Thursday, March 13, 2014

உலகமே  கடவுளின் வடிவம் 

     கீர்த்திவாசன்  என்பவர் நற்பண்புகளின்  வடிவமாக இருந்தார். அவருக்கு  நிலையானது எது?  இந்த  உலகின்  தன்மை  என்ன?  துயரமற்று  இருப்பது  சாத்தியமா ?  போன்ற கேள்விகள்  எழுந்தன. இவற்றுக்கு  விடை காண  அருகிலிருக்கும்  காடுகளுக்கு சென்றார். அங்குள்ள  ஒரு குகையினில்  அமர்ந்து  " ஓம்  ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம் "  என்று  இடையறாது  நாம ஸ்மரணம்  செய்துவந்தார் .



       இந்த  நிலையில் அவருக்கு  கடவுளின்  திருக்காட்சி  கிடைத்தது. அப்போது  இந்த உலகில் உள்ள எல்லா பொருள்களும், உயிரினகளும்  கடவுளின்  தன்மையை  கொண்டுள்ளதாக  உணர்த்தப்பட்டார்.


       இந்த பேருணர்வுடன்  திரும்பி  தமது இருப்பிடம் வந்தார். இருப்பதெல்லாம் கடவுளின் வடிவமே  என்ற உறுதி ஏற்பட்டவுடன்  அனைத்து  உயிரினகள்  மற்றும்  உயிரற்ற  பொருட்களும்  கடவுளின்  தன்மை கொண்டதாக  அறிந்தவுடன்  அவருக்கு  அன்பும், அருளும்  நிறைந்தவராக .........எப்போதும்  இறை உணர்வுடன்  வாழ்ந்து  தம்மை  நெருங்கி வந்தவர்களையும்   அமைதியும், அருளும்  கொண்டவர்களாக 
அன்பு  நிறைந்தவர்களாக  மாற்றியமைத்தார்.



      ஆம், குழந்தைகளே!  எல்லாமும் இறைவனே  என்று உணரும் போது , அன்பும்...  சேவையும்  கொண்டவர்களாக  மாறிவிடுவோம். நமது  பார்வையை  சற்றே மாற்றி  பார்த்தல் போதும்....இனி  பார்வையை சற்றே  மாற்றி நம் முன் நிற்பது எல்லாம் இறைவன் உருகொண்ட  உருவமே ........என பார்ப்போமா ........................ 

No comments:

Post a Comment