Saturday, August 23, 2014


திருவாசகம் --------ரமணரின் 

 பாடலுடன் .......

 
கோயில் திருப்பதிகம் 

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;
சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

   உனது  அருளால்  இன்று ...எமது  உள்ளத்தில்   உள்ள  அஞ்ஞான  இருளும்  நீங்கியது   எவ்வாறு  எனில்   சூரியனை  கண்ட  இருள்  விலகுதல்  போல  ...........எமது  உள்ளத்தில்  இருக்கும்  உமது  தன்மையினை  அறிந்ததால்  ( நினைப்பற --எண்ணங்களற்ற இடத்தில்  இருப்பது ... இதைத்தான் .....(உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே!) ....உணர்வே  வடிவமாய் .....அறியும்  மனம்  இறந்ததால் .....அங்கு  இருக்கும்  உணர்வு  வடிவமாகிய....உன்னை  அன்றி  வேறு  எதுவும்  இல்லை .....வெளியிலும்  எல்லா  உயிரினம் ,  பொருட்களும்  இந்த  உணர்வே  வடிவமாய் .....பிரபஞ்சமாய்  இருக்கிறது.

இந்த   உணர்வு  வடிவே  ஆன  சிவத்தை  வெளியில்  காணும்  பொருட்களிலும் ....ஐந்து  புலன்களாலும்  உணர்வதால்  சிவமே!   வெவ்வேறு  குணங்களாய்  விரிந்த  மனமானது  ஒடுங்கி  ....சென்று   சென்று  அணுவாய்   தேய்ந்து , சிவசொரூபத்தில் .....ஆன்மாவில்  கரைதலை   அணு அணுவாய்   என்றும் ........

இந்த  உணர்வு  அன்றி  ஒன்றுமில்லை  என்பதாலேயே .......  உன்னை அன்றி  ஒன்றுமில்லை   என்கிறார்   .....மாணிக்கவாசகர்.
இந்த  உணர்வு  நிலையை  வேறு  யார்  வந்து  அறிவித்து
 ( மொழியால்....வார்த்தைகளால் ) சொல்லமுடியும்.  வேறு  என்ன?  மௌனம்  தான் .

இதை தான்  ரமண மகரிஷியும்  
தலைவ!  நின்  தன்மை  என்ன? என்பாருக்கு  தலை குனி  சிலை என  வைத்தாய் !   என்கிறார். தன்னுடைய  தலைவனின்   தன்மையை  கேட்கும்  உலகத்தவருக்கு  ........உன்னை  பற்றி   எதுவும்  சொல்லமுடியாத   தலையை  குனிந்து  நிற்கும்  பெண்ணாய் .....வைத்தாயே!  என்று  அருணாச்சலத்தை  .......தாம்  பெற்ற  அனுபவத்தை  கூறுகிறார்.

No comments:

Post a Comment