Friday, December 10, 2010

If u have faith.....result will not take time!

நம்பிக்கை  உறுதியானால் காலம்  ஒரு பொருட்டல்ல...!





              கோவர்த்தன் என்ற  ஒரு  விவசாயி திருக்கோவிலூரில்  வாழ்ந்து வந்தார். அவருக்கு சுமார் 65  வயதிற்கு மேல் இருக்கும். இல்லற தர்மங்களை கடைபிடிப்பவர். தினமும்.....காலை  எழுந்ததும்..இறைவனிடத்தில் அன்றாட தினசரிக்கடைமைகளை  ஒப்படைத்து விட்டுத்தான் தனது பணிகளை துவக்குவார். அன்றும் அதுபோல அதிகாலை இறைவனை வணங்கும் போது..............நாரதமுனிவர்....திருவைகுண்டம் செல்லும் வழியில்...கீழே  பார்த்தார்..
                   கோவர்த்தனின் பண்பு நலன்கள்  ....நாரதரை...கீழே இறங்க வைத்து சற்றே பேசி செல்ல வைத்தது. நாரதரும்.....வைகுண்டம் சென்று பகவானை தரிசித்த பின்னர்...
" பிரபு!.வரும் வழியில் ஒரு உத்தம பண்பாளரை  கண்டோம்.!....அவரும் தங்களின் பக்தரே! "  என்றவுடன்.....ஸ்ரீமன் நாராயணனும்." ஒ! கோவர்த்தனனா!.....அவனுக்கு முக்தி கிடைக்க வேண்டுமாயின்.........அவனது வீட்டின் முன்புள்ள அந்த மிக பெரிய ஆலமரத்தின்  இலைகள் யாவும் விழவேண்டும். அப்போதுதான் எமது தரிசனம் கிட்டும்.! என  அவனிடத்தில் சொல்லிவிடு "என்றார்.
                 நாரதரும் ....வழியினில்..கோவர்த்தனனை  பார்த்து..பகவான் கூறியதை ....... .சொன்னார். கோவர்த்தன்னும் ...."  இந்த ஆலமரம் தானே!  ஆஹா!  இதில் உள்ள இலைகள் தானே!......எமக்கு முக்தி கிடைக்கும்!" என்றவுடன்........நாரதருக்கோ  மிகுந்த ஆர்ச்சரியம் உண்டாயிற்று!  " என்னப்பா  சொல்கிறாய் ?  கோவர்த்தனா!.........உனக்கோ ...மிகவும் வயதாயிற்று!...மரணம் மிக அருகில் உள்ளது! இந்த மிக பெரிய ஆலமரத்தில் உள்ள  இலைகளோ..கீழே விழ பல நூறு ஆண்டுகள் ஆகுமே! ....அதுவரை நீயும்....உயிரோடு இருக்க வேண்டுமே!" என  கேட்க..........
                   கோவர்த்தன்னும் ........" நாரதரே!.....பகவானே சொல்லியாயிற்று அல்லவோ !. .இந்த  ஆலமரத்தின்  இலைகள் விழ வேண்டும்! என்று.........பின் வேறு என்ன சிந்தனை?...இந்த ஆலமரத்தின் இலைகள் தானே! கண்டிப்பாக  விழும்! அதுவரை ஸ்ரீமன் நாராயணனை துதித்து இருப்பேன்!" என்று சொல்லிய வினாடியே.......அங்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி கொடுத்தார்.................
                 நாரதருக்கோ மிகுந்த கோபம்!........தன்னிடம் பகவான் சொல்லியது வேறு.....இங்கு நடப்பது வேறு ஒன்று.!.........''பகவனே ! என்ன இது !"  என்றவுடன்.......ஸ்ரீமன் நாராயணனும் ....." நாரதா !  சற்றே  திரும்பி பார்! என்றார். நாரத முனியும் திரும்பி பார்க்க ......அங்கு அவர் கண்ட காட்சியானது.......மரத்திலுள்ள எல்லா இலைகளும் கீழே  விழுந்து கிடந்தன.!....நரதருக்கோ ஒன்றும் புரியவில்லை......மீண்டும் " பகவனே!" என அழைக்கும் முன்பு...........ஸ்ரீமன் நாராயணன்......." அவனது நம்பிக்கை....நாரதா!.....இது எல்லாம் விழும்.! கடவுளின் காட்சி உண்டு! என்ற திடமான!..தீர்க்கமான ......நம்பிக்கை!...........அதுவே.....இயற்கையை செயல்படுத்தியது!" என்று.......கூறினார்.

               குழந்தைகளே ........இங்கு வயோதிகம் முக்கியமில்லை!.....காலம் பொருட்டல்ல!.......திடமான நம்பிக்கை.......வைராக்கியம்!.........இதுவே முக்கியம்.....இது நம்மிடத்தில்.........இருக்குமாயின்........நமது....அன்றாட......வாழ்வு.மிக எளிது !

Thursday, July 8, 2010

If we have truth inside....... the bliss come to us automatically

உள்ளத்தில் உண்மை இருப்பின்.............உண்மையே நம்மை வந்து அடையும்!     
திரு நின்ற ஊரில்.........ராகவன் என்று ஒரு வியாபாரி இருந்தார். சத்தியத்தில் மிகுந்த ஈடுபாடும், உண்மையுடனும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தார். அவருக்கு....லக்ஷ்மி என்று ஒரு மனைவியும் இருந்தார்.  இருவரும்.....சீரிய நற்பண்புகளும்......நல்லொழுக்கமும் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
            இல்லற வாழ்வில் அவர்கள் மனம் கனிந்த நிலையில்.........இறைவனை அடைதல் வேண்டும் என்று ஒரு விருப்பம் அவர்களுக்கு எழுந்தது.எனவே...ஒரு குரு ஒருவரை......நாட அவர்களது மனம் விழைந்தது.! ஒரு நல்ல குருவுக்கு அவர்கள் ஏங்கினார்கள்.......ஒருநாள் இறைவனின் கருணையால்....அவ்வழியே ஒரு திருடன் வந்தான். அவனை அந்த நேரம் காவலர்கள் துரத்தி வந்ததால்.........அங்கிருந்த மரதடியினில் அமர்ந்து..........ஒரு தபஸ்வி போலும் நடிக்க!..... அமர்ந்து விட்டான்.
             அதே நேரம்.....ராகவனும், லக்ஷ்மியும் அங்கு வரவே,,,,,,இது போல ஒரு குருவையே தேடினோம்!........இறைவனின் நினைவில் இவர் தியானத்தில் உள்ளார்.! இவரே நமது குரு என முடிவு செய்து.........அவரது திருவடியினில் நமஸ்கரித்து எழவே .........அந்த திருடனான போலி குருவும்......தன்னுள் மகிழ்ந்து..."ஓஓஹோ! நம்மை உண்மையில் ஒரு குருவென நினைத்து விட்டார்கள்..இவர்களை ஏமாற்றி இவர்களது உடமைகளை பறித்து விட வேண்டும்"...என  முடிவு செய்தான்......!
      குழந்தைகளே !  நன்கு கவனியுங்கள்...........திருடனின்..!  எண்ணம் ஏமாற்றுதல்!  ஆனால் இவர்களது தூய்மையான எண்ணமோ.........இவரே நமது குரு!...இறைவனை காட்டுபவர்! ........என்ற முழுமையான நம்பிக்கை....!
          அந்த திருடனும்.........இவர்களை சிஷ்யர்களாக ஏற்று கொள்வதாக கூறி .....லக்ஷ்மியை வீட்டிற்கு செல்லுமாறு கட்டளை இட்டு......ராகவனை.......அந்த போலியான குருவை பின்தொடருமாறு  கூறி அடர்ந்த காட்டினில்.........ஒரு மரதடியினில் அமருமாறு........கூறி.........ராகவனின் உடமைகளை.......எல்லாம் பறித்துவிட்டு!............ராகவனின்...கண்களை கட்டி தானே வந்து திறந்தால் அல்லாது கண்கட்டினை அவிழ்க்க கூடாது!.........என கூறி........போலி குருவாகிய திருடனும் சென்று விட்டான்........
         ராகவனும் ,  குருவின் சொற்படி கண்களை இறுக மூடி, இறைவனின் திருநாமத்தை.......கிருஷ்ணா! கிருஷ்ணா!... என கூறும்படி அந்த திருடன் ஆகிய குரு கூறினான் போலும்.........திரும்ப திரும்ப கிருஷ்ணா!......கிருஷ்ணா! என ஜபம் செய்தான்.
         ஒரு சில நாட்கள் சென்றன. ராகவனும்  நீரும் , உணவும் அருந்தாமல் ஜபிக்கலனான். உடலோ......மிகவும்  சோர்வு அடைந்ததால் ......கீழே விழுந்து விட்டான். ஆனாலும் அவனது......குரு ...பாவனை! , நம்பிக்கை!....செயல்பட்டது.!  எவ்விதம் தெரியுமா?....குழந்தைகளே!


         அந்த திருடன் அவனது.........உடமைகளை பறித்து சென்ற சில மணி துளிகளில் வேறு ஒரு இடத்தில் காவல்காரர்களால் கைது செய்யப்பட்டான்..அப்பொழுதே அவனுக்கு உள்ளுணர்வு உறுத்தலாயிற்று!
         ஒரு நல்லவனை ஏமாற்றி, தவறான வழி காட்டினோம்!  என்று......அந்த காவல்கரர்களிடம் புலம்பி......காட்டினில் தனித்து ராகவனை விட்டு வந்தோம் என்று சொல்லி கதறி அழுதான்.
         அதே வேளை எந்த பகவான் நாமாவினை விடாது ....கூறினானோ........அந்த கிருஷ்ணனே!........ராகவனின் முன்பு தோன்றி......கண்களில் உள்ள கட்டுகளை அவிழ்க்க போக!!......ராகவனோ ....அதனை மறுத்து....தனது.........குருவே......வந்து அவிழ்த்து விட்டால், அல்லது கண்திறக்க மறுத்தான். 
      பகவான் கிருஷ்ணனோ.....ராகவனிடம் கெஞ்சி, தன்னை பார்க்க எல்லோரும் தவம் இருக்க!.........தானே வந்து முன்பு நிற்பதாக கூறியும் ராகவன் கண்திறக்கவில்லை. கிருஷ்ணனோ............அவனுக்கு குருவாக இருந்தவன் ஒரு திருடன் என கூற.........!
      ராகவனுக்கு  கோபம் வந்தது........தனது குரு ஒரு திருடன் எனில் குருவுக்கு குருவாகிய ........ஸ்ரீ கிருஷ்ணனோ எவ்வளவு பெரிய திருடன்!  என வாக்குவாதம் செய்தான்.  பகவானுக்கு வேறு வழியே இல்லாது, அந்த  திருடன் ஆகிய குருவினை .....அழைத்து வந்தான்.


    குழந்தைகளே! இந்த நல்ல சிஷ்யானால் ........குருவாக நடித்தவனுக்கும் பகவானது காட்சி கிடைத்தது! அங்கு அவனும் தூய்மையனான். சிஷ்யனின் திருவடிகளில் நமஸ்கரித்து எழுந்தான்.
  
         நம்மிடத்தில் தூய்மை இருப்பின், அந்த தூய்மையில் உறுதி இருப்பின் , குழந்தைகளே.........அது எத்தகைய தீய குணத்தோடு ஒருவர்  நம்மிடம் பழகினாலும் அவர்கள் நல்லவராக  மாற வேண்டும்!
          ஏதேனும் ஒரு நல்லவரோடு பழகினாலும், நம்மிடம் உள்ள தீய குணங்கள் மாறி .........நல்ல பண்புகள் நம்மிடம் ஒளிவிடும்!.

Monday, March 15, 2010

Don't do.......what Guru do's.......do....what he said to you!

குரு!....... சொன்னதை மட்டும் செய்! அவர் செய்வதை செய்யாதே!




  கந்தன் என்று ஒருவர் கரூரில்  வாழ்ந்து வந்தார். அவருக்கு.....நல்வழி காட்டி திருத்தி நடத்திட......அவனது ஊரிலேயே........ஒரு குருவும் இருந்தார். கந்தன் நல்ல பண்பாளி!, அன்புடையவன், தர்மத்தோடு வாழ்வினை நடத்துபவனும் கூட......
               கந்தன் ..........குரு என்ன சொன்னாலும் செய்திடுவான்!........அவரோ! அவனை நன்னெறிகளால் ..வலுவூட்டி.....வாழ்க்கையின்...நோக்கத்தினை.....அவனுக்கு....தன்னுடைய...நடத்தையினால் ......செம்மையாக்கி ......வழிகாட்டினர்.
             ஒரு நாள்....குருவும் ..கந்தனும்....வேறு ஊருக்கு செல்ல ......முடிவெடுத்து நடந்தனர்.!  குரு சற்று முன்பு செல்ல......கந்தன்....இறை.. குரு உணர்வுடன் .....பின்தொடர்ந்து....சென்றான்.!
               குரு முன்பு செல்வதால்.....இயல்பாக.....பின்பு சென்ற கந்தன்.......அவர்..செய்வதை தானும் செய்தான்.எவ்வாறு எனில்......குருவுடன்.....ஒருவர்.....பேசிக்கொண்டு செல்வதையும்...அவர் குருவுக்கு சிகரெட் ஒன்று...கொடுக்க......குருவும் .எந்த தயக்கமும் இல்லாமல்.....அவரும் .....புகைபிடித்தார்....!
             கந்தனுக்கு ........உடனே......தோன்றிட்டு....நாமும்....சிகரெட் பிடிப்போம் !....என்று.உடனே...அங்கிருந்த......ஒரு கடையினில் சிகரெட் ஒன்றினை வாங்கி......புகைபிடித்த.....வண்ணம் ......பின்தொடர்ந்தான்..!
               இப்பொழுது..... குரு. ..கடைக்கு சென்றார்...அங்கு...தங்க நகைகளை உருக்கி ......பல்வேறு....நகைகளாக செய்தவண்ணம் இருந்தனர்.!  அதில் ஒருவர்..குருவின் சீடர்.!
அங்கு நகைகளை.....உருக்குவதற்கு..........ஈயத்தினை.......பழுக்க காய்ச்சி வைத்து இருந்தனர். குருவோ....அந்த பழுக்க காய்ச்சின.........ஈயைதிலிருந்து........ஒரு குவளை....எடுத்து...எந்த சலனமும் இல்லாமல்............ஒரு குவளை நீர் அருந்துவது போல அருந்தினார்....!
               இப்பொழுது...பின்னல் வந்த....கந்தனும்.........பழுக்க காய்ச்சின ஈயத்தினை ........பார்த்து.....உடம்பு நடுங்க.......குடிக்க முடியாமல் நின்றான்.
           குரு கேட்டார்...."என்ன கந்தா? குரு என்ன........................ செயதாலும்.......செய்தே!....இப்பொழுது..என்ன தயக்கம்! .......ம்ம்ம்ம்.....இதுவும் எடுத்து குடிப்பா!" என்று...சொல்ல.......கந்தன்.....தனது....தவறினை உணர்ந்து..........குருவின் திருவடிகளில்....நமஸ்கரித்து...எழுந்தான்..
                        " குருவே ....எம்மை மன்னியும் !....தங்கள்...எது செய்தாலும்....அதில் ஒரு காரணம் இருக்கும்!......எம்மை போல உள்ள சீடர்களுக்கு அது தெரிவதில்லை......அரைகுறை.அறிவுடன்..தங்கள் செய்வதை........உடனே நாங்களும் செய்கிறோம்.!.....இனி......அவ்வாறு நிகழாது இருக்க..கருணை புரிதல்...வேண்டும் !" என வேண்டி ...நிற்க...
        குருவும்...." செய்வதை செய்யாதே!......உனக்கு சொன்னதை மட்டும் செய் !" என்று கூறி நடந்தார்..
                       குழந்தைகளே.....இத்தகைய..பெரியோர்கள்....ஏன்? எதெற்கு ? எப்படி? எதனால்? .....செய்கிறார்கள்..நமக்கு வேண்டாம்....நமக்கு என்ன சொன்னார்களோ.....! அதை மட்டும் பின்பற்றி நடந்தால்....நாம் நல்வழி சேர்வோம் ! அல்லவா!
.

Friday, March 12, 2010

Unmaiyana........guru..........utthama shisyar...........

அருமை குருவும் ........அன்பு சிஷ்யனும்.......



      குழந்தைகளே ......இன்றும் .உத்தமமான.....குருக்கள்  உண்டு.....நம்மிடத்தில் உண்மை இருந்தால்....உண்மையான தேடல் இருந்தால்........உண்மையான....ஏக்கம் இருந்தால்......அவர்கள் நம்மை......அன்போடு...ஏற்றுக்கொண்டு....உண்மைநிலையை காட்டுவார்கள்..........
                                  ஒரு உத்தமமான குரு.....ஒருவர்..காவிரிகரையோரம் ..வாழ்ந்து வந்தார். அவருக்கு குமார் என்றொரு உத்தம சிஷ்யர் இருந்தார். இவர் திருகோவிலூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். கல்லூரி பேராசிரியரும் கூட.....ஒவ்வொரு வார இறுதி நாளும் ...தன்னுடைய..குருவினை தேடி....சென்று........சனி, ஞாயிறு ........அவரது  திருவடியினில்.......வாழ்ந்து........தனது.......வாழ்க்கையை செம்மை ஆக்கிகொண்டவர்.
              இவருக்கு ,  திடீரென .......மேற்படிப்பின் காரணமாக......பிரான்ஸ் செல்ல வேண்டி  வந்தது....குருவையும் பிரிந்து.....செல்ல மனமில்லை.......ஆயினும்.....குருவின் கருணையினால் .......அங்கு மேற்படிப்பு படிக்க சென்றார்.
                  பிரான்சில் ..இருந்தாலும்.....குருவின் அன்புக்கு மிகவும் ஏங்குவார். அப்படி ஒரு நாள் மிகுந்த ஏக்கத்தில் .....குருவின் திரு உரு படத்தின் முன்பு (போட்டோ) ஏக்கத்தோடு .........குருவினிடம் பேசிக்கொண்டு அமர்ந்திருக்கும்  பொழுது.....அந்த அறையில் ஒரே வெப்பமாக இருப்பதாய் உணர்ந்தார்.....
                தனக்கும் வியர்க்கிறது !.......எனில்......குருவுக்கும் இப்பொழுது.....வியர்க்குமே!.....(.நன்கு கவனியுங்கள் .....குழந்தைகளே !...அது அவருக்கு  போட்டோ மட்டுமல்ல....) அவ்வளவு தான்...!  இந்த எண்ணம் வந்த உடனே......ஒரு விசிறியினை எடுத்துவந்து......தனது......கண்ணில் வழியும் நீரினை .துடைத்துக்கொண்டு......குருவின் திரு உருவ படத்திற்கு ......பேரன்போடு.....விசிற ஆரம்பித்து விட்டார் !..........
                     தனக்கும்.......தனது...........குருவிற்கும் இப்பொழுது........குளிர்ந்த காற்று வருகிறது........ஆனந்தம்......அடைந்தார்!
                    அதேநேரம்., இங்கு......இந்தியாவில் ......காவிரிக்கரை ஓரம் .....உள்ள தனது ...அறைக்கு வெளியே......குரு அமர்ந்திருக்க......அவரை சுற்றிலும்.......குளிர்ந்த காற்று வீச ........சுற்றிலும் உள்ள மரங்கள் அசையவே இல்லாதது......கண்டு........இந்த குளிர்ந்த காற்று.....வீசுவதன் .....காரணமாக........குரு!........தனது.......கண்களை ..சற்றே மூடி....உள்ளே பார்க்க!.........  ஒ! குமார் ......பிரான்சில்..........திரு உருவ படத்திற்கு...சேவை செய்வதை உணர்ந்து........சற்றே அவருடைய...கரங்களை உயர்த்தி.." நலம் பெறுவாய்!!"  என வாழ்த்தினார்!

           குழந்தைகளே......இத்தகைய.....உத்தம......குருக்கள்.....தன்னுடைய .சீடனின்...மனநிலையை.!  மட்டுமே பார்கிறார்கள்........
              உண்மையான.....பணிவு, சேவை, கருணை, ......பக்தி , உண்மையின் ஏக்கம்......மட்டுமே!.....அவர்களை அடைய வழி...!  வேறு எதனாலும் அவர்களின் கருணை...கிட்டாது.........
           இன்றைய........கலியுகம் போல......பணம்!......உடமைகளை!.......கேட்கும்....குருக்கள் பின்னல் போகாமல்.............உணமையான...........இந்த.....பண்புகள்........இருந்தால்....உத்தம குரு.......தம்மிடத்தில் ....அவரே வரவழைத்து கொள்வர்....அல்லது.....அவரது .இடத்திற்கு நம்மை .......இறைவனின் கருணை.......அழைத்து செல்லும்.....!.
             இந்த பண்புகள் நம்மிடத்தில் .......உள்ளனவா! குழந்தைகளே.!   இல்லாததை.....இறைவனின் கருணையால்.....பெற்றுக்கொள்வேமே!

Tuesday, March 2, 2010

sorkkamum........naragamum

சொர்க்கமும் .........நரகமும் :
குழந்தைகளே...நமக்கு....சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி....நம்முடைய அம்மா , அப்பா  சொல்ல கேள்வி பட்டு இருப்போம்!. .........
நரகம்........சொர்க்கம்........வேறு எதுவுமில்லை.........எங்கிருந்தாலும் .........நம்முடைய..நடத்தையினால் அந்த இடத்தையே சொர்க்கமாகவும்...நரகமாகவும் மாற்றலாம் என்பதே இந்த கதையின் நோக்கமாகும்.
               ஒரு நாள் ஸ்ரீ நாரத முனிவர்.......நரகமும் .சொர்கமும் பார்க்கலாம்.......என.பகவானிடத்தில் அனுமதி பெற்று சென்றார்....அவர் முதலில் சென்றது நரகத்திற்கு..............
அங்கு அவர் கண்ட காட்சியானது..........
        எல்லோரும் ....சாப்பிடும் அரையினில் அமர்ந்து உள்ளனர்......அவர்கள் முன்போ ...அற்புதமான  விருந்து....பரிமாறப்பட்டு இருக்கிறது........ஆனால் அவர்கள் கைகளோ கட்டப்பட்டு இருக்கிறது.   எல்லோரும் திட்டிகொண்டே.சாப்பிட முடியாமல்...யாரேனும் ஒருவர் கஷ்டப்பட்டு எடுத்து சாப்பிட முயன்றாலும்....மற்றவர்கள்.....அதை  தட்டி விட்டனர்.
         எனவே ஒருவராலும்..அற்புதமான  .........அறுசுவை.....உணவு இருந்தாலும் சாப்பிட முடியாமலும் .....மற்றவர்கள் சாப்பிட்டாலும் ....பொறாமையுடன் .....மனம் வெம்பி ...உடலாலும் உள்ளதாலும் வேதனை உற்றவர்களாய் ......இருந்தனர்.
ஸ்ரீ நாரத முனியும்...போதும்டா...சாமி.......என.....சொர்க்கத்தை பார்க்க சென்றார்.
அங்கு அவர் கண்ட காட்சியானது.........
           அங்கும் எல்லோரும்......சாப்பிடும் அரையினில்.......கைகள் கட்டப்பட்டு......ஆனால், ஒருவரின் கைகட்டினால் மற்றவர் இலையினில் உள்ள சாப்பாடு எடுத்து.....எதிரில் உள்ளவருக்கு ஊட்ட....அவரோ அவரது  கைகட்டுடன்..எதிரில் உள்ள சாப்பாட்டு  தட்டினில் உள்ள சாப்பாட்டினை எடுத்து எதிரில் உள்ளவருக்கு......இவர் ஊட்ட...இருவரும் ஆனந்தத்துடன்  தங்களின் கைகட்டுகளை மறந்து..உண்டு கொண்டு இருந்தனர்......
அவர்கள் மட்டுமல்ல...அந்த அரையினில் உள்ள எல்லோரும் அவ்வாறே  ஒருவருக்கு ஒருவர் ஊட்டி உண்டுகொண்டு இருந்தனர்...
         ஸ்ரீ நாரத முனியும் நேரே பகவானிடம் சென்றார்.. ...." என்ன! நாரதரே..சொர்க்க்கமும், நரகமும் பார்த்தீரா?".....என கேட்க........ போதும், பகவானே..சொர்கமும் , நரகமும் சூழ்நிலையினால் அல்ல ......மனதின் கண்ணே உள்ளது.?  என உணர்ந்தோம் என்று....நமஸ்கரித்து எழுந்தார்........
          மனம் விரிந்தால்........அதுவே சொர்கமும்.......மனம் சுருங்கினால்  அதுவே நரகமும் ................சரியா? குழந்தைகளே .............

Sunday, February 7, 2010

Uthaama penkal

உத்தம பெண்கள்:         



முன்னொரு  காலத்தில்  கொங்கனவர்  என்றொரு  சித்த புருஷர் இருந்தார். மிகுந்த சித்துக்கள் பலவும் ( பல்வேறு ஆற்றல்கள் ....அனிமா, மகிமா.., லகிமா... போன்றன ) செய்ய வல்லவர். சில நேரங்களில் கோபம் மிகுதியால் சபித்தும் விடுவார். அதனாலேயே  அவரை கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள். அவரும் அதனாலேயே எல்லோரையும் மிரட்டி..பேசுவார்.
           அவர் ஒரு ஊருக்கு வருகிறார் என்றாலே.....அந்த ஊரில் உள்ளவர்கள் பயப்படுவார்கள். ஒருநாள் அவர் புலியூர் என்னும் ஊருக்கு செல்லும் பொழுது அதன் அருகினில் உள்ள வயல் பரப்புகளுக்கு இடையே .......நடக்கும் பொழுது  அவரது தலையின் மேலே பறவையின் எச்சம் விழ .........அண்ணாந்து மேலே பார்த்தார். ஒரு கொக்கு அவர் தலையின் மேலே பறக்க ..........அந்த கொக்கினை கோபத்துடன் பார்த்தார்.
இவர் பார்த்த மாத்திரத்தில் அந்த கொக்கு தீயினில் கருகி விழுந்தது. அவரும் அடுத்த ஊரான புலியூர் நோக்கி நகர்ந்தார்.
          அந்த ஊரில் மணிமேகலை என்றொரு......பெண்மணி இருந்தாள். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமோ......அவ்வளவு நற்குணங்களும் கொண்டவள்.  
       அதிகாலை எழுந்து....கணவனுக்கும்...குழந்தைகளுக்கும்......எல்லா தேவைகளும் நிறைவேற்றி........மாமியையும்.....மாமாவையும் நன்கு கனிவுடன் கவனித்து.....சுடு சொற்கள் வராமல் .....வாக்கினை காத்து ........இனிமையான ....இதமான வார்த்தைகளை மட்டுமே பேசி......பேச்சினை குறைத்து.....கணவரின் வார்த்தைகளை  எதிர்த்து பேசாமல் ....குறை  இருப்பின் திருத்தி....இதமான வார்த்தைகளால் கணவரின் தவறினையும் எடுத்து கூறி .....இறை நாம ......சிந்தனையுடனே ..முக்கியமாக...... தான்  அடங்கி ......எவரையும்  அடக்காமல் ..( தான் அடங்கினால்  சகலமும் தன்னுள்  அடங்கும்...என்ற பகவான் ஸ்ரீ ரமணரின்  வார்த்தைகளை  லட்சியமாக கொண்டவள் போல ). ..பேசுவாள்!.........அத்தகைய குணவதி அந்த மணிமேகலை.
               கொங்கனவரோ  நேராக மணிமேகலையின் வீட்டிற்கே வந்துவிட்டார். அவருக்கு அப்போது பசி இருந்ததால் கதவினை வேகமாக...........தட்டினார். சில நிமிடங்கள் சென்றன. கதவு திறக்க வில்லை . அவருக்கோ கோபம் வந்துவிட்டது. இம்முறையும் சற்று வேகமாக கதவினை தட்டினார். இன்னும் சில நிமிடங்கள் சென்றன...இன்னும் கோபம் அதிகரித்தது.
            இப்பொழுது கதவு திறந்தது. சபிப்பதற்காக  கையை ஓங்கினார்..." கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனவரே!." ..........(எம்மை என்ன? கொக்கு என்று நினைத்து விட்டீரா?....பார்த்ததும்  எரித்துவிட!.)..........மணிமேகலை..நின்று கேட்டதும் .......கொங்கனவர் மிகுந்த ஆச்சரியத்துடன் ....சிலை என நின்றுவிட்டார்.
           தனது....பெயர்......வரும் வழியில் தான் கொக்கினை எரித்தது.? எல்லாம் தெரிந்தவள் போல பேசுகிறாளே! என .........இவளது  ஆற்றலுக்கு முன்பு......தன்னுடைய தபஸ் ஒன்றுமே இல்லையே! என வெட்கத்துடன் .........." அம்மாஉனக்கு இந்த நிலை எதனால் கைகூடியது! " .....மிகுந்த பணிவுடன்....வினவினார்.
          மணிமேகலை...முதலில்...உணவருந்துங்கள்....பசியுடன் உள்ளீர்கள்.பின்பு பேசுவோம் என கூறி அவரை உபசரித்தாள். அவரும் உணவு உண்டு .....களைப்பு நீங்கி.......பின்பு வினவ...........
           " பணிவும் ..........கனிவும்,......இறை நாம 

porumaiyin perumai

 பொறுமையின்  பெருமை : 
ஒரு குளத்தில் பெரிய  மீனும், சிறிய  மீனும் இருந்தன. பெரிய மீன்  பொறுமையும், இறை நம்பிக்கையும் கொண்டதாய்... இறை நாம சிந்தனையும் கொண்டதாய் இருந்தது. சிறிய மீனோ...அவசர புத்தியும், பொறுமையின்மையும் .......குறை காண்பதை வாடிக்கையாய் வாழ்ந்து வந்தது. 
          அவர்கள் வாழ்ந்த குளத்தில் பல்வேறு மீன்களும் வாழ்ந்தன. கோடை காலம்  நெருங்கியதால்  எல்லா மீன்களும் அந்த குளத்திற்கு வரும் நீருற்றின் வழியே வேறு குளத்திற்கு சென்றன. சிறிய  மீனோ பெரிய  மீனிடம் பல முறை வேறு குளத்திற்கு செல்லலாம் என வற்புறுத்தியது. பெரிய  மீனோ இறை நாம சிந்தனையில் இருந்ததால் இதனுடைய புலம்பல்களை அது கேட்கவில்லை.
         குளமும் வறண்டது ......மீன்களை.....பல்வேறு பறவைகளும்....உண்டன..இந்த மீன்களோ ..இன்னும் சேற்று பகுதிக்கு சென்றன...ஒரு மீனவன் வந்து மீதி உள்ள மீன்களை பிடிக்க வேண்டும் என கரையில் நின்று பேசியதை இந்த சிறிய
மீன் கேட்டது........பெரிய  மீனிடம் வந்து.." எவ்வளவோ முறை சொல்லியும் நீர் கேட்கவில்லை!...நாளை காலை வந்து நம்மை மீனவன் வந்து பிடித்து செல்ல போகிறான்!" என்று முறையிட்டது. பெரிய  மீனோ..." கண்ணே! ஏன் இந்த புலம்பல்!.....இறைவன் நம்மை கைவிடமாட்டான்...அந்த மீனவன் ரூபத்தில் வந்து வேறு பத்திரமான இடத்தினில் ........இடலாம்!.........நடப்பது நடக்கட்டும்!.........அவன் கருணை நமக்குண்டு!....வீணே புலம்பாமல்.....அவனது நாமாவை சிந்தித்து இருக்கலாமே...!" என்றது.
      அடுத்த நாள் மீனவனும் வந்தான்......ஒருபாத்திரத்தில் நீரிட்டு அந்த இரு மீன்களையும்.......எடுத்து சென்றான்........செல்லும் வழியினில்.........மீண்டும் அந்த சிறிய  மீன் புலம்பியது........"இறைவன் பார்த்துக்கொள்ளுவான்! என்றீர்கள் ..இப்பொழுது பாருங்கள்......இந்த மீனவன் நம்மை வீட்டிற்கு கொண்டு சென்று உணவு செய்து சாப்பிட போகிறான்! எங்கே உங்களது இறைவன் காப்பாற்றவில்லையே ?.." என முறை இட்டது.
     பெரிய  மீனோ... " இறைவனின் கருணையில்  தான் ....இவன் எடுத்து செல்கிறான்......குளம் வற்றினால் நம் இறந்து விடுவோம் என......பாத்திரத்தில்   நீரிட்டு பத்திரமாய் நம்மை எடுத்துச செல்கிறான்...இறைவனை சிந்தனை செய் ! ".......என்று கூறி அது அமைதியானது.........
    மீனவனும்.......வீட்டிற்கு   சென்று......மனைவியை அழைத்து......இந்த மீன்களை உணவாக்கு! நாமோ குளித்து விட்டு வருகிறோம் என சென்றுவிட்டான். அவன் மனைவியோ அரிவாள்மனையை .உள்ளிருந்து எடுத்து வந்து.......மீன்களின் பாத்திரத்தில் உள்ள நீரினை மாற்றி....அவைகளை நன்கு கழுவி......வேறு நீரினில் இட்டு  அருகினில் வைத்து......மீன்களை அறிந்து வைக்க .......வேறு ஒரு பாத்திரம் எடுத்து வர உள்ளே சென்றாள்.
             சிறிய  மீனோ......." பல முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.! இறைவன் காப்பாற்றுவான் என்றீர்கள் .......பாருங்கள்...அவன் மனைவி நம்மை அறுக்க போகிறாள் !" என்று புலம்ப .........பெரிய  மீனோ......" பாவாய்! கவனி.....இறைவனின் கருணையை! ....நெடுநேரம்...ஒரே நீரில் இருந்தோம் என்று இப்போது கூட.....அவன் மனைவி நம்மை புதிய நீரில் இட்டு சென்றாள்!......நம்பிக்கையுடன்.....அவனது நாமாவை கூறு !...நமக்கு நன்மையே செய்வான்.!" என்று கூறியது...........
           அவன் மனைவியோ உள்ளே சென்றதும்.........அங்கு திடீரென வானம்   இருண்டது. கனமான மழை பெய்தது..............கூரையினில் கொட்டிய நீரானது........பாத்திரத்தில் விழுந்தது......பாத்திரம் கவிழ்ந்து .......நீரின் வழியே அந்த இரு மீன்களும்.......கழிவு நீர் குழாயில்  கலந்து.......வெளியே சென்று......கால்வாயினில் கலந்து......பின்பு அவைகள்.....நதியினை சென்றடைந்து.........கடலினில் கலந்தது................
        குழந்தைககளே இப்போது கடல் வற்றுமா?..........அவைகள் இந்த நிலை பெற......அந்த பெரிய  மீனின்  பொறுமையும்........நம்பிக்கையும்   எத்தகையது?  குழந்தைகளே! எவ்வளவு திடமான......நம்பிக்கை!........அரிவாள்மனையால்  ..அறுபடுவோம்!......என்னும் போது  கூட .........நம்பிக்கை இழக்க வில்லை...
     நாம் பெரிய  மீனா!.........சிறிய  மீனா!.......நம்மை நாமே அலசிகொள்வோமா!.........

Friday, February 5, 2010

kathai kathaiyam karanamam............................

 கதை கதையாம்.........காரணமாம்........


  எந்த ஒரு கதைக்குள்ளும் ஒரு செய்தி இருக்கும். அதில் சொல்லப்படும் நீதி நெறி  நமக்கு கண்டிப்பாக என்றேனும் ஒருநாள் பயன்தரும். அதை போன்ற ஒரு கதையே இதுவும்...........
           
    முன்பொருநாள் காசி ஷேத்ரத்தில் , ராம்குகன் என்றொரு சாது வசித்து வந்தார். மிகவும் அன்பானவர், பொறுமையே  வடிவானவர், சதா இறை நாம ஸ்மரணை  கொண்டவராக இருந்தார். இந்த நல்லவரை பலபேரும் அணுகி வாழ்கையை செம்மை ஆக்கி கொண்டனர்.அவர் மிகுந்த நல்லவர் ஆனதால் அவரிடத்து பொறமை கொண்டவரும் இருப்பார்களே.........!
                அத்தகையோரில்  ஒருவனாக  சந்தோஷ் என்பவனும் இருந்தான். அவனுக்கு பலர் முன்னிலையில் ராம்குகனை அவமானபடுத்த வேண்டும் என்று ஒரு...எண்ணம் இருந்தது. ஒருநாள்...ராம்குகன் கங்கையில் நீராடி எழுந்து......வழியினில் வரும்பொழுது சந்தோஷ்......அவர் மீது எச்சிலை காரி உமிழ்ந்தான்.
             ராம்குகன் மீது எச்சில் பட்டாலும்........அவர் திரும்பி கூட .........யார் உமிழ்ந்தது  என்றோ......எவர் செய்தது? ......என்றோ.......திரும்பி கூட பார்க்காமல் ........மீண்டும் கங்கையில் நீராட........சென்றார்.
             ராம்குகன் மீண்டும் நீராடி மேலே வரும்பொழுது.........மீண்டும் எச்சில் உமிழப்பட்டது......குசந்தைகளே....சற்றே இங்கு கவனியுங்கள்........ராம்குகன் ஒருமுறை கூட......சந்தோஷிடம் ....சண்டையிடவில்லை.......ஏன்? நிமிர்ந்தும்.....யார்? என்றும் பார்க்கவில்லை............உடனே.....திரும்பி கங்கைக்கு சென்று.......குளித்து கரை ஏற .....மீண்டும் சந்தோஷ்........காரி  உமிழ ..........ஒருமுறை ....இருமுறை......அல்ல.....பத்து, இருபது முறை ......அல்ல .......ஐம்பது, அறுபது முறை அல்ல.........தொண்ணுற்று எட்டுமுறையும்.......இவ்வாறே நடந்தது.......தொண்ணுற்று ஒன்பது முறையும் காரி ...உமிழ ....ராம்குகன் மீண்டும் கங்கைக்கு திரும்ப..........குளித்து மேலே எழும்பும் பொழுதும்....இறை ஸ்மரணை ( உணர்வு ) கெடாமல்........அவர் வர...........சந்தோஷ்......தன்னுள் எண்ணிக்கொண்ட .படி.......நூறாவது........முறையும் எச்சிலை  உமிழ .........ராம்குகன்.........சலனமே இல்லாமல்.....கங்கைக்கு திரும்ப...........
                 சந்தோஷ்...உள்ளே அகந்தை ( அகங்காரம் )  ஆடி போனது.......இவ்ளோ முறையும் .....இவருக்கு......தீங்கினயே ....செய்தாலும் ...இவர் .கோபிக்காது.....சண்டையிடாது.....யாரென்று கூட ..........பார்க்காது.......தன்னுடைய இறை.....குரு .....உணர்வில்...நிலைகெடாது.........இருக்கிறாரே ! என்று......தன்னுள் ஆடி போனவனாய்...ராம்குகன் திருவடியில் விழுந்து.....கதறி அழ.........
               ராம்குகனோ ......அவனை தூக்கி நிறுத்தி.....அழும் அவனது.......கண்களை ..துடைத்து....." சந்தோஷ்! எதற்காக இந்த அழுகை..!  நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லையே?.....யாம்! கங்கையில் சரியாக......குளிக்காத....காரணத்தினால்.....உங்கள் மூலமாக ...இறைவன் ..மீண்டும், மீண்டும்  குளிக்க வைத்து........சாதாரணமான......... ராம்குகனை..  புனிதமானவனாக மாற்றியவர் நீங்கள்!...அது மட்டுமல்ல......யாருக்கேனும்.. ஒரே நாளில் கங்கையில் நூறு முறை குளிக்கும் புண்ணியம் கிடைக்குமா!......கருணையோடு......அந்த வாய்ப்பினை தந்தவர் நீங்கள்!  என....சந்தோஷை வாரி எடுத்து அன்புடன் அணைத்துக்கொள்ள .......சந்தோஷ்.......கதறி அழுதான்..
    '' ராம்குகா....உன்னை......அவமானப்படுத்தவே! .....அவ்வாறு நடந்தோம்!.......ஆனால்.....நீயோ..நூறுமுறையும்.......எம்மை ஏறெடுத்தும் பாராமல்!.......திட்டாமல்!......பொறுமையுடன்!......மீண்டும் .மீண்டும்  கங்கையில் இறைநாம சிந்தனையுடன்!......எம்முடைய......தீங்கினை....எல்லாம் .....சகித்து கொண்டு!......எம்முடைய ....அகந்தையும்! அழித்துவிட்டாய்!........என........ரம்குகனின்....திருவடியில்!.......அடியற்ற மரம் போல விழுந்து.....நமஸ்கரித்தான்.......சந்தோஷ்".
              பின் ராம்குகனும், சந்தோஷும் நல்ல நண்பர்களாக.....இருந்தார்கள்.
குழந்தைகளே.... சந்தோஷை மாற்றியது....எது?...ராம்குகனுக்கு.......இந்த பொறுமை......சகிப்புணர்வும்....எவ்விதம் கிடைத்தது.?.............சற்றே சிந்திப்போமா!....

Wednesday, February 3, 2010

Periyorkal (Nallorkal) varthaiyai.........mathithaal..........

       ஒரு  அடர்ந்த காட்டின் அருகே குமரன் என்றொரு விறகு வெட்டி இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தையும்  இருந்தனர். இருப்பதில் போதும் என திருப்தி உள்ளவன்.தர்ம நெறி தவறாதவன்.எது கிடைத்தாலும் அது இறைவனின் கருணை என வாழ்க்கையை நடத்துபவன்.
      அந்த காட்டினுள்.....ஒரு அடர்ந்த மரத்தின் அடியினில்......உண்மையான தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவன் ஒவ்வொரு முறையும் அந்த அடர்ந்த காட்டினுள் செல்லும் போதும்....அவரை நமஸ்கரித்து .......சேவைகள் ( அவருடைய இருப்பிடத்தை சுத்தம் செய்து .....அவருக்கு தேவையானதை பேரன்போடும்....பணிவுடனும் வழங்கி .....அவரது ஆசியினை பெற்று ) பலவும் செய்து வாழ்கையின் உண்மை நிலையினை அறிய ஆசியினை வழங்குமாறு ...........பணிந்த பின்னரே  உள்ளே செல்வான்.
    இவனது  பண்புகள் பலவும் அந்த தபஸ்வியினை கவர்ந்ததால் ........அந்த முறை அவன் விறகு வெட்ட வரும் போது........அவனது சேவைகளை பேரன்போடு ஏற்றுக்கொண்டு ................அவனுக்கு ஆசியினை வழங்கி.........."" குமரா!......காட்டின் உள்ளே செல்!""  என்று மட்டும் கூறினார்.
      குமரனும்........காட்டின்  முன்புறம் உள்ள சிற்சில மரங்களை மட்டும் வெட்டி, கொண்டு வந்து.....அவற்றை ஊரினுள் விற்று....தனது குடும்ப தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவான்.  இந்த முறை.....அந்த தபஸ்வி சொன்னது போல் சற்று காட்டின் உள்ளே சென்றான். அங்கு சந்தன மரங்கள் இருக்க கண்டான்.அவற்றை வெட்டி  தனது வறுமையை போக்கிக்கொண்டான்.
      மறுமுறை....காட்டின் உள்ளே செல்லும் பொழுது....தபஸ்வியின்  வார்த்தைகளை மீண்டும் யோசிக்க .......இன்னும் உள்ளே சென்றான்..........இப்பொழுது....தங்கம் இருக்க்கக்  கண்டான்!..........மறுமுறையும் உள்ளே செல்லும் பொழுது அவனுக்கு தபஸ்வியின் வார்த்தைகள் நினைவுக்கு வரவே இன்னும் உள்ளே சென்றான்............
      இம்முறை அவனுக்கு வைரங்களே கிடைத்தன!.............தேவையானவற்றை கொண்டு வந்து அவன் தனது குடும்பத்துடன்........அந்த தபஸ்வியின் வழி காட்டுதலோடு  தனது வாழ்வினை இன்னும் செம்மைபடுத்திக் கொண்டான்.

    குழந்தைகளே .....ஒரு உத்தமரின் வழிகாட்டுதல்......வாழ்க்கையை எவ்வவளவு செம்மையாக்குகிறது?........
      இதற்கு காரணம் என்ன?.........அந்த வழியினை பின்பற்ற ......அவனக்கு எது உறுதுணையாக  இருந்தது.?

Tuesday, February 2, 2010

Irai nambikkai--vidhiyai vellum

    ஒரு ராம பக்தன் இருந்தான். அவன் தனது திருமணத்திற்காக      ஒரு நல்ல நாளினை குறித்து வர வேண்டி பண்டிதரை பார்த்து வர அருகில் உள்ள ஊருக்கு சென்றான். அந்த பண்டிதரோ மிகவும்  நேர்மையானவர்..................இவன் சென்ற நேரமோ...மாலை ஆகிவிட்டது.அந்த பண்டிதருக்கோ இவனை பற்றி நன்கு தெரியும்.....எனவே....அவனது ஜாதகத்தை வாங்கி பார்த்தார்.
     அவனது ஜாதகத்தை பார்த்ததும்....அதிர்ச்சி உற்றவராய்  நாளை காலையில்  உனக்கு  நல்ல நாளை சொல்கிறோம் என வீட்டின்  உள்ளே சென்றுவிட்டார். ராம பக்தனோ  வெகு தூரத்தில் இருந்து  வருவதால் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த கோயிலின் ( அது சிவன் கோவில் ) மண்டபத்தில் தங்கலாம் என தீர்மானித்து ........அங்கு தங்குவதற்கு சென்றான்.
      தூங்கலாம் என படுத்த பொழுது .........கோயிலின் கருவறை முழுவதும் வவ்வால்களின் எச்சம் இருக்க கண்டு.......பூஜையும் இல்லாமல் எம்பெருமான் இங்கு இருக்கின்றாரே   என கண்களில் கண்ணீர் மல்க கருவறையும்.....மண்டபமும்  ராம நாமம் சொல்லியவாறே சுத்தம் செய்த  பின்பு தூங்க போனான்.
      இரவு திடீரென மழை பெய்தது......சோர்வினில் நன்கு தூங்கி விட்டான். காலையில்  எழுந்து பார்த்தால்  .....மண்டப தூண்  ஒன்று இவனருகே ...விழுந்து கிடந்தது.....அதனடியில் ஒரு பாம்பும் இறந்து கிடந்தது. இவனோ.....சற்றே அதிர்ச்சியுடன் ராம நாமம் சொல்லியவறாரே ........அந்த பண்டிதரின் வீட்டை நோக்கி நடந்தான்.
    பண்டிதருக்கோ...  இவனை  பார்த்ததும்  மிகுந்த ஆச்சர்யம்!.....ஏனெனில் நேற்று இரவே இவனது விதி முடிந்து விட்டது!...............பின்பு எவ்வாறு இங்கு வர முடிந்தது?........என தன்னுள் நினைத்தவராய் ....இரவு என்ன நடந்தது? எங்கு தங்கினாய்? ( ஏனெனில் அவன் நேற்று இரவே பாம்பினால் கடிபட்டு இறக்க வேண்டும்! என்பது  அவனது விதியாக ஜாதகத்தில் இருந்தது .....அதை நேரிடையாக சொல்லாமல் நாளை கலை வா.....என பண்டிதர் அனுப்பி வைத்தார்..)என வினவ......அவன் ராம நாமம் சொல்லியவரே கோவிலின் கருவறை சுத்தம் செய்து......தூங்கும் பொழுது.....பாம்பு கடிக்க வர........கோவிலின் மண்டப தூண் பாம்பின் மேலே விழுந்து.....தானோ கைப்பற்றப்பட்டதை சொல்ல...........பண்டிதரும்..............உனது இறை நம்பிக்கையும்....உனது ராம நாமம் உன்னை பாம்பினால் இறக்க இருந்த உன்னை  காப்பாற்றியுள்ளது ............என கூறினார்...........
       அவரும்  பேரன்போடு ராம நாமம் கூறினார்.......அவனும்...இறைவனால் தனது விதியும்  மாற்றி அமைக்க பட்டுள்ளதை எண்ணி எண்ணி .....கண்களில் கண்ணீர் மலக........நன்றி கூறி சென்றான்.
        குழ்ந்தைகளே இதிலிருந்து  தெரிவது என்ன? நமக்கு திடமான இறை நம்பிக்கை இருந்தால் நமது விதியும் வழி விட்டு விலகி நிற்கும்.........?

Monday, February 1, 2010

Ellaam nalame..................

   ஒரு  ஊரில் ஸ்ரீ ராம பக்தன் இருந்தான். அவன் தனது செயலெல்லாம்  ஸ்ரீ ராமனது செயல் என உறுதியான நம்பிக்கையும்...........பணிவும், நன்னடத்தையும் கொண்டவனாய் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் இரவு உணவு முடித்து விட்டு அவனது வீட்டு திண்ணையில்  அமர்ந்தவனாய் ஸ்ரீ ராம நாம சிந்தனையுடன் அமர்ந்து இருந்தான். அப்போது அந்த வழியே சில திருடர்கள் அரண்மனையில் திருட வந்தனர். ஆள் பற்றாக்குறையின் காரணமாக..இந்த ராம பக்தனை....இழுத்து சென்றனர்.  இவனும் அவர்களுடனே சென்று......திருடிக்கொண்டு வரும்பொழுது........அரண்மனை காவலர்களால் ஸ்ரீ ராம பக்தன் மட்டும் பிடிபட்டான்.
      அடுத்தநாள் அரசனின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்க பட்டான். நடந்தது என்ன? என அரசனால் வினவப்பட்டது..........." ஸ்ரீ ராமனின் கருணையால் இரவு உணவு முடித்து.......ராமனின் கருணையால்  வெளியில் அமர்ந்து...ஸ்ரீ ராமனை  சிந்தித்து இருந்த பொழுது.........ராமனின் கருணையால் இவர்களால் இழுத்து செல்லப்பட்டு .......ஸ்ரீ ராமனின் கருணையால் ............பிடிபட்டு......ராமனின் கருணையால் தங்கள் முன்பு நிறுத்தப்பட்டு.........ராமனின் கருணையால் விச்சரிக்கபடுகிறேன்" என்று சொன்னான்........
     அரசனோ..........இவன் உண்மையில் திருடனல்ல........நல்லதொரு பக்தன் என முடிவு பண்ணி அவனை விடுதலை  செய்தான்.
இது...எதனால் நிகழ்ந்தது?
உண்மையான  பணிவு எப்பொழுது வரும்?
நேர்மையான....யார் மீதும குறை சொல்லாத குணம் எதனால் வரும்.....?
எல்லாம் ராமனின் கருணை.......என திருடர்களால் பிடித்து செல்லும் போதும்....திருட்டு குற்றச்சாட்டு  சுமத்தி விசாரிக்கும் போதும் .....இது ராமனின் கருணை என சொல்லத தோன்றுவது..... எதனால்?
எத்தகைய நம்பிக்கை அவரிடம் திடமாக இருந்தது ...?  சற்றே அலசுவோம...........

Sunday, January 31, 2010

vittukoduthal

நமக்கு தெரிந்த கதை தான் தெரியாத கோணத்தில்.........

ஒரு ஆண் மானும் பெண் மானும் கானகத்தில் பேரன்போடு வாழ்ந்து வந்தது   அவற்றிக்கு ஒரு குட்டி மானும் இருந்தது. ஆணும், பெண்ணும் தர்மத்தோடும் , வாக்கு தவறாமையும் வாழ்ந்து வந்ததால்............பெற்றோர் போல அந்த குட்டி மானும் இருந்தது........வாழ்வு ஒரே மாதிரி இருக்காதே!........
மெல்ல வெயில் காலம் வந்தது....கோடை காலமானதால்......நீர்நிலைகள் வற்ற தொடங்கியது. ஒரு நாள் காலை முதல் மாலை  வரை நீரை தேடி அலைந்தன.........
இறைவனின் கருணையால்....மாலையில் .....ஒரு நீர்  நிலை கண்டன.........ஆனால்.....அதில் மிகசிறிய நீரே இருந்தது. ஒருவர் மட்டுமே...தாகம் தீர்த்துக்கொள்ளலாம். பெற்றோர்  மான்கள் குழ்ந்தை உயிருடன் இருப்பது முக்கியம் எனவே......நாம் நீர் குடிப்பது போல் பாவனை செய்வோம் என தங்களுக்குள் பெசிகொண்டன................
குட்டி மானோ......பெற்றோர் முக்கியம் என.....அது குடிக்காமல் இருக்க முடிவு      பண்ணிககொண்டது.
மூவரும் நீர்நிலையில் நீர்குடிக்க வாய் வைத்தன. நெடுநேரம் ஆகியும் அதில் இருந்த மிகச்சிறிய நீரானது...........குறையவே  இல்லை.


இந்த அற்புதமான........நிகழ்வினைகண்ட....தர்ம தேவதை.........பெற்றோர் குழந்தைக்காக விட்டுகொடுத்தலும்........குழ்ந்தைகாக  பெற்றோர்கள்  விட்டு கொடுத்தலையும் கண்ட.........சூட்சுமமான  கானக  தேவதைகள்.....வருணனிடம் வேண்டி அங்கு.....உடனே மழை பொழிந்தன .......
வறண்ட கானகம் , செழித்தன............அந்த நல்லோர் பொருட்டு............சகல விலங்கினங்களுக்கும் சகலமும் கிடைத்தது................................
இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?.........சுட்டிகளே!
எல்லோரும் உங்கள் கருத்துகளை பதிவு செய்தால் ......இன்னும் இது போன்று
கதைகள் படைத்திட உதவும்.......................