Thursday, July 10, 2014

அதர்மத்தின்   பலனே  கடுமையான  நோய்கள் : --- பெரியவா   கருணையால்  மாறியது.

1888473_616442668409685_526532623_n


 அவருக்கு  இரண்டு சிறுநீரகங்களும்  செயலிழந்த நிலையில் , மருத்துவர்களும்  கைவிட்ட நிலையில்  மஹா பெரியவரை  பார்க்க  வந்து  தனது  நிலைமையை  சொல்லி கதறினார். பொதுவாக  மஹா  முனிவரும்  இதுபோன்றுநோயினால்  அவதிப்பட்டு, அழுது கதறுவோரிடம்  கருணையும்,  ஆறுதலாகவும்  பேசுவார். ஆனால்  அன்று  கடினமாகவும், கண்டிப்புடனும்  கூடிய  வார்த்தைகளை  பேசினார்.

" மக்கள்  தைரியமாக , தெரிந்தே  பாவங்களை  செய்து விட்டு, அதன்  விளைவுகளை 
 துன்பங்களாக  அனுபவிக்கும்போது  மட்டும்  இங்கு  வந்து  கதறுகின்றனர்.  செய்யும் போது  விளைவுகளை  அறிவதில்லை ...........பின்பு  இங்கு வந்து  கதறினால்  நாம்  என்ன  செய்வது ?"  என்றார்  முனிவர்.

எத்தகைய  நோய்களையும்  தனது கருணையால்  துடைப்பவர் , இன்று  ஏன்  இவ்வாறு  கூறுகிறார்  என அங்கு இருந்த  அனைவருக்கும்  ஆச்சர்யம் !

சிறிது  நேரம் சென்றவுடன்  பெரியவர் பின்வருமாறு பேசினார்   ......" இந்த  மனிதனின்  முன்னோர்கள்  தர்ம காரியத்திற்காக  டிரஸ்ட்  அமைத்து  தர்மங்கள் செய்தனர். நல்ல  வளமான  நிலங்களை  அந்த  டிரஸ்ட்க்கு  விட்டு சென்றனர். அங்கு  தண்ணீர் பந்தல்கள்  அமைத்து  தர்மங்கள்  செய்தனர். இவர்   அந்த  தர்மங்களை  செய்யாமலும்,  அழித்தும்  அந்த நிலத்தை  விற்று  தனது  சுயநலத்துக்கு  பயன்படுத்தியுள்ளார். "

இதை கேட்ட  அந்த   சிறுநீரக  கோளாறு  அவதியில்  துடித்த  மனிதர்  வெட்கத்திலும், குற்ற உணர்விலும்  நெளிந்தார். "  பெரியவா !  மன்னிக்கணும், இனிமேல்   அந்த  தர்மங்களை  விடாமல் பண்ணுகிறேன்  என்றும்,   தனது  ஊரில் ,  முன்னோர்களின்  தண்ணீர் பந்தலை  மீண்டும்  நடத்துகிறேன் "  என்றும்  வாக்கு  கொடுத்தார்.

பெரியவரின்  கருணையுடனும், குரலின்  குளிர்மையும்   அங்கு  பொங்கியது........." வசம்பு   பற்றி  கேள்விபற்றிகியோ!  சித்த மருத்துவ  கடைகளில்  கிடைக்கும்.  அதை  வாங்கி  நன்னா  அரைச்சு  அடிவைற்றில்  தொடர்ந்து   கட்டிண்டா  சரியாயிடும்."   என்றது  கருணைகடல். 


அதே  மனிதர்  பத்து  அல்லது  பதினைந்து  நாட்கள்  கழித்து  தரிசனத்துக்கு  வர ........." இப்போ  எல்லாம்  குணமாய்டுதுபோல "  என்றார்    பெரியவா! .......அந்த  மனிதரின்   முகத்தில்  தெரிந்த  புன்னகையை  பார்த்து ...........

நன்றி :- sage of  kanchi

No comments:

Post a Comment