Monday, August 25, 2014

பகவான்  நமக்காக  செய்யும்  பிரார்த்தனை :






பரம நின்  பாதம்  பற்றப்  பற்றும்

பரவறிய  அறிய  அரியரிப்  பரமன்

பரம்  உனக்கு  எனவென்  பணியறப்  பணியாய் 

பரித்திடும்  உனக்கு  எது  பாரம் 

பரம நின்  பிரிந்து  இவ்வுலகினைத்  தலையில் 

பற்று (மற்று )  யான்  பெற்றது  போதும் 

பரமனாம்  அருணாச்சலா !  எனை  இனி  உன் 

பதத்தினின்று   ஒதுக்குறப்   பாரேன் .

                                    அருணாச்சலப்  பதிகம்.


பொருள்:

பரம்பொருளாகிய  அருணாச்சலா!  இந்த  உலக  பந்தங்களாகிய  பற்றுக்களை    ஒழிப்பதற்கு .........உனது   திருவடிகளில்  சரணடைந்து   பற்றிக்கொள்ளவேண்டும்  என்ற .......  மெய்யறிவு, .... விவேகம்   இல்லாத  அறிவீலிகளில்..........  யானே   முதன்மையானவன். 
 என்னை   உய்விக்கும் பொறுப்பையும்.......  உன்னுடையதாகவே , நீயே  ஏற்றுக்கொண்டு,.........எனது  செயல்கள்  யாவும்  அறவே    ஓயும்படி  செய்தருள்வாயாக.  

எல்லாவற்றையும்   தாங்கிடும்   உனக்கு.........   எதுதான்   பாரமாகும்?  மதிமயக்கதினால்  உன்னைவிட்டுப்  பிரிந்து .. ....உலக பந்தத்தை ...
 ( நான் ,  எனது ..... ......என்னுடையது   என்னும்) உலகப்பற்றை ....என் தலையில்   தாங்கி ........இதுவரை  சுமந்துகொண்டு   துயருற்று,.....அலைந்தது  திரிந்து ....... அடைந்த  துயரம்    போதும் ..........அருணாச்சலா !  இனிமேலாவது  என்னை   உன்
 திருவடிகளின்   பாதுகாப்பிலிருந்து  விலக்குவதற்கு  நினையாமல்  கருணை  புரிவாயாக !



No comments:

Post a Comment