Saturday, January 28, 2017

உயிர் காக்கும் ஸ்ரீ அமிர்தசஞ்சீவிணி மந்த்ரம் !

கொடிய நோய்களையும்  நீக்கும்   ஸ்ரீ அமிர்தசஞ்சீவிணி  மந்த்ரம் :

Image result for south indian village simple pooja room


                  ஒரு  உத்தரணியில்  நீரெடுத்து  அதில்  பச்சைக்கற்பூரம், துளசி  அல்லது  வில்வம்  கலந்து  ஸ்ரீசுதர்ஸன  ஸம்ஹிதையில்  உள்ள  அமிர்த சஞ்சீவினி  மந்திரத்தை  ஜெபம்  செய்து  கொடுக்க   ஆயுள்  வளர்க்கும்  மிகவும்  சக்தி  வாய்ந்த  மந்திரம்  ஆகும்.

                 மேலும்   இதனுடன்  தன்வந்த்ரி  ஸ்லோகமும்  அபிமந்திரித்து  


( 108 முறை  ஜபம்  செய்து  தர ) எப்படிப்பட்ட  கொடிய  நோய்களும் ....கேன்சர்  போன்று   மருத்துவரால்  கைவிடப்பட்ட  நோய்கள் விரைவில்  குணமாகும்.  நோயாளியினால்  முடியாவிட்டால்  வேறு எவரேனும்  குணமாக  வேண்டும்  என்ற  அக்கறை  உடையோரால்  ஜெபம்  செய்தும்  அருந்தலாம். ( இதனை  தினசரி  108 முறை என  நோய்  முற்றிலும்  குணமாகும் வரை   அபிமந்திரித்த  மந்திர  நீரை  தரலாம் )  நித்ய  அநுஷ்டானமுடையோராயின்  மிகவும்  சிறப்பு! கீழே  அமிர்தசஞ்சீவினி  மந்திரம்  மற்றும்  அதற்கு  ஆதாரமாக  சமீபத்தில்  குமுதம்  ஜோதிடத்தில்  வந்த  ஆதாரம். இதனை  எழுத  தூண்டுகோலாக  இருந்த சகோதரிக்கும்  நன்றி. சமையலை  அமிர்தசஞ்சீவினியை  ஜெபம்  செய்துகொண்டே  சமையல்  செய்தால்  அந்த  உணவே  அமிர்தமாக  நோய்களை  நீக்கும்  சஞ்சீவியாக  இருக்கும். பின்பு  அது  உணவல்ல .......அமிர்தம் !


             இதில்  காயத்ரியும்,  மிருத்யுஞ்ச  மந்திரமும்  ஸம்புடிகரணமாக  இணைத்து ( interlocked mantras)  மகான்களால்  அருளப்பட்டுள்ளது.

மந்த்ரம் :

  ஓம்  ஹ்ரீம்  ஹௌம்  நமசிவாய :
  ஓம்  ஹௌம்  ஜூம்  சௌ:  ஓம் 
  பூர்  புவஸ்வஹ  ஓம்  தத்  ஸவிதுர்வரேண்யம் 
  த்ரயம்பகம்  யஜாமஹே  :
 பர்கோ  தேவஸ்ய  தீமஹி  ஸுகந்திம்  புஷ்டி 
 வர்த்தனம்  தியோ யோந  ப்ரசோதயாத் :
 உருவாருஹமிவ  பந்தநாத்  ம்ருத்யோர் 
 முக்க்ஷியமாம்ருதாத்  ஓம்  ஸ்வஹ :
 புவஹ  பூர்( ஹ் )  ஓம்  சௌ:
 ஜூம்  ஹௌம்  ஓம் :


                நண்பர்களே !  வீட்டினிலோ , அருகினிலோ  யாரேனும்  மிகவும்  கொடிய  நோய்களால்  அவதியுற்றால்  அவர்களுக்காக ,  ஜெபித்து  மந்திர  நீரைத்தரலாம். இதனை  குருவிடம்  இருந்து  பெற்று  ஜெபம்  செய்வதே  சிறப்பு !  வாய்ப்பு  இல்லாதோர்  இறைவனே  குருவாக  மனதிற்குள்  வரித்துக்கொண்டு .......உங்களின்  ஜெபத்தை  அவன்  அருகிருந்து  கண்காணிக்கிறான்  என்ற  பூரண  உணர்வுடன்  ஜெபம்  செய்து  தரலாம் . இனி  தன்வந்திரி  மந்திரத்தை  கீழே  இறையருளால்  ஜெபம்  செய்ய .............


ஓம்  நமோ  பகவதே,  மஹா  சுதர்ஸனாய,  வாசுதேவாய,
தன்வந்த்ரயே   அமிர்தகலச  ஹஸ்தாய, சர்வாபய  விநாசனாய , 
சர்வ  ரோக  நிவாரணாய,
த்ரைலோக்ய  நாதாய,  த்ரைலோக்ய  நிதயே, த்ரைலோக்ய  பதயே,
ஸ்ரீ  மகா விஷ்ணு  ஸ்வரூப, ஸ்ரீ  தன்வந்திரி  ஸ்வரூப,
ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ  ஒளக்ஷத  சக்ர  நாராயண  ஸ்வாஹா :

Image result for dhanvantari images hd








நன்றி : திரு. ஏ.எம் . ராஜகோபாலன்  - குமுதம் ஜோதிடம் .
           tamilmagazines.net

Friday, January 27, 2017

விரும்பி வந்த தட்சிணேஸ்வர காளி அன்னை

தை  அம்மாவாசை :

                          இன்று   தை  அம்மாவாசை , இரவு  உறக்கமின்றி  பஞ்சதஸியில்   கரைந்து  கரைந்து  அது  இருந்தது. பகலும்  அவ்வாறே  ஸ்ரீ  வித்யா  உபாஸனையில்  நகர்ந்து  மாலை  வந்தது. 

Image result for kali maa images

              மாலை   ஒரு  பார்சல் கல்கத்தாவிலிருந்து  வந்தது. " அன்பின் அடையாளமாக ...... " என்று  அதை  அனுப்பியவர்கள்  சொல்லாக  இருந்தது.  பிரித்துப்  பார்த்தால்  வைக்கோல்  வைத்து  சுற்றி  மிகவும்  பாதுகாப்பாக  உள்ளே  அன்னை  தக்ஷிணேஸ்வர  காளி .............. பவதாரிணி  .......( அன்னை  சாரதையை  குறிப்பிடும்போது,......  குருதேவர்  கூறுவார் .........எமக்காக  அன்னை  வைக்கோல்  போர்  சுற்றி  பாதுகாப்பாக  வைக்கப்பட்டு  உள்ளார்  என்று  கூறுவார் ) அதேபோல் .......அவ்விதமே   அவள்  இங்கு  வந்து  சேர்ந்தது .............எப்படி  விவரிக்க ............! முழு  உணர்வும், அவளே   ஆனது ! உள்ளே செல்லும்  மூச்சு நின்றது .........." உன்னை  உள்ளபடி  உணரும்  உணர்வு  தந்தாய் "....உணர்வாய்  வெளியேறும்  மூச்சினை  கவனித்தபடி  கண்களில்  வழியும்  நீரினை  துடைத்தது .......

Image result for kali maa images

            மிகவும்  சைதன்யமாக ........பார்த்தவுடன்  கண்கள்  குளமாக  நனைந்தன.  மிகவும்  உணர்வுடன்  கூடிய,  பேரன்பு மய  அன்னை  அங்கு  இருந்தாள். சிறு வயதில்  ஸ்ரீ ராமகிருஷ்ண  சரிதம்  படிக்கும்பொழுது  எல்லாம்  ஏங்குவேன்......  அன்னையின்  பிரதிமையை  காண்பதற்கு ! ஏதேனும்  ஒருநாள்  அன்னையை  காண்பேனா  என்று .............அது  மாதா  அமிர்தானந்த  மயியை   கண்டபொழுது  அடங்கியது ..............இவரே    அவர்  என்று  குதூகலம்   அடைந்தது!  

          அதற்கு  பின்பு ............இன்று  கண்கள்  குளமாக  கண்டேன் ! இன்று  மேலும்  அன்னை  அபிராமி  முழு  நிலவினை  அபிராமி  பட்டருக்காக  வெளிப்படச்  செய்த  நாள்  ஆகும். இப்புண்ணிய  தினத்தில்  அன்னை  வீடுதேடி  வந்தது .......................

              " நாயேனையும்  இங்கு  ஒரு  பொருளாக  கருதி " - ஆம்  நண்பர்களே! அபிராமி  பட்டர்  கூறுவதுபோல்   எந்த  ஒரு  சிறு  தகுதியும்  இல்லாத ......சிறிதும் ....கிஞ்சித்தும்   தகுதியில்லாத   இவனை  தேடி  அன்னை  வந்துள்ளாள்.  

          இன்னும்பலவற்றை  இங்கு  விவரிக்கவில்லை ......அவை  இதயத்துள்  பொக்கிஷமாக  வைத்துப்  போற்ற வேண்டியவை.

                  நல்லோர்கள் , புண்ணிய ஆன்றோர்கள்  இவனுக்காக  " இனியேனும்  இவன்  சிறிது   நல்லறிவு  பெற  "  தங்களது  உபாசனா  தெய்வத்திடமோ , உங்களின்  குருவிடமோ  இவனுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள் ....  நண்பர்களே !

Thursday, January 12, 2017

இவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி !

என்ன ஒரு பாதுகாப்பு !




Image may contain: 1 person, sitting

( மஹா  பெரியவா - தமது  13 வது வயதில் ........... )


                    மஹா பெரியவாளுக்கு நம் போன்ற ஹிந்துக்கள் தான் பக்தர்கள் என்று இல்லை. உலகம் முழுதும் பல ஜீவன்கள் அவரால் ஈர்க்கப் பட்டவர்கள். பிரான்ஸ் நாட்டில் பாரிசில் ஒரு பாங்க் தலைவர் டைரக்டர் அந்த வெள்ளைக்காரர். அவர் பூர்வ புண்ய கர்மா எப்படியோ அவருக்கு மஹா பெரியவா பத்தி விஷயங்கள் தெரிந்திருக்கிறது. மனதில் இனம் புரியாத ஒரு பக்தி ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ஒரு தரம் இந்தியா வந்த போது பாம்பேயில் இருந்தவர் எப்படியாவது சென்னை போக வேண்டும். அங்கிருந்து விசாரித்துக் கொண்டு பெரியவாளை பார்க்க ஆவல். அவருக்கு ஒரு நண்பர் சென்னையில் டாக்டர் ராகவன். பாம்பேயில் வந்து சேர்ந்ததும ஹல்லோ ராகவன் ஹவ் ஆர் யு ? நான் இந்தியா வந்திருக்கேன். பாம்பேலே ஒ அப்படியா சென்னை வருவீங்களா? அதுக்கு தானே போன் லே பேசறேன். எனக்கு உங்க சங்கர் சாரி பாக்கணும் ரெண்டே நாள் தான் இருக்கு. அதுக்குள்ளே கண்டிப்பா பாத்துடனும் ஒரு ஆசை. ஏற்பாடு பண்ண முடியுமா? நா காலம்பர ப்ளைட்லே வந்துடறேன். ஆஹா எனக்கும் ஒரு நல்ல சான்ஸ். மார்னிங் வந்துடுங்க. ஏர் போர்ட்லே காத்திண்டிருப்பேன் ஒரு வெளிநாட்டவர் மதராஸ் வந்து உங்களை சந்திக்கிறேன். பெரியவரை தரிசனம் பண்ணியே ஆகவேண்டும். ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொன்னதால் ராகவன் பறந்தார். பெரியவா மைலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். பெரியவாளை தரிசனம் பண்ணினார். விஷயம் சொன்னார். பெரியவா முகத்தில் ஒரு க்ஷண காலத்துக்கு புன்னகை. சரி இரவு பூஜை முடிந்ததும் வெள்ளைக்காரனுக்கு கீழ உக்கார முடியாது. ஒரு நாற்காலி போடு. உபன்யாசம் முடிஞ்சதும் வந்து பாக்கறேன் என்றார். எல்லாம் முடிந்ததும் யாராவது வந்தாளா? என்றார். இல்லை பெரியவா அப்போது வேஷ்டி துண்டுடன் ஒருத்தர் வந்து பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணினார். (சன்யாசிகளுக்கு எப்போதும் நாலு நமஸ்காரம் பண்ணுவதுதான் சம்ப்ரதாயம்). அவருக்குப் பின்னால் டாக்டர் ராகவன்! ஆம் அந்த வெள்ளைக்காரர்தான் வேஷ்டியில் கச்சிதமாக வந்து நாலு நமஸ்காரம் பண்ணியது! நாலு நமஸ்காரம் பண்ணனும்னு எப்பிடி தெரிஞ்சதுன்னு கேளு! எல்லாரும் பண்ணறதைப் பார்த்து பண்ணினேன் பக்கத்திலிருந்த பாணாம்பட்டு கண்ணனிடம் அந்த வெள்ளைக்காரனை மட்டும் அழைச்சிண்டு உள்ளே வா அவர் பேசற இங்க்லீஷ் எனக்கு புரியாது. வேணா.......டாக்டர் ராகவனை கூப்பிடட்டுமா? எல்லாம் ஒனக்கு தெரிஞ்ச இங்க்லீஷ் போறும். வா அந்த பிரெஞ்சுக்காரர் சொன்னார் நான் கொஞ்ச காலமா வேதாந்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் என் உடல் முழுதும் மரத்து விட்டது போலவும் நான் உடலை விட்டு வெளியே இருப்பது போலவும் என் உருவம் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக இருப்பது போலவும் தெரிந்தது. என் உடல் முழுக்க அண்டங்கள் தொங்குவது போலவும் தெரிந்தது. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. துக்கக்கலப்பே இல்லாத ஆனந்தம்! இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியும் என் மனஸில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. என் மனைவி மகன் இறந்த போது கூட என் மனஸில் எந்தவித சலனமும் இல்லை. எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன்... ஆபீசில் என்னுடைய இந்த வினோதமான மனநிலையை பார்ப்பவர்கள் என்னை பைத்தியம் என்கிறார்கள். அதனால் என்னை ஆஸ்பத்திரியில் கம்பி அறைக்குள் அடைத்து விடுவார்களோ? என்ற பயம் மட்டும் உள்ளூர இருக்கிறது என்றார். நடமாடும் தெய்வம் மெதுவாக பேச ஆரம்பித்தது...... உள்ளே..ன்னா என்ன? வெளியே...ன்னா என்ன? எல்லாமே நாலு சுவருக்குள்ளதானே? ஆபீசும் நாலு சுவருக்குள்ளதானே? இந்த கேள்வி அந்த வெள்ளைக்காரரின் மனஸில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. தாங்கள் எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டினார். தனக்கு ஏதாவது உபதேசம் பண்ணவேண்டும் என்று கெஞ்சினார். நீ இப்போ பண்ணிண்டு இருக்கற த்யானத்தையே விடாமப் பண்ணிண்டு வா! ஒன்னோட attainment [சித்தி] வரைக்கும் ஒங்கூடவே இருக்கேன் [என்ன ஒரு பாதுகாப்பு!} என்று சொல்லிவிட்டு தான் கட்டிக்கொண்டிருந்த காவி வஸ்த்ரத்திலிருந்து ஒரு மூலையை கிழித்து அவரிடம் கொடுத்தார். இதை எப்பவும் ஒன் கூடவே வெச்சுக்கோ!
[என்ன ஒரு அனுக்கிரகம்!! யாருக்குக் கிடைக்கும் இப்பேர்ப்பட்ட பாக்கியம்?] வெள்ளைக்காரரின் ஆனந்தம் பன்மடங்கு பெருகியது. நமஸ்காரம் பண்ணி விட்டு வெளியே வந்து டாக்டர் ராகவனிடம் உங்களால்தான் எனக்கு இவ்வளவு பெரிய பாக்கியம் என்றார். பாணாம்பட்டு கண்ணனின் மனஸில் ஆயிரம் கேள்விகள்! மறு நாள் காலை ஒரு மணி நேர ஜபம் ஆரம்பிக்கும் முன் மஹா பெரியவா கண்ணனைக் கூப்பிட்டு ஒனக்கு நாயன்மார்கள் எத்தனைன்னு தெரியுமோ? என்றார். அறுபத்து மூவர். கபாலீஸ்வரர் கோவில்ல உத்சவம் கூட நடக்கறதே! கபாலி கோவில்ல போய் எண்ணிண்டு வா போய் எண்ணினால் அறுபத்தேழு! ஜாஸ்தியா இருந்த நாலு பேர் யார்? யார்? சொல்லு பாப்போம் போய் விஜாரித்துக் கொண்டு வந்தார்.
அதுல ஒருத்தர் அப்பாலும் அடி சார்ந்தாருக்கடியார் அதே தான். அப்பால்...ன்னா தேசத்தால காலத்தால அப்பாற்பட்டவா......காலத்தாலன்னா இனிமேலும் பொறக்கப் போற அடியார்களுக்கு..ன்னு அர்த்தம். நேத்திக்கி வந்த வெள்ளைக்காரன் தேசத்தால அப்பாற்பட்டவந்தான். இவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி" என்றார்.



நன்றி : வித்யாசாலை .