Friday, February 5, 2010

kathai kathaiyam karanamam............................

 கதை கதையாம்.........காரணமாம்........


  எந்த ஒரு கதைக்குள்ளும் ஒரு செய்தி இருக்கும். அதில் சொல்லப்படும் நீதி நெறி  நமக்கு கண்டிப்பாக என்றேனும் ஒருநாள் பயன்தரும். அதை போன்ற ஒரு கதையே இதுவும்...........
           
    முன்பொருநாள் காசி ஷேத்ரத்தில் , ராம்குகன் என்றொரு சாது வசித்து வந்தார். மிகவும் அன்பானவர், பொறுமையே  வடிவானவர், சதா இறை நாம ஸ்மரணை  கொண்டவராக இருந்தார். இந்த நல்லவரை பலபேரும் அணுகி வாழ்கையை செம்மை ஆக்கி கொண்டனர்.அவர் மிகுந்த நல்லவர் ஆனதால் அவரிடத்து பொறமை கொண்டவரும் இருப்பார்களே.........!
                அத்தகையோரில்  ஒருவனாக  சந்தோஷ் என்பவனும் இருந்தான். அவனுக்கு பலர் முன்னிலையில் ராம்குகனை அவமானபடுத்த வேண்டும் என்று ஒரு...எண்ணம் இருந்தது. ஒருநாள்...ராம்குகன் கங்கையில் நீராடி எழுந்து......வழியினில் வரும்பொழுது சந்தோஷ்......அவர் மீது எச்சிலை காரி உமிழ்ந்தான்.
             ராம்குகன் மீது எச்சில் பட்டாலும்........அவர் திரும்பி கூட .........யார் உமிழ்ந்தது  என்றோ......எவர் செய்தது? ......என்றோ.......திரும்பி கூட பார்க்காமல் ........மீண்டும் கங்கையில் நீராட........சென்றார்.
             ராம்குகன் மீண்டும் நீராடி மேலே வரும்பொழுது.........மீண்டும் எச்சில் உமிழப்பட்டது......குசந்தைகளே....சற்றே இங்கு கவனியுங்கள்........ராம்குகன் ஒருமுறை கூட......சந்தோஷிடம் ....சண்டையிடவில்லை.......ஏன்? நிமிர்ந்தும்.....யார்? என்றும் பார்க்கவில்லை............உடனே.....திரும்பி கங்கைக்கு சென்று.......குளித்து கரை ஏற .....மீண்டும் சந்தோஷ்........காரி  உமிழ ..........ஒருமுறை ....இருமுறை......அல்ல.....பத்து, இருபது முறை ......அல்ல .......ஐம்பது, அறுபது முறை அல்ல.........தொண்ணுற்று எட்டுமுறையும்.......இவ்வாறே நடந்தது.......தொண்ணுற்று ஒன்பது முறையும் காரி ...உமிழ ....ராம்குகன் மீண்டும் கங்கைக்கு திரும்ப..........குளித்து மேலே எழும்பும் பொழுதும்....இறை ஸ்மரணை ( உணர்வு ) கெடாமல்........அவர் வர...........சந்தோஷ்......தன்னுள் எண்ணிக்கொண்ட .படி.......நூறாவது........முறையும் எச்சிலை  உமிழ .........ராம்குகன்.........சலனமே இல்லாமல்.....கங்கைக்கு திரும்ப...........
                 சந்தோஷ்...உள்ளே அகந்தை ( அகங்காரம் )  ஆடி போனது.......இவ்ளோ முறையும் .....இவருக்கு......தீங்கினயே ....செய்தாலும் ...இவர் .கோபிக்காது.....சண்டையிடாது.....யாரென்று கூட ..........பார்க்காது.......தன்னுடைய இறை.....குரு .....உணர்வில்...நிலைகெடாது.........இருக்கிறாரே ! என்று......தன்னுள் ஆடி போனவனாய்...ராம்குகன் திருவடியில் விழுந்து.....கதறி அழ.........
               ராம்குகனோ ......அவனை தூக்கி நிறுத்தி.....அழும் அவனது.......கண்களை ..துடைத்து....." சந்தோஷ்! எதற்காக இந்த அழுகை..!  நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லையே?.....யாம்! கங்கையில் சரியாக......குளிக்காத....காரணத்தினால்.....உங்கள் மூலமாக ...இறைவன் ..மீண்டும், மீண்டும்  குளிக்க வைத்து........சாதாரணமான......... ராம்குகனை..  புனிதமானவனாக மாற்றியவர் நீங்கள்!...அது மட்டுமல்ல......யாருக்கேனும்.. ஒரே நாளில் கங்கையில் நூறு முறை குளிக்கும் புண்ணியம் கிடைக்குமா!......கருணையோடு......அந்த வாய்ப்பினை தந்தவர் நீங்கள்!  என....சந்தோஷை வாரி எடுத்து அன்புடன் அணைத்துக்கொள்ள .......சந்தோஷ்.......கதறி அழுதான்..
    '' ராம்குகா....உன்னை......அவமானப்படுத்தவே! .....அவ்வாறு நடந்தோம்!.......ஆனால்.....நீயோ..நூறுமுறையும்.......எம்மை ஏறெடுத்தும் பாராமல்!.......திட்டாமல்!......பொறுமையுடன்!......மீண்டும் .மீண்டும்  கங்கையில் இறைநாம சிந்தனையுடன்!......எம்முடைய......தீங்கினை....எல்லாம் .....சகித்து கொண்டு!......எம்முடைய ....அகந்தையும்! அழித்துவிட்டாய்!........என........ரம்குகனின்....திருவடியில்!.......அடியற்ற மரம் போல விழுந்து.....நமஸ்கரித்தான்.......சந்தோஷ்".
              பின் ராம்குகனும், சந்தோஷும் நல்ல நண்பர்களாக.....இருந்தார்கள்.
குழந்தைகளே.... சந்தோஷை மாற்றியது....எது?...ராம்குகனுக்கு.......இந்த பொறுமை......சகிப்புணர்வும்....எவ்விதம் கிடைத்தது.?.............சற்றே சிந்திப்போமா!....

No comments:

Post a Comment