Tuesday, August 26, 2014

பகவான்  ரமணரின்  கருணாமிர்தம்:





ஒருமுறை  விஸ்வநாத ஐய்யர்  பலாகொத்தில்  தங்கியிருந்து  வேந்தாந்த  நூல்களை  பாராயணம்
செய்துகொண்டு  இருந்தார்.  அவர்  சிறந்த  ஆங்கில 
பேராசிரியர்.    தமிழ்  மற்றும் 
சமஸ்கிருதத்தில்  புலமையும், அவற்றினை   நன்கு  கற்றரிந்தவருமாவார். இவர்  பகவானுடன்  மலையில்  உலாவச்  சென்றார். அப்போது  அவருள்   தாம்  படித்த   உபநிஷத்  வார்த்தைகளாக  'ஒருவன்  இந்த  உலகத்தில்  வாழ்ந்துகொண்டே ......உலகத்தை  எப்படி  பார்க்கவேண்டும்....சாதகன்  எப்படி  உலக வாழ்க்கையை  நடத்த  வேண்டும்'  என்பன  ஓடிக்கொண்டு  இருந்தது.

மலையின்  மேலே  ஏறிக்கொண்டு  இருந்தபொழுது  பகவான்  திடீரென  விஸ்வநாதய்யர்  பக்கம்  திரும்பி, ....  " விஸ்வநாதா !  உலகத்தை  பூராவும்   ஒரு  துரும்பா  நினைக்க  தெரியணும். "  பின்னர்  சற்றே  சில அடிகள்  நடந்து.....  நின்று.......   திரும்பி, 
" அதேநேரத்தில .....ஒரு  துரும்புக்கு  கூட  உலகத்துக்கு  கொடுக்கற  மரியாதையைக்  கொடுக்கணும்!" என்று  கூறி நடந்தார் .

இதனுள் .....எவ்வளவு  பெரிய  "மகா வாக்யம்" 
 அடங்கியுள்ளது,   உணர்ந்து  பார்த்தால் நம்மை  எவ்வளவோ  உயர்த்தும்.

மற்றுமொருமுறை,   விஸ்வநாதய்யரிடம்,  அங்கிருந்த  மரம், செடி, கொடிகளை  மற்றும்  கட்டிடங்களையும்  காட்டி, "  இதெல்லாம்  யார்   உருவாக்கினது, அந்த  ஈஸ்வர  சக்தி ......நீயா  உருவாக்கினது ? எல்லாமே  அந்த  அதிசய  சக்தியால  ........ உண்டானது. அதனால  எல்லாத்துக்கும்  மரியாதையை  தரணும்!".....என்றார்.


No comments:

Post a Comment