றே .அவரும் எதுவும் சொல்லாமல்  விழா  நடத்த பிரசாதம்  கொடுத்து  அனுப்பினார். அவர்களும் எதுவும்  சொல்லாமல் திரும்பிவிட்டனர்,
          பெரியவா   உட்சிபொழுதில்   நீலாயதாட்சி  அம்மன்  கோவில் குளத்திற்கு   சென்றார், வறட்சியான  குளத்தின்  மத்யபகுதிக்கு  சென்று,  சிறிது  ஈரமான பகுதியில்  தனது  பாதத்தின்  பெருவிரலால்  சற்றே  அழுத்த ,  சிறிது  நீர்  வெளியேறியது. அந்த  தீர்த்தத்தை  எடுத்து  தமது  தலையில்  புரோட்சித்து  தமது  இருப்பிடத்திற்கு  திரும்பினர்.

         மீண்டும்  அடுத்த நாளும்  உட்சிப்பொழுதில்  குளத்திற்கு  சென்று, தமது  தாமரைபாதங்களால்  சிறிது  நீரை  வெளியேற்றி,  சற்று  மேலே வானத்தை  நோக்கிவிட்டு  தனது  தண்டத்துடன்  திரும்பினார். மடத்திற்குள்  அவர் நுழையவும்,  எங்கிருந்தோ  மேகங்கள்  திரண்டு வந்து  சுற்றுசூழ்நிலையில்  திடீரென  மாற்றம்  நிகழ்ந்தது.


        கடினமாக  மழை  அடித்து பெய்தது.  அடுத்த  நான்கு  நாட்களும்  மழையால்   நாகப்பட்டினம்  மற்றும்  சுற்றியுள்ள  பகுதிகளும்,  குளங்களும்   நீரால் நிரம்பின. ஆடிபூரம்  விழாவினை  அந்த  ஆண்டு  மிகுந்த  மகிழ்ச்சியாக 
நாகப்பட்டினம்  மக்கள்  கொண்டாடினர்  என்பதை  சொல்லவும்  வேண்டுமா!........என்ன?


       பெரியவாளின்  கருணை அளப்பரியது...............!

 ( மேற்கண்ட நிகழ்ச்சி  திரு. சுவாமிநாதன்  சொற்பொழிவில்  கேட்டது......)

      தனக்கு  எதுவும்  வேண்டாத  மகான்களின் கருணை உள்ளம் , மக்களின்  துன்பங்கள்  கண்டு  உருகுகிறது...........குழந்தைகளே! நாம்  என்ன  செய்ய வேண்டும்?

Friday, January 17, 2014

உண்மையான  இறை நம்பிக்கை :




     சேகர்  என்ற சிவ பக்தர்  ஒருமுறை  அடர்ந்த காட்டின் வழியே சென்றுகொண்டு  இருந்தார். சில விலை மதிப்பற்ற,  உயர்ந்த  நவரத்னங்கள்  மற்றும் தங்க  நகைகளும் அவரிடம் இருந்தன. அந்த அடர்ந்த  கட்டின் நடுவே சில கொடூர  வழிப்பறி திருடர்கள்  அவரை  வழிமறித்தனர். அவரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருட்களை  களவாட  முற்படும் போது ,...........அவர்,,,,,,,,சிவமே!.......சிவமே!..  என்று  கதற..............சிவபெருமானும்  விரைவாக அவரைக்  காக்கும்  பொருட்டு ......அன்னை  பார்வதியிடம்  கூட  கூறாமல் விரைவாக   எழுந்து வந்தார்..... வந்தவர்   திரும்பி மீண்டும்
சென்று  அமர்ந்து விட்டார்.  அன்னை  பார்வதி   ஆச்சர்யத்துடன்  கேட்க.........

  "  சிவபக்தன்  ஒருவன்  ஆபத்தில்  என்னை  அழைத்தான் , அவனை  காட்கவேண்டுமென  விரைந்தேன். ஆனால்  அதற்குள்  அவன்  கல்லை  கையில்  எடுத்து விட்டான் .  இனி  அவனை , அவனே  காத்துக் கொள்வான் , என  திரும்பி  விட்டேன், "  என்றார்.

    இங்கு  , சேகர்  .......என்ன செய்திருக்க  வேண்டும்? குழந்தைகளே !.............
மகான்களின்  அருளும்  தன்மை 




   ஓர்முறை  சமர்த்த  ராமதாசரும்  அவரது  சீடரும்  கிராமம்  ஒன்றின்  வழியாக  சென்றுகொண்டு  இருந்தனர் . களைப்பும் , பசியும்  ஏற்படவே  சிறிது  ஓய்வு  எடுத்துசெல்ல நினைத்து  வழியின்  மீது  இருந்த கல்லில்  ராமதாசர்  அமர்ந்தார் .உடனே ... சீடர்  குருவின்  பசியறிந்து அருகில்  இருந்த  கரும்பு  காட்டிலிருந்து  சில கரும்புகளை  ஒடித்து  வர சென்றுவிட்டார் .  திரும்ப வரும்போது  அந்த காட்டின் விவசாயி ,,,,,,,,, பார்த்துவிட  திருடுகிறார்கள்  என தவறாக  நினைத்து  அடித்துவிட ,  ராமதாசரின்  முதுகிலும் காயம்  ஏற்பட ..........அவரும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். சீடர்  துடி துடித்து விட்டார்,
           
             சீடரிடம்...சமாதானமாக   அனுமதி பெறாமல்......... நீ கரும்புகளை கொண்டு வந்தது தவறு, எனவே  தண்டனையை  அமைதியாக ஏற்றுகொள்வோம் என்று  ஆறுதல்  சொன்னார். பின்பு  இருவரும்  சிவாஜியின்  அரண்மனைக்கு  சென்றனர்,ராமதாசரின் மிக சிறந்த  சீடரே  சிவாஜியும் ஆவார் .  மறுநாள்  குருவுக்கு குளிப்பாட்டும்போது ,  முதுகில் உள்ள தழும்பினை  வினவ ,,,,,,,ஒன்றுமில்லை என்று கூறினார்  ராமதாசர்.

        சந்தேகம்  கொண்டு  அரசன்  சீடரிடம்  கடினமாக வினவ ........சீடரும் நடந்ததை  கூறினார்,  அதை கேட்டவுடன்  மிகுந்த கோபம் கொண்ட  சிவாஜி............அந்த  விவசாயியை  தண்டிக்க  ஆட்கள்  அனுப்பி அழைத்துவர செய்தார் .

      குருவுடன்  அரசபைக்கு  சென்றார். சிவாஜி.   ராமதாசரை கண்டவுடன்  விவசாயிக்கு  தனக்கு தண்டனை  உறுதி  என முடிவு செய்தான்.

    சமர்த்த  ராமதாசர்  சிவாஜியை பார்த்து ......" அவர் மீது தவறு ஏதும் இல்லை......உண்மையில்  தவறு  என்மீதே ,,,, அவரது  தோட்டத்தில்  அவரது அனுமதியின்றி  கரும்புகளை  பறித்ததோடு அல்லாமல்  அவருக்கு  மீண்டும், மீண்டும்  விசாரணை  எனவும், இவ்வளவு  தூரம்  அலையவும் காரணமாக  இருந்துள்ளேன்.  சிவாஜி.....நீ எனது அருமை சீடனல்லவா... !  அந்த விவசாயிக்கு  5 கிராமங்களை   பரிசாக   அளிக்க விரும்புகிறேன்.........எனது விருப்பத்தை நிறைவேற்று........  என கட்டளையிட்டார்,...


     அன்பர்களே,,,,.. குரு என்பவர்.......தனக்கு  தீங்கு ஏற்படினும் பொறுத்துக்கொண்டு,,,,,,,,,நன்மையே  செய்து.........அவர்களின் அறியாமையை பொருட்படுத்தாது , நன்மையே    செய்பவர்............ஆனால்  இன்று,,,,,,,,,,,,,,?

      எங்கேனும்   நல்லோர்கள்,,,,,,,,,,மகான்கள்.......காஞ்சி பெரியவா...... ..பப்பா  ராமதாஸ் .............ரமண.மகரிஷி........யோகிராம்சுரத்குமார்..............இருக்கலாம்,,,,,,,,,,,தேடுவோம்............வணங்கி  நன்மை  பெறுவோம்.