Friday, March 28, 2014

மஹா பெரியவரின்  அருள்மொழி



எந்த வீட்டில், யார் இறக்கும் தருவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.


             குழந்தைகளே !  நாம்  அவர்களுக்காக   மரணத்தருவாயில் இருப்போருக்கு  நாம்  இதனை  அவர்கள் வீட்டிற்கு  சென்றோ.........அல்லது  செல்ல முடியாவிட்டால் ...... நமது  வீட்டில்  அமர்ந்தோ........ ராம  நாமாவை.....அந்த  உயிர் பிரியும் தருவாயில் உள்ள  ஜீவாத்மாவுக்காக   இதனை  செய்யலாமே!


கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மட்டுமே, மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லாவிடில் மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.


நன்றி : balhanuman.wordpress.com

No comments:

Post a Comment