Tuesday, August 26, 2014

பகவான்   ரமணரின்  கருணாமிர்தம்:




பகவான்  ரமண  மகரிஷியால் ' நாகு' என்று  செல்லமாக  அழைக்கப்பட்ட  நாகலட்சுமி அம்மாள் 
ஒரு முறை  சமையலறையில்  சேவையில்  இருந்தபொழுது , பகவான்  சமையலறைக்கு   விஜயம் செய்தார். 

 அப்பொழுதெல்லாம் அண்ணாமலை  டவுனில்  'நாகு '  தங்கியிருந்து அதிகாலை  5 மணிக்கு சமையல்  செய்ய  வந்துவிடுவார்.  மீண்டும்  மாலை  5 மணிக்கு  சென்று விடுவார்.  பகல்  பொழுதில்  சமையல்  அறையில்  சேவையில்  இருப்பதால் அவர்களுக்கு  பகவானுடன்  பேசவோ ....உபதேசங்களை  கேட்டு மகிழவோ  முடியாது. இதை  அறிந்த கருணைக்கடலான  பகவான்  மதியம்  12 லிருந்து  1 மணி வரை  சமையலறையில் ,  சமையல்  குறிப்புகள்  மற்றும் அவர்களுக்கு  ஏதோ ஒரு  வகையில்  உதவி   அவர்களுடன்  இருப்பார். அப்படிதான்   ஒருமுறை  வந்தபோது, 'நாகு' வை  அழைத்து,

' நாகு ' இமையமலையில்  தவமியற்றினாலும், சிவத்தை  உணர்ந்த  மகான்கள், அண்ணாமலை  பிரதக்ஷினத்தின்  மேல்  உள்ள  ஈடுபாட்டால் இங்கு  வருவர். அவர்கள்   தங்களை  சாதாரணமாக  மானிடர்கள்  அடையாளம்  கண்டுகொள்ள  முடியாதபடி  தங்களை  பைத்தியம்  போலவும்,  பிச்சைக்காரர்கள்  போலவும்  மறைத்து  வருவர். உன் வீட்டின்  முன்னே  யாரேனும்  வந்து  கைத்தட்டி  யாசகம்  கேட்டால்,  இல்லையெனாமல்   கையிலுள்ளதை  கொடுத்து  விடு! அவர்களை  வெறும்  கையுடன்  அனுப்பிவிடாதே !" என்றார்   பகவான்  ரமணர். இந்த  அன்னையும்  அன்றிலிருந்து  தனது  கடைசி  காலம்  வரை  அவ்வாறே  நடந்து .........' கொடுப்பவரும்  ஆன்மாவே ...பெறுபவரும்   ஆன்மாவே.... (பிறருக்கு  ஒருவன்  கொடுப்பதெல்லாம்  ஒருவன்  தனக்கே  கொடுத்துக்கொள்கிறான்) ......என்று   தாம்  உணர்ந்ததாகவும் ......  இதனால்  தாம் பலப்பல  சாதுக்களின்  தரிசனமும் ,  ஆசிகளையும்  பெற்றதாக  கூறியுள்ளார்.




No comments:

Post a Comment