Monday, October 3, 2016

வேத மந்த்ரங்கள் - நோய்களை குணப்படுத்தும் ஆற்றல்

இதய  நோயை  குணப்படுத்திய  
" ஸ்ரீ  ருத்ரம் "

 Image result for siva god images

                  திரு. ரங்கன்  அவர்களின்  நண்பர் திரு.சுப்ரமணியன்  என்பவர்  இருதய  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை  சிகிச்சை  நிபுணர்கள்  அவருக்கு  பை-பாஸ்  சர்ஜரிக்கு  பரிந்துரை  செய்துள்ளார்கள். அவரிடத்து  போதிய  பண  வசதியின்மையாலும்,  தனது  மகனுக்கு  மிகப்  பெரும்  செலவு  வைக்க  மனமின்மையாலும்  அவர்  தமது  இருப்பிடமான  சென்னைக்கே   திரும்பியுள்ளார். இனி  கடவுளின்  கருணையே  கதி  என  நம்பிக்கையோடு  நாட்களை   கடத்தலானார்.

                   இங்கு  சென்னையில்   ஸத்சங்கங்கள்  மற்றும்  ' ஸ்ரீ  ருத்ரம் '  - தினசரி  11  முறை , வெவ்வேறு  கோவில்களில்   பாராயணம்  செய்யும்    ஒரு  குழுவில்  இணைந்து  பாராயணம்  செய்துள்ளார்.  அவருக்கு  ஏற்கனவே  'ஸ்ரீ  ருத்ரம் ' - சமகம்   தெரியுமாதலால்,  மிக  எளிதாக  அவர்களுடன்  பல்வேறு  கோவில்களில்  பாராயணம்  செய்துள்ளார்.

                48 நாட்கள்  கழிந்த  நிலையில்  தற்போது  ஆலோசிக்கும்  இதய  மருத்துவரிடம்  ஆலோசனைக்கு  சென்றபொழுது,  அவரது  இதயம்  பூரணமாக   குணம்  அடைந்துள்ளார்  எனவும், இனி  அவருக்கு அறுவை  சிகிச்சை , மருத்துவ  ஆலோசனை  தேவை இல்லை  என்றும், அம்மருத்துவர்  மிகவும்   ஆச்சர்யமுற்று  கடந்த  இரு  மாதங்களில்  அவர்  மேற்கொண்ட    நடவடிக்கைகளை   வினவினார்.
                  
                திரு.சுப்ரமணியன்  அவர்களும்  கடந்த  மாதங்களில்   தினமும்  11 முறை  ' ஸ்ரீ  ருத்ரம் ' -சமகம் பாராயணம், உச்சஸ்தாயீல்   செய்ததாகவும்  கூறினார்.

                   இதய  மருத்துவரும்  water therapy, music therapy, etc...போன்று ' ஸ்ரீ  ருத்ரம் '  செயல்பட்டு  அந்த   மந்திர  அதிர்வு   மிக்க  வார்த்தைகள்   குணப்படுத்தியுள்ளதாகவும்,  உத்தஸ்தாயீல்  அவர்  உச்சரித்தது........அவரது   நுரையீரலை  நன்கு  விரிவடைய   வைத்து,  அதன்  மூலம்   அதிக  அளவு  ஆக்ஸிஜன்  உள்ளே  நுழைந்து,  அதனால்  இதயம் நன்கு   செயல்பட்டு ..............குணம்   அடைந்ததாக   கூறி,    தமக்கும்  வேத  மந்திரங்கள்   நோய்களை குணப்படுத்தும்  ஆற்றல்  கொண்டவை   என்பதில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை   இருப்பதாகவும்   கூறியுள்ளார்.

                      நண்பர்களே,  இனியேனும்   எங்கேயாவது   " ஸ்ரீ ருத்ரம் " மற்றும்   வேத பராயணமோ , ஸ்துதிகளோ  நிகழ்ந்தால்   நின்று   சற்றே  கேட்போமாக!  தமிழ்  திருமுறைகளுக்கும்  இதே  போன்று  நோய்களை   குணப்படுத்தும்  ஆற்றல்  உண்டு!


 ஸ்ரீ ருத்ரம் :






       https://www.youtube.com/watch?v=VP8Wv1P1NFE   

Sunday, October 2, 2016

பாபம் அகல :

பாபம்  அகல : ( மூக  பஞ்ச சதி )

                   Image result for seshadri swamigal

               ஸ்ரீ  சேஷாத்ரி  ஸ்வாமிகள்  தமது  சிறுவயதில்  பஞ்சதஸி  மற்றும்  மூக  பஞ்ச சதியையும்  பாராயணம்  செய்துகொண்டே  காஞ்சி  காமாட்சி  அம்மனின்  ஆலயப்  பிரகாரம்  வருவாராம். மேலும் ஸ்ரீ  மஹா  பெரியவரும்  இம்மூகப் பஞ்சசதீ  பற்றி  மிகவும்  சிலாகித்து  கூறுவர்களாம்.

Image result for kamatchi temple


             அவற்றில்  நமது  பாவங்களை  எரித்து  பொசுக்கும்  அக்னியின்   ஆற்றலைப்  போன்ற  ஸ்லோகம்  ஒன்று ...................தினசரி  21 முறை   காமாக்ஷியை   நினைவிற்கொண்டு   சொல்ல  நெருப்பிலிட்ட  பஞ்சுபொதியாய்  நமது  பாபங்கள்  எரிந்து  சாம்பலாகும்.

               Image result for mooka pancha sati


ஸ்ரியம்   வித்யாம்   தத்யாத்    ஜனனி   நமதாம்                                                                                 கீர்த்திமமிதாம் 
           ஸுபுத்ரம்   ப்ராதத்தே   தவ   ஜடிதி    காமாக்ஷி !                                                                                        கருணா !
த்ரிலோக்யா    மாதிக்ஞம்   திரிபுர   பரிபந்தி                                                                                                     ப்ரணயினி !
             ப்ரணாமஸ்    த்வத்பாதே   ஸமித   துரிதே                                                                                     கிம்  ந   குருதே !!



  பொருள் :      ஹே  காமாக்ஷி !    வணங்குகின்றவர்களுக்கு   உனது   கருணையானது   தனம் ( செல்வம் ), வித்யை ,  அளவற்ற  கீர்த்தி,  நல்ல  குழந்தைகள் , மூவுலகிலும்   மேன்மையாக  இருக்கும்  தன்மை,  இவைகளை   விரைந்து  கொடுக்கிறது.  திரிபுர  சம்ஹாரம்  செய்த  சிவபெருமானின்  பிரிய  பத்தினியே !  பக்தர்களின்  பாபங்களைப்  போக்குகின்ற  தங்கள்  பாதங்களில்  செய்த   நமஸ்காரமானது   எதைத்தான்   தராது!

தானங்கள் - மறுபிறவி - பிரேத ஜென்மம்

பிரேத  ஜென்மம்  நீங்க : 
( கருட புராணம் )   
  1. Image result for garuda puranam images
  2. Image result for garuda puranam images


  3.     இங்கு  விதிக்கப்பட்ட  தான , தர்மங்களை  பெற  தகுதியுடைய  அந்தணன்  
  4. என்போன்  அறவழி  நிற்போனும் , 
  5. மூன்று  வேலையும்  சந்தியாவந்தனம்  போன்ற  கிரியைகளை  தவறாது  
  6. அநுஷ்டிப்போனும், சதா  பிரம்மத்தில்  ஆழ்ந்திருப்போனையுமே  
  7. எம்பெருமான்  குறிப்பிடுகிறார்................
  8. கவனிக்க .............காஞ்சி  மஹா  பெரியவரின்  "தெய்வத்தின்  குரல் 
  9. ".....அந்தண  தர்மம்.
  10. தான தருமங்கள் விரு÷ஷாற்சனப் பலன்கள்:
                                 
               
                                 ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் ÷க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும்.
      
                             சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான். சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான். அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

    Image result for garuda puranam images

                                  விரு÷ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும். யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விரு÷ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும். எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விரு÷ஷாற்சனமே. இந்த விரு÷ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விரு÷ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

    காமிய விரு÷ஷாற்சன சர்க்கம்:


                                முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விரு÷ஷாற்சன சர்க்கம் என்று பெயர்.

                               பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விரு÷ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார். ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும். பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
      
        Image result for anthanar thanam

                               சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

    தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன :
    1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.
    2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.
    3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்
    4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.


    7. பிராயச்சித்தம்
    ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயச்சித்தம் எனப்படும். ஓர் அந்தணனைக் கொல்வதே மிகப் பெரிய பாவம் ஆகும். இந்தப் பாவத்தைச் செய்தவன் இலைகள், சருகுகள், உலர்ந்த புல் போன்றவற்றால் ஒரு குடிசை அமைத்து அதில் பன்னிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். (அ) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (அ) மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தீக்குளித்தல் (அ) நீரில் மூழ்கி இறத்தலும் பிராயச்சித்தமாகும்.
    சில சமயம் பிராமணப் பண்டிதர்களுக்கு உணவளித்தல் போன்ற சாதாரண தண்டனைகளும் உண்டு. கங்கை, யமுனை, சரசுவதி சந்திக்கும் திரிவேணி சங்கமம் ஒரு புனித தீர்த்தத் தலமாகும். ஒருவன் மூன்று இரவு, மூன்று பகல் இதில் நீராடி உபவாசம் இருப்பதாலும் மேற்கூரிய பாவத்துக்குப் பரிகாரம் (அ) பிராயச் சித்தம் ஆகும். தங்கத்தைத் திருடும் ஒரு பிராமணனை மன்னன் கதையால் அடித்து, பன்னிரண்டு ஆண்டுகள் குடிசையில் வாழ்வது ஒரு பரிகாரம் ஆகும்.
     Image result for garuda puranam images
                   

                                ஒரு குடிகாரனுக்கு உரிய பிராயச் சித்தமாக சூடான ஒயினைக் குடித்தலும், அத்துடன் பால், நெய், (அ) கோமியம் குடித்தல். ஒரு புனித தீர்த்தத்தில் ஒருவன் மரணமடைந்தால் அவனுடைய பாவங்களுக்கு அதுவே பரிகாரம் ஆகும். கணவன் செய்த எல்லா பாவங்களும், அவனுடைய மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறுவதால் பரிகாரமாகி விடும். மொத்தத்தில் கற்புடைய மனைவி பாவம் எதுவும் செய்யமாட்டாள்.

    8. தோஷ பரிகாரங்கள்:
                             பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.

    Image result for garuda puranam images

                               பிரேத ஜன்ம தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் தொலைய பெரியோர்களின் அறவுரையை, அறிவுரையை நம்பி ஏற்க வேண்டும். ஸ்நானம், ஜபதபம், ஹோமம், தானம் முதலியவற்றால் பாவநிவாரணம் அடைந்து நாராயண பலி செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணியத் தலங்களில் பித்ருக்களைக் குறித்து தானதர்மங்களைச் செய்தால், பூத, பிரேத, பைசாசங்களால் தொல்லையோ, துன்பமோ ஏற்படாது. மாதா, பிதா, குரு ஆகியோரைப் பூசிப்பது ஒருவர்க்குத் தலையாய கடமையாகும். தாய், தந்தை மரித்த பின், அவர்களைக் குறித்துச் செய்யப்படும் தான தர்மங்களின் பயனை அவனே அடைகிறான்.

    9. பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்:
                                 ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

    1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.
    2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.
    3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.
    4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.
    5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.
    6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.
    7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச் சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.


    10. பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்
    பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான். அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.
                       தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.


    11. பிரேத ஜன்மம் நீங்க வழி
                         அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார். பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விரு÷ஷாற் சர்க்கம் செய்யவேண்டும். உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.
    இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான். முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான். இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம். புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும். பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான். எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான். எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.


    12. பிறத்தலும் இறத்தலும்
                             ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும்.

     Image result for garuda puranam images
                                பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.
                         கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான்.

                         அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.
    Quick reply to this message  Reply With Quote   Multi-Quote This Message  
  11. Image result for garuda puranam images
  12. நன்றி : Tamil brahmins.com

Thursday, September 29, 2016

தேவி கட்கமாலா ஸ்தோத்ரம் :

தேவி கட்கமாலா  ஸ்தோத்ரம் :





                               தேவி  என்றால்  'சக்தி' வடிவான தெய்வீக  அன்னை ,.,.... கட்க - பாதுகாப்பு  தரும்  ஆயுதம் ( வாள் ) , கவசம்  போன்றது  ,.....மாலா - மாலை. ஸ்தோத்ரம் - கீர்த்தனை  அல்லது  ஸ்துதி , பாட்டு   ஆகும்.

                    எவர்  இந்த  ஸ்துதியை  ஸ்துதிக்கிறார்களோ ,  அவர்களின்  கழுத்தில்  அணிந்த  மாலை  போன்று, கவசமாக  இருந்து  அவர்களை  அன்னை  காப்பாள். 




                     மிகவும்  சக்தி  வாய்ந்த, ஆற்றல்  மிக்க,   மந்திர  அதிர்வுகளைக்  கொண்ட ஸ்துதி  இது. ஸ்ரீ சக்ரத்தில்  வாசம்  செய்யும்  தெய்வங்களின்  பெயர்களைத்  தன்னகத்தே  கொண்டது.

                  மத்தியத்தில்  அமர்ந்த  ஸ்ரீ  லலிதையைச்  சுற்றி,  அமர்ந்துள்ள  98 யோகினிகளையே  இதனில்  வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய  இடம் மற்றும்  சக்திகளை, அவர்களின்  செயல்களை  மனதினால்  நினைத்து, பெயரினை  பூரண  அன்போடு  உச்சரிக்க,  நம்முள்  மிகப்  பெரிய  மாற்றங்களை  உருவாக்கும்  அதிர்வுகளை  தன்னகத்தே  கொண்ட மந்த்ர  ஆற்றல் மிக்க  சொற்களால்   ஆனது.

                இதனை   பாராயணம்  செய்தாலே   இயல்பான  தியானம்  நிகழ்கிறது.






                   அம்பிகையை  நோக்கி செல்லும்  பாதை  கணித  அமைப்பு  கொண்டதே  ஸ்ரீ சக்ரத்தின்  அமைப்பாகும்.  சாதகன்  இந்த  பிரபஞ்சத்தைக்  கடந்து  நிற்கும்  பேரறிவான,  ஆற்றலை  எவ்வாறு  அடைகிறான்  என்பதே அடுத்தடுத்த  யோகினிகள்  அமைப்பிடமும்,  அவர்களின்  செயல்பாடுகளையும்  சாதகன்  தன்னுள்  மெல்ல , மெல்ல  தன்னகத்துள்ளே  உணர்ந்துகொள்கிறான்.

                  இவ்வண்டம்  கடந்த  பேரறிவே  தானாகிறான்.  உடல் வேறு ,  தான்  வேறு  என்ற  அனுபவம்  பெற்ற  பின்  மிஞ்சி  இருப்பது  ஆன்மாவே .....அறிவுமயம். மனமற்ற , எண்ணங்களற்ற .........ஆனந்தமயம்.

 
      


         " அன்னையே !  உன்னை   நீயே.....உள்ளபடி  காண்பித்து  அருள்க " என  பிராத்தித்து  தினமும்  இதனை  பாராயணம்  செய்தல் மிகவும் நன்று.  ஸ்ரீ வித்யா  உபாசகர்கள்  நவாவர்ண  பூஜையில்  கிடைக்கும் பலனை ....... ஸ்ரீ  தேவி கட்கமாலா  ஸ்தோத்திரத்தின்  முழு  விரிவாக்கமே  எனலாம்.





                 செய்ய வேண்டியதெல்லாம்  இதனை  தினசரி  பாராயணம்  செய்தலே. பின்னர்  அன்னையின்  காட்சியும், குருவும்  தாமே  வந்து  அடுத்த  படிக்கு  அழைத்துச்  செல்வார்கள்.

                  மனதில்  சொல்லி  தியானிக்க  வசதியாக  கீழ்க்கண்ட  youtube  காணொளி  காட்சி   பயனுள்ளதாக  இருக்கும்.

                  இதனை   பாராயணம்  செய்யுமிடத்தில்  ஏழ்மை , துன்பம் ,  நோய்கள் , மனக்  குழப்பங்கள் , எல்லா வித  துயரங்களும்  அகன்று விடும். சகல  தேவதைகளுடன்  கூடி  அன்னை  லலிதாம்பிகை   அங்கு  வாசம்  செய்வாள். ஆனந்தம்  பொங்கும்  செயல்கள்  நித்தியமாய்  அங்கு  நிகழும்.



பாடல்  இங்கு  பதிவிறக்கம் செய்து  பெற்றுக்கொள்ளவும்.





 நன்றி : ஸ்ரீ  வித்யா  உபாசனா  டிரஸ்ட்.
பூர்ண  மஹாமேரு  டிரஸ்ட்,சென்னை :


Sri Devi Khadgamala Stotram describes about the deities residing in Maha Meru. It is a very powerful Mantra and daily chanting this stotra will give peace of mind.
Click the link shown below to download Sri Devi Khadgamala Stotra/Mantra  in PDF(Tamil):


Sri Devi Khadgamala slogam


http://sanskritdocuments.org/doc_devii/khadgamala.html?lang=ta













                                    
 



                       

Tuesday, September 27, 2016

ஸ்ரீ  வாராஹி :   
                   
                             யாரிடம்  வேண்டுமானாலும்  வம்பு  வைத்துக்கொள். ஆனால்  வாராஹி  உபாசகனிடம்  வம்பு  வைத்துக்கொள்ளாதே  என்ற  அர்த்தத்தில்  சொல்லப்படும் - " வாராஹி  உபாசகனிடம்  வார்த்தையாடாதே " என்பதை  கேள்விப்பட்டிருப்போம்.

                                       

                       
                   ஸ்ரீ  லலிதா  திரிபுர  சுந்தரியின்  சேனாதிபதி  மற்றும்  முக்கிய  தளபதி  அன்னை  ஸ்ரீ  வாராஹி   ஆவர்.   லலிதாம்பிகையின்  இரண்டு  புறங்களில்  ஒன்றில்   ஸ்ரீ ராஜ  சியாமளா   அன்னையும்,  மற்றொருபுறம்   அன்னை  வாராஹியுமே   இருப்பர். கைகளில்  களைப்பையை,  உலக்கையை   ஆயுதமாக  கொண்டு  இருப்பார். 

             பஞ்சமி , தண்டநாதா , ஸ்தம்பிணி  என்ற  பெயர்களாலும்  அழைக்கப்  படுகிறாள். அன்னை  லலிதாம்பிகையின்  மலர் , அம்புகளில்  இருந்து  தோன்றி ,......." அகிலாண்டேஸ்வரி " யாக  திருவானைக்காவில்  போற்றுகின்றனர்.

               தனது  உலக்கையால்  பக்தர்களின்  தலையில்  அடித்து , திருத்தி ............அவர்களை  ஞான  மார்க்கத்தில் மோகிக்கும்  படி  செய்வதாலும், அத்தகையோருக்கு  தீங்கு  விளைவிப்பவர்களை  பேச்சு , செயல்களை   ஸ்தம்பிக்க  செய்கிறாள்.

              ஸ்ரீ  ஹரியின்  ஒப்புயர்வற்ற  வராஹ  வடிவத்தை  எடுத்துக்கொண்ட சக்தியே,  இங்கு  அன்னைக்கு  சேவை  செய்கிறாள்  என  " தேவீ   மஹாத்மியம் " - 8 வது   அத்யாயம்  ' ரக்தபீஜ  வதம் ' வரும்  19 - ஸ்லோகம்,

 " யஞ்ஜஞாவாராஹ -மதுலம்   ரூபம்   யா  பிப்ரதோ     ஹரே :
    சக்தி:  ஸாப்யாயயெள    தத்ர   வாராஹீம்     பிப்ரதீம்  தனும் "

                       பூமியில்  விளையும்  பொருள்களுக்கும் , உழவர்களுக்கும்  மிகுந்த  நன்மையை  அளிப்பவள்.
எதிர்மறை  சக்திகளை  விலகி  ஓட  வைப்பவள். போரில்   வெற்றிகளை   கொடுக்கும்  சக்தியாக  விளங்குவதால்   அந்நாட்களில்   இவ்வன்னயை வணங்கியே  போர்களங்களுக்கு   சென்றுள்ளனர்.

                   ஸ்ரீ  வாராஹி உபாசனை  எதிரிகளை  வெல்வதற்குப்  பயன்படும்.

               விருட்சங்களை,  விதைகளையும்  காப்பவள். விளை நிலங்களில்   வாராஹி  மந்திரத்தை சொல்லியபடி  வலம்  வந்தால்  அந்த விளைநிலங்கள்  மற்றும் விளையும்  பயிர்கள் என அனைத்தும் ,.......அன்னை  வாராஹியால் காப்பிடப்படுமாம். 

             தஞ்சையின்  சில  பகுதிகளும் , ஆந்திராவின்  சில பகுதிகளிலும் ( ஸ்ரீ  வித்யா  உபாசனை  நிகழ்ந்த  இடங்களில் ) இரண்டு  ,  மூன்று  தலைமுறைக்கு  முன்பு வரை   இந்த  பழக்கம்  நடைமுறையில்  இருந்துள்ளது.  அல்லது,

              ஸ்ரீ வாராஹி உபாசனையில்  உள்ளவர்களை  தமது  தோட்டங்களுக்கு  அழைத்து  வந்து, அவர்களின்  மந்திர  ஜெபத்தோடு  கூடிய  அதிர்வுகளை  தமது  விளைநிலங்கள்  பெற , மிகக் கொடிய நோய்கள்  பயிர்களைத் தாக்காமல்  இருக்க,  தமது  வயல்களை  ஜெபத்தோடு   சுற்றி  வர  வேண்டியும் ,..........அவர்களை  மிகுந்த  மரியாதையுடன்  போற்றி  பராமரித்துள்ளார்கள்.

        




             நம்முடைய  உடலின்  எலும்பு ,  மற்றும் இரத்தம்,  மஜ்ஜைகளின்  கட்டுப்பாடு இவ்வன்னையின்   ஆதிக்கத்திலேயே  உள்ளது. மேலும்  இவ்வன்னையை  வழிபடுபவர்களுக்கு   எதிரிகளின்   தொந்தரவுகள்   நீங்கிவிடும்.
     
                இராஜராஜ  சோழன்   வாராஹியை  வழிபட்ட  பின்புதான்  போருக்கும்  செல்வாராம். இதற்கு  சாட்சியாக  இன்றும் தஞ்சை  பெரிய  கோவிலில் உள்ளே  நுழைந்தவுடன்  முதலிலேயே  தனிச்  சன்னிதி  உள்ளது. ஸ்ரீ  வாராஹியை  வழிபட்ட   பின்புதான்  மற்ற  அனைத்து  மூர்த்தங்களுக்கும்  வழிபாடு  நிகழ்த்தப்  படுகிறது.

  


             ஸ்ரீ  வித்யா  பூஜையில்   வாராஹிக்கு  மிகச்  சிறப்பானதொரு   தர்ப்பணம் ,  யந்திர  பூஜை , வழிபாடுகள்   மற்றும்  கொடிய  நோய்கள்  நீங்கவும்,  எதிரிகளின்  செயல்கள்பாடுகள்   முடங்கிப்போகவும்  மிகச்  சிறப்பான  ஹோமங்கள்  உள்ளன.  

                  வாராஹியை  ஜபம்  செய்வபவர்கள் ( அதற்குள்ளேயே  லக்ஷ்மி  பீஜம்  இருப்பதால் ) பணத்தட்டுப்பாடு  என்பதே   இராது. நோய்கள் நெருங்காது. எங்கும்  வெற்றி. கூர்மையான  செயல்பாட்டுக்கான  சித்திகள்  பெற்று  இருப்பார்கள்.  மாலை  மற்றும்  இரவுதான்  வாராஹி  வழிபாட்டுக்கு  உரிய  காலம்.




         ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்வது   வழக்குகளில்  மிகச்  சிறப்பான  வெற்றியை  தரும். ஏனெனில்  எதிர்  தரப்புக்கு 
 ( வாக்  ஸ்தம்பனம் ) காரணம்  இன்றி   குழப்பங்கள்  ஏற்படும். இதனை  எனது  சகோதரியின்  வழக்கில்  கண்கூடாகக்  கண்டேன்.
                பணபலம்,  மற்றும் அதிகார  பலத்தினால்  ஆட்டம்  போட்ட  எமது  சகோதரியின்  எதிர்தரப்பு ,  கடைசியில்  கையூட்டு  பெற்ற   ஜட்ஜ்ம்   மாற்றப்பட்டு , நேர்மையானவர்  நியமிக்கப்பட்டு
 ( சகோதரியின்  வக்கீலே  எதிர்தரப்புகளோடு   கைகோர்த்து  செயல்பட்டது, சகோதரிக்கும்  தெரியாது ) வழக்கு  வெற்றிக்கு  செல்லும்  முன்பே  எதிரி  சமாதானத்திற்கு  தானே  வந்தான்.

             ஒரு  கட்டத்தில்  வழக்கின்  போக்கினை  அறிந்து,  சகோதரிக்கு  எதிராக  செயல்பட்ட  அவரது  வக்கீலை,  பேச விடாமல் செய்து ( அங்கும்  வாக்   ஸ்தம்பனம் )  உண்மையாக , நேர்மையாக  அவரே  வழக்கினை  கையாண்டு  உண்மையான  நீதியை  வழங்கினார். அந்த  காலகட்டங்கள்  அனைத்தும்,  சகோதரி  கோர்ட் செயல்பாடுகள்  முழுதும்  வாராஹி  மந்திரத்தை  ஜபம்  செய்த  படியே  இருப்பார்.




               தகுந்த   குரு  மூலம்    தீட்ஷை    பெற்று  ஜெபிக்கவும். ஸ்ரீ  வாராஹி  மந்திரத்தை  பொருள்  உணர்ந்து  சொல்ல  ( சொல்லிய  பாட்டின் பொருள்  உணர்ந்து  சொல்லுவார் ......செல்வர் , சிவபுரத்தின் உள்ளார் ............) கீழ்க்கண்ட  லிங்கில்  பொருளும்,  பயன்களும்  உள்ளன.











                

Monday, September 26, 2016

காசி யாத்திரை - காணொளி

காசி  யாத்திரை  - காணொளி -2014:

                இறைவனின்   கருணையால்  மிகுந்த  துக்ககங்கள்   சூழ்ந்த  நிலையில் , அந்த ஒன்றே  காசிக்கும் , புத்த  கயா , அலகாபாத்  திரிவேணி  சங்கமம்  என்றும்   பல்வேறு  இடங்களுக்கும்  அருளே  அழைத்து சென்றது. ஏற்கனவே  விஸ்வநாதரின்  எல்லையற்ற  கருணையை  காசியில்  அனுபவித்ததை .......

 http://buminathan-vazhkhaipathivugal.blogspot.in/2014/09/blog-post_30.html  
  
                       மேற்கண்ட   பதிவில்  அளித்திருந்தோம் .
இதோ  இப்போது  காசி யாத்திரையின்  காணொளி  காட்சியினை  வெளியிடுகிறோம்.

காசி  யாத்திரை  - பாகம் -1:



https://www.youtube.com/watch?v=atSQHwGHrGI


காசி  யாத்திரை  - பாகம் -2:




https://www.youtube.com/watch?v=qtxm_qmebro


காசி  யாத்திரை  - பாகம் -3:




https://www.youtube.com/watch?v=rFfLy8O_Zyg







காசி  யாத்திரை  - பாகம் - 4:









https://www.youtube.com/watch?v=MRW2EkZTBjo






                                                                ஓம்  தத்  சத்:
                                               

Saturday, September 24, 2016

ஷோடசி

ஷோடசியும் - ஸ்ரீ ராமகிருஷ்ணரும் :
     


             " எத்தனையோ  தெய்வ  வடிவங்களின்  தரிசனங்களைக்  கண்டிருக்கிறேன். ஆனால்  ஷோடசி  தேவியின்  அழகிற்கு  ஈடுசொல்லமுடியாது. பேரன்பு , அழகு , காமம் 
( விருப்பம் ) என்ற  சக்திகளின் முதல் வடிவம். ஒன்றேயாகத்  தனித்திருந்த  பரம்பொருளின் , 
" பலவாக நிறைந்த "  சக்தியின்  வடிவம். "  
                         - ஸ்ரீ ராமகிருஷ்ணர்  ஷோடசி  தரிசனத்தை  மேற்கண்டவாறு  கூறியுள்ளார். 




         ஸ்ரீ  அபிராமி  பட்டரும், 
"ஒன்றாய்  அரும்பி, பலவாய்  விரிந்து, இவ்வுலகெங்குமாய்  நின்றாள்,  
அனைத்தையும்  நீங்கி  நிற்பாள் - எந்தன்  நெஞ்சினுள்ளே ........
பொன்றாது  புரிகின்றவா !இப்பொருள்  அறிவார் , அன்று  ஆலிலையில்  துயின்ற  பெம்மானும், 
என்  ஐயனுமே."  
                         இதே  அனுபவத்தையே  கூறுகிறார். இவ்வன்னையை  வழிபடுகின்ற  முறை   ஸ்ரீ வித்யை  தென்னாட்டில்  மிகவும்  பிரபலம். 



                 தென்னாட்டில்  இவளையே  லலிதா திரிபுர சுந்தரி, ஸ்ரீ  ராஜ ராஜேஸ்வரி , ஸ்ரீ  சக்ர  நாயகி, காமாக்ஷி ,  காமகோடி , லலிதாம்பிகை  என்றும்  வழிபடப்படுகிறது. லலிதா - லாலனம் - தனக்கு  மேலாக ஒருவரும்  இல்லாதவள் என்று  அர்த்தம். பயம் , பதட்டம் இல்லாததனால் எப்போதும்  ஆனந்த  உல்லாசமாக , ஆனந்தத்தின்  வடிவாக, தானே  பரம்பொருளாக விளங்குவள்  என்று  அர்த்தம்.

     நமது  உடலில் ' ஸஹஸ்ராரம் '  என்னும்  சக்ரமாக அன்னை  திரிபுர  சுந்தரி  விளங்குகிறாள். இது உச்சந்தலையில்  உள்ளது. ஸஹஸ்ராரம் - 1000 - தாமரை தளங்களுடன் ( தளங்கள்  - எல்லா  அக்ஷரங்கள் ) தூய .....அன்பு , தையை , சிந்தனை , அனைத்தும்  நிறைந்த ஆன்ம  சிந்தனையாக  
' மேதை ' - நாடி  திறந்து , அதனால்  ஆத்ம தேஜஸ்  பெறுவதால் .......இங்கு  மனம்  கொண்டு  விளக்க  இயலாத  பேரமைதி  பெறுகிறது. இந்த  அமுத தாரை  உடல் முழுதும்  பரவி ,..........உடலின் ஒவ்வொரு  செல்லும்   பேரானந்தத்தில் ,பிரம்மானந்தத்தில்  மிதக்கும்.

"ஸஹஸ்ரதல  பத்மஸ்தா ஸர்வ  வர்ணோப                                                                     சோபிதா "  




                 மகான்கள்   ஸ்ரீ  ஆதி  சங்கரர் ,  ஸ்ரீ  சேஷாத்திரி , ஸ்ரீ  அபிராமி  பட்டர் ,  பாஸ்கர ராயப்பட்டர், ஸ்ரீ  காஞ்சி  மஹா  பெரியவா, சமீபத்தில்  திரு. பாலகுமாரன்    போன்றோர்  ஸ்ரீ வித்யா வழிபாட்டில்  அன்னையை  அடைந்தவர்கள். ஸ்ரீ லலிதையே - ஸ்ரீ  ஷோடசி  என்று  வடநாட்டில்  வழிபடப்படுகிறது.



              இந்த  ஸ்ரீ  வித்யா  வழிபாடு  முறைப்படி  குரு ஒருவர்  மூலமாக  எடுத்துக்கொண்டு  வழிபடுதலே  சிறப்பு.  சிவமும் , சக்தியும்  ஒன்றாகவே  வழிபட வேண்டிய  ஒரு  வழிபாடு. அவ்வாறு  வழிபாடா  விட்டால்  ஸ்ரீ  வித்யை  பலனளிப்பதில்லை  என்று  தந்திர  சாஸ்திரங்களும்  கூறுகின்றன. ஏனெனில் பத்து சக்திகளுடன்  கூடி ( தச  மகா  வித்யா )  அன்னை  ஷோடசியாகிய  லலிதாதேவி  சிவபெருமானை  விட்டு பிரியாதவளாகவே  இருக்கிறாள். ( சிவ  சக்தி  ஐக்கிய   ரூபிண்யை  நமஹ )

ஸ்ரீ  லலிதா  திரிபுர  சுந்தரி  -  பஞ்சதஸி :

                   1.   "  உயிரை  கொடுத்தாலும்  கொடு ........பஞ்சதஸியை  கொடுக்காதே! " - இதிலிருந்தே  தெரியும் , இதன்  பெருமையை  சொல்லி  அளவிட முடியாது.

                   2.   ஸ்ரீ வித்யா  என்னும்  ' ஷோடசாக்ஷரீ '  மந்திரமானது, மந்திரங்களிலேயே  மிகவும்  தலை சிறந்தது. அதனால்  இதனை   ' மந்த்ர  நாயிகா ' (மந்திரங்களின்  தலைவி )  என்பர்.
                                                                                                        - மந்த்ர  மஹோததி.

                 3.  எவனுக்கு  இது  கடைசி  ஜென்மாவோ  அல்லது  எவன்  சங்கரனின்  அம்சமாக பிறந்துள்ளானோ  அவனுக்கே  இவளது  மந்திரத்தை ஜபிக்கும் பேறு  கிடைக்கும்.
                                                                    -   ஸ்ரீ லலிதா  த்ரிசதீ

                         3.  லலிதா  திரிபுர சுந்தரியை  உபாசிப்பவனுக்கு  இனி  மறு பிறவி  என்பதே  இல்லை.                                         
                                               - ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம்
                                                             -  ஸ்ரீ  ராம கிருஷ்ண  பரமஹம்ஸர்

                             
                         




               அசலம் - அசையாது - ஆதாரமாயிருப்பது  எல்லாம்  சிவம்.
               அசைவிப்பது - இயங்கிக்கொண்டே  இருப்பது  எல்லாம்  சக்தி. ( அணுவின்  அமைப்பும்  இதுதானே ! )

                    இங்கு  சக்தி  வழிபாடு  என்ற  சாக்தத்தில்  பிரபஞ்சத்தில்  செயல்படும்  மகா  சக்திகளை   பத்தாக  பிரிகின்றன. இந்த  பத்து சக்திகளை  முறைப்படி  வழிபடுவதன்  மூலம்  ஒன்றே  ஆன இறைவனை  ( சொரூபத்தை ) அடையலாம். அதற்கான  ஒரு  முழுமையான  பாதையே  ஸ்ரீ வித்யை. 




                இதில்  ஸ்ரீ சக்ர  பூஜை  மற்றும்   ஸ்ரீ  மகா  மேரு  பூஜை  என்பது  மிக  உயர்ந்த  வழிபாடு  ஆகும்.

                மந்த்ர  சாஸ்திரங்களின்  மூலம்  நமது  உடல்,  ஸ்ரீ மகா  மேரு , அம்பாளின்  விக்ரஹம்   மற்றும்  இந்த  பிரபஞ்சம்  இணைந்து  அனைத்தும்  ஒன்றாகும்  முறையாதலால்  ஸ்ரீ  வித்யை  - ஸ்ரீ ப்ரம்ம  வித்யை என்றும்  ஆன்மாவின்  அகண்ட  ஆனந்த  நிலையைத்  தருவதால்  இது  ஸ்ரீ ஆத்ம  வித்யை  என்றும்  அழைக்கப்படுகிறது.

               அகண்டகாரமான  பிரபஞ்ச  சக்தியினை  இந்த  மகா  மேரு  பூஜையின்  மூலம்  முறைப்படி  வழிபாடு  செய்யச்  செய்ய,  மிகப்  பரவசமான  ஆனந்தத்தினை  அனுபவித்து  உள்ளே  அடங்கும். பற்பலவாய்  விகசித்து  பொங்கிப்    பெருகி  ததும்பும். 

                 ( வேலைநிலம்  ஏழும் , பருவரை  எட்டும்,  எட்டாமல்   இரவு பகல்   சூழும்  சுடர்க்கு  நடுவே, கிடந்தது  சுடர்கின்றதே !    - அபிராமி   அந்தாதி! )



 Image result for abirami pattar

ஸ்ரீ மகா  மேரு :




                தச  மகா  வித்யா  பற்றி  இன்னொரு  பதிவில்  அவனருளால்  அவன்  தாள்  வணங்கி  காணலாம். 

ஸ்ரீ சக்ரம் :