Wednesday, March 19, 2014

பகைவனுக்கும்  அருள்வாய்  நன்னெஞ்சே!

அது   1857 பிரிட்டிஷார்  ஆட்சி செய்த  காலம். சிப்பாய்கள் எல்லாம்  தமது  எதிர்ப்பை  வெளிப்படுத்திக்கொண்டு  இருந்தனர். இரும்புக்கரம்  கொண்டு புரட்சியினை  அரசாங்கம்  அடக்கிக்கொண்டு இருந்தது. இதனால்  மக்கள்  சொல்லமுடியாத  துன்பங்கள் அனுபவித்துக்கொண்டு இருந்தனர்.


                               ஒவ்வொரு கிராமமும் பயத்தால் நடுங்கிக்கொண்டு இருந்தன. ராம்நகர்  என்னும்  கிராமத்தை விட்டு மக்கள் எல்லோரும் காலி செய்து  வெளியேறினர்.  அப்போது  அந்த ஊரை நோக்கி  ஒரு சாது வந்துகொண்டு இருந்தார். மக்கள்  அவரை பார்த்து  எச்சரிக்கை செய்தனர், இன்னும்  சிறிது நேரத்தில் பிரிட்டிஷ்  படை வீரர்கள்  வருவார்கள் என்றும் இரக்கமின்றி  கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று விடுவார்கள் என  சாதுவிடம்  கூறப்பட்டது.

              சாதுவோ, எதையும் பொருட்படுத்தாமல்  அந்த ஊரை  நெருங்கினார்.அதே  சமயம்  ஒரு பிரிட்டிஷ் படை வீரன்  அவரை நெருங்கி, தனது  துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால்  குத்தினான். பலமுறை கத்தி  குத்துபட்ட  சாது , கீழே  விழுந்து  மரணத்தை  நெருங்கிக்கொண்டு இருந்தார். அந்த  பிரிட்டிஷ் படை வீரனும்,  சாது  இறக்கும்  தருவாயில் இருப்பதை  உறுதி செய்ய , அவருருகில்  குனிந்து பார்த்தான்.


           இப்போது  சாது  கடைசி மூச்சினை  இழுத்து விட,  அந்த  பிரிட்டிஷ்  படை வீரனை பார்த்து........." (இறைவனே!)  அவனே ,,,,,,,,நீ!"  என்று   உயிரினை  விட்டார்.

     குழந்தைகளே !  நாம்  கவனிக்கவேண்டியது..........கடைசி  மூச்சு ........உயிர் பிரியும் நேரம் .........வேதனை..........ஆனாலும்..........தான்  உயிர் விட  காரணமானவனிடமும் ..........இறைவனையே   அந்த  சாது கண்டார். எவ்வளவு  அற்புதமான  பார்வை,,,,,,,,,இறைவனை   உணர்ந்த   தன்மை!














No comments:

Post a Comment