Friday, March 14, 2014

சாதுக்கள் - எதிலும்  நன்மையே செய்வர்.

    ஒரு ஊரில்  ஒரு சாது  துணிகளை தைப்பதன்  மூலம்  தனது உணவுக்கான பணத்தினை பெற்று வாழ்ந்து  வந்தார். ஒரு துணி வியாபாரியும்  அவரிடமே  துணிகளை  தைக்க தந்து, திரும்பப்பெற்று தனது வியாபாரத்தை நடத்தி வந்தார்.  அந்த வியாபாரி  சாதுக்கு  கூலியாக  பணத்தினை  கொடுக்கும் போது  செல்லாத ரூபாய் நோட்டுக்களை  கூலியாக  கொடுப்பது வழக்கம்.  சாதுவும்  எதுவும் கூறாமல்  அந்த கிழிந்த, செல்லாத  ரூபாய் நோட்டுகளை பெற்றுகொள்வார்.




        ஒருநாள்  கடையினை  வேலை செய்யும்  சிறுவனை  பார்க்கசொல்லிவிட்டு  சாது  வெளிஊருக்கு  சென்றுவிட்டார். வழக்கம் போல கூலியினை  கொடுக்க  வந்த  வியாபாரியும்  செல்லாத,  கிழிந்த  நோட்டுக்களை கொடுக்க  கடைச்சிறுவன்  " இவை எல்லாம் செல்லாத, கிழிந்த நோட்டுக்கள். இவற்றுக்கு பதிலாக  வேறு நோட்டுகளை தாருங்கள்." என்று  கூறிக்கொண்டு இருக்கும் போதே  சாதுவும்  வந்துவிட்டார்.

          சாது  நடந்ததை அறிந்தார். வியாபாரியை  அனுப்பிவிட்டு  பின்பு  கடை சிறுவனிடம்,"  கண்ணா !  அவர்  ஒவ்வொரு முறையும்  வேண்டுமென்றே  கிழிந்த, செல்லாத நோட்டுகளை தருவதை  வாங்கிவிடுவேன். அவற்றை எல்லாம்  குழிதோண்டி  புதைத்துவிடுவேன்.  நாம்  அவற்றை  வாங்கவிடில்  வேறு  நபர்களை  அவர்  ஏமாற்றுவார். எனவே  அவற்றை   நாமே  வாங்கி  புதைத்துவிடுவது  மற்றவருக்கும்  நல்லது."  என்றார்.

         குழந்தைகளே !  சாதுக்கள்  எப்போதும்  சமுதாயத்துக்கு  நன்மையே  சிந்திப்பர் , நன்மையே  செய்வர்.........நாமும்   இதுபோல  வாழ்தல்  நலம்  அல்லவா !............

No comments:

Post a Comment