Tuesday, October 7, 2014

இன்றைய  பாபாக்களுக்கு  ஒரு  கேள்வி :


          உண்மையான   முனிவர்கள் ,  சாதுக்கள் ,  துறவிகள்  இவர்களை  வணங்குகிறோம் .  ஆனால்  பாபா  என்று  பெயரில்  வைத்துவிட்டு .........ஆடம்பரமாக   ( Ford  endeavour ) காரில்  இன்றைக்கு  பவனி  வந்துகொண்டு எல்லாவிதமான  சகல  சௌரியங்களையும்   அனுபவித்துக்கொண்டு  இருக்கும்     போலி  பாபாக்களே .............

கொஞ்சம்   காஞ்சி  மஹா  பெரியவரையும்   பாருங்கள் !........பகவான்  ரமணரையும்   பாருங்கள் ............

வெளியே  கோமணம்  மட்டும்  கட்டிக்கொண்டு ..........பெண்களின்  முந்தானையில்  கைகளை   துடைத்துக்கொண்டு  .............உன்னை  பார்த்து   உனது   சிஷ்யன்   என்ன  செய்வான் ?  அவன்   முன்னாடி   பெண்களை   மயக்கி   கணவன்   வேண்டாம்  !

நீயே  !  போதும்   என்று   வருகிறாள் !  நல்ல  இருக்குடா  உங்க  பிரம்மச்சரியம்!

நல்ல  குரு !  நல்ல  சிஷ்யன்கள் !

இதுல  குரு   பக்கம்  பக்கமா  புத்தகம்  எழுதி  விற்கிறான் !

உங்களுக்காகத்தான்   அன்றே   பட்டினத்தடிகள்   பாடி  வைத்தார்  போலும் !

பின்னாடி  உங்களைப்   போன்ற   போலி  பாபாக்கள்   வருவார்கள்  என்று ......................


பேய் போல் திரிந்து,
பிணம்போல் கிடந்து,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி,
நரிபோல் உழன்று,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய் போல் இருப்பர் கண்டீர்!
உண்மை ஞானம் தெளிந்தவரே!

மேல  பட்டினத்தார்  சொன்னது  மாதிரி    இப்ப   யாரவது   இருக்காங்களா  என்ன ?
( நமக்கு  தெரிந்த  நண்பர்  ஒருவர் ,  தனது  குரு  என்று  கருதிய  ஒருவனிடம்  தனது  மனைவி ,  குழந்தை ,  வீடு ,  கார் , ...........எல்லாம்  இழந்து   மனம்   பாதிக்கப் பட்டு  ........வேலை  இழந்து ,  யார்  ஆதரவும்  இன்றி  இருக்கின்றார் !

அந்த  குருவின்  செப்படி  வித்தையில் ( வாய்  ஜாலம் ) ..........இந்த  சிஷ்யரின்  நம்பிக்கை  சத்தியமாக   இருந்தது ...நாங்கள்  எவ்வளவோ    சொல்லியும் ......இந்த   குரு  ....குரு  என்ற  போர்வையில்   ஏமாற்றுகிறான்   என்று  சொல்லியும் ,  அவரது  குரு  நம்பிக்கை  அவ்வளவு  உறுதியாக   இருந்தது .

ஆனால் , இன்று   அவர்   எல்லாம்  இழந்து   அவர்  தெருவில் ............அவர்பால்  அன்பு  கொண்ட  சிலரின்   ஆதரவில் ..........................

உண்மையாக  அவனை  நம்பி  இவர்  இழந்தது  எவ்வளவு  சத்தியமோ ......அவ்வளவு   சத்தியமாக   அவரது  மனைவியும்  ( இவள்  ஒரு  ஆசிரியை  கூட )....அந்த  குருவும் ,  அந்த  பிரம்மச்சாரியும் ,  அதற்கு  துணை  போனவர்களும்  .........மிகுந்த   சத்தியத்தோடு  சொல்வதானால்  கண்டிப்பாக  என்றேனும்   ஒருநாள் ,  ஏதேனும்  ஒரு  பிறவியில்  மிக கடுமையாக , இறைவனால்  தண்டிக்கபட்டு ,  மிகக்  கொடுமையான  வேதனைகளை   அனுபவிப்பார்கள்.

இந்த  கோபத்திலேயே  மேற்கண்ட   இந்த  ரௌத்திரமான   பதிவு !


என்ன  சொல்ல ...........நல்லவர்கள்  தீமை  நினைக்க  கூடாதே ! யாமோ  நல்லவனில்லை ,  ஆனால்   தொடர்ந்து  நல்லவனாக  இருக்க  வேண்டும்   என்ற  விருப்பம்  உள்ளதே !

பிழைத்துப்  போகட்டும் !............இந்த   போலி குருவும்,  அவரது  மனைவியும் , அந்த  பிரம்மச்சாரியும் ............யாரும்   துன்பப்பட  வேண்டாம் !

இறைவா !  அனைத்தும்  உனது   அருள்  விளையாட்டே !

No comments:

Post a Comment