Wednesday, February 4, 2015

இரண்டு இல்லாத ஆத்மா ஒன்றே இருக்கு !

ஏகமேவ  அத்வதீயம் : 
இருப்பது  ஆத்மா  ஒன்றே !



       தினம்  தூக்கத்தில்  இந்த  உலகம்  இல்லை.  ஏனெனில்  தூக்கத்தில்  மனமோ , உடலோ ,  உலகமோ  இல்லை.   எழுந்தவுடன்  மனம்  விரிகிறது, அதனால் உலகம்    தெரிகிறது. மனமோ , சரீரமோ  இல்லாமல்  உலகத்தை  யாரும்  பார்க்க   முடியாது.

" விஸ்வம்  தர்ப்பண   திருஷ்யமான   நகரி   துல்யம்  நிஜ  அந்தர்கதம்  "   


உள்ளே  இருப்பதே   வெளியே  புலன்கள்  மூலம்   தெரிகிறது ! கனவும்  அதுபோல  தானே !  சுகமான  கனவானால்  யாரேனும்  எழுப்பி  விட்டாலும்  பிடிப்பதில்லை.  

விழிப்பில்  பெரும்  தனவானன  பணக்காரன்  கனவில்  பிச்சை  எடுக்கலாம். ஏழ்மையால்   அலையலாம்.  அவனுக்கு  கனவிலிருந்து  யாரேனும்  எழுப்பி விட்டால்  " அப்பாடா ! "  என்று  சந்தோஷத்தில்  நன்றி  கூறுவான். அதே நேரம்  பரம  தரித்திரன்   தனது  கனவில்  ஓர்  சக்ரவர்த்தியாக  கனவு  காண்கிறான்  எனக் கொள்வோம்.  அவனை  எழுப்பிவிட்டால் ........கோபத்துடன்  அடிக்க  துரத்துவான் ,   ஏனெனில்  எழுந்ததும்   ஒன்றுமற்ற  நிலைமை .......கனவில்  அனுபவித்ததை  எல்லாம்  இழந்த  துயரம். இவனுக்கு  சாம்ராஜ்ஜியம்  நஷ்டமடைவதால்   அவன்  எழுந்திருக்க  விருப்பபட  மாட்டான் !

கனவு  சுகமானால்  எழும்ப  விருப்பமில்லை -  கனவு  துக்கமானால்   ஒரு  ஆஸுவாசம் ....அப்பாடா  என்ற   விழிப்பு  இருக்கும் .

நமக்கு  துக்கம்   நேருவதும்  இதுவே !  அருள்  நம்மை  கருணையுடன்  இந்த  பிரபஞ்சம்  என்ற   கனவில் இருந்து  விழிக்கவே  .............துக்கம்  நேர்வது ......அதன்மூலம்   விசாரம்  பிறக்கவே ! பகவானது  கருணையே  துக்கம்  நேர்வது .......!

அத்வ யம்   ஆத்மானதேவ   குருதேவு  .. பிரபோத  சமையே 


இரண்டு  இல்லாத  ஆத்மா  தான்   இருக்கு  - ஆத்மா ,  முக்தி ,  சாந்தி   எல்லாம்  இதுதான்  - என்பது   தெரியும்.
' இருக்கின்றேன் '  - என்ற  பேருணர்வு  தான்   இருக்கு .  அதிலேதான்  மனம்  இருக்கு ,   அது  பாதி  விரிந்தால்   கனவு , முழுதும்  விரிந்தால்   நனவு ,  மனம்  லயம்  ஆனால்   தூக்கம். இந்த  மூன்று  அவஸ்தைகளும்   அகந்தைக்கு  தான் .

விழிப்பு நிலையில் ,  எனக்கு  தானே  உலகம்  தெரிகிறது . உலகம்  வந்து  என்னிடம்  சொல்லவில்லையே .......' நான்  இருக்கிறேன் '  என்று ........எனவே 
இந்த  ' நான் '     விசாரத்திற்கு   உரியது.

உலகம்  நான்  பார்க்கும்  உலகமாக  இல்லை ..........பின்பு , விசாரம்  செய்  , என்றார்கள் .............தவறான   தோற்றத்திலிருந்து   விலகி  நின்று  பார்  என்றனர்  நம்  ரிஷிகள் ! 

இதுதான்  முதலில்  மாயை , அகங்காரம்,  கனவு  போன்றதே  .........என்று  சொல்வது !  விசாரித்து , உண்மையான   உணர்வுக்கு   போய்விட்டால் .........ஆன்மாவுக்கு  போய்விட்டால் ..........நித்ய , முக்த , சுத்த , புத்த  வஸ்துவுக்கு   போய்விட்டால் ,,,,,பகவத்  சாட்ஷாத் சொரூபத்துக்கு   போய்விட்டால் .....அங்கு  சலனம்   கிடையாது.   அந்த  நிச்சல  நிலையே   சிவம் !



 இந்த   நிச்சல  நிலையிலிருந்து   திரும்பவும்  எழுந்தால் .........எண்ணங்கள்  ஏற்படும்,  சித்த  விருத்திகள்  ஏற்படும்.  மனம்  கிளம்பும்.  திரும்பவும்   உலகம்   தெரியும் !

அந்த  நிச்சல  நிலையிலிருந்தே,,,,,,  ஒரு  ஆற்றல் , சக்தி ,  தோன்றும். .உலகத்தை ........பார்ப்பதும்   அதன்  வழியே!  இந்த  சக்தியே  என்னுள்  மனசாகவும் ,  வெளியே  புலன்களின்  வழியே   பிரபஞ்சமாகவும்   தெரிகிறது.

பிரபஞ்சமாக  தெரிகின்ற  வஸ்துவே .........உள்ளே  மனசாகவும் ,  மனசு  அடங்கும்  போது , உள்ளே   நிச்சல  ,  பிரகாசமான   வஸ்துவாகவும்   பிரகாசிக்கிறது .  இந்த   நிச்சலமான  வஸ்துவை   ஆத்மா ,  புருஷன் .......சிவன்   என்கின்றனர் .  இதில்  சலனம்  ஏற்பட்டு  வெளியில்   தெரிவதை   சக்தி ,  பிரகிருதி ...........லோகம் , உலகம்   என்கின்றனர் . இந்த   இரண்டையும்  ஒன்றாக்கி  பரமேஸ்வரன் ...........நாராயணன் ........என்ன   பேர்  வேண்டுமானாலும்   சொல்லலாம். ரெண்டும்   ஒரே   வஸ்து  தான் !

சமுத்ரத்தில்   அலை  மோதும்  பொழுது  எப்படி   அலையும் , குமிழியும், நுரையும்    ஒரே  பொருளில்  இருந்து  வந்ததோ   அதே  போல ..........

இந்த   நிச்சலமான   ஆத்மாவில்  இருந்து   வந்த  மனசும் , பிரபஞ்சமும்  ஒன்றின்   மூலத்திலிருந்து   வெளிவந்ததே.



சௌந்தர்யலகரியில்   ஆச்சாரியாலும்     மனஸ்த்வம்    எனத்  தொடங்கும்   பாடலில்  இதனையே   மனது , ஆகாயம் ,வாயு ......... என பஞ்ச பூதமாக  அந்த  வஸ்துவே ..... பிரபஞ்சம்  என  விரிவதாக  சொல்கிறார்.

விஷ்ணுசஹஸ்ஹர  நாமாவிலும்   முதல்  நாமாவான  விஸ்வைஸ  நமஹ   என்பதன்   அர்த்தமும்   இப்போது   நன்கு  புரியும்.

விஸ்வத்தோட  ரூபத்தில்   பகவான்  தான்   இருக்கிறான்  .............வேறென்ன !

முதலில்  இந்த   விஸ்வம்   மாயை ,  திருஷ்யம்  .......என்று   விலக்கி   உள்ளே  சென்று .............இது   மனம்   உதித்தால்   தெரிவது ,   இந்திரியங்களால  தெரியக்கூடியது .......   விலக்கி , விலக்கி ....,  விசாரித்து .........திருஷ்யத்திலிருந்து    திருக்குக்குப் ( பார்க்கிறவனுக்கு ) போறோம்.

 ' நான் '  என்ற   உணர்வுக்கு   போறோம். இந்த   உணர்வை   சாட்ஷாத்காரம்   செய்துவிட்டோமானால் ,  அப்புறம்   இந்த   திருஷ்யம்  ( பார்க்கப்படுவது )  
இந்த   உணர்வோட   " பாவம் " தான் .

இப்பொழுது  தான்  நன்கு , தெளிவாகத்  தெரிகிறது.......... உள்ளே  இருப்பதே வெளியில்  தெரிகிறதென்பது   ,  இங்கு   எல்லாமே   நாம் தான் ,  ஆத்மசொரூபம்  தான் ,  பகவான்தான் ...........ஆத்மாவிலிருந்து   அன்னியமா   ஒரு  வஸ்துவும்  இல்லை. ஆன்மாவின்   பிரதிபிம்பம்  தான்   எல்லாம் .



யெச்மின்   சர்வாணி   பூதாநி  .............தத்ரகோ   மோஹஹா   சோஹஹா 



ஞானியின்   நிலையை   உபநிஷத்   கூறுகிறது ..........." யாருக்கு  எல்லாம்  ஆத்மசொரூபமாகத்  தெரிகிறதோ ,  அவனுக்கு   அங்கே   மோஹமெங்கே ?  சோஹமெங்கே ?  அவன்  யாரை  வெறுப்பது ?  யாருக்கு  சொந்தம் ? அவன்  இங்கே   செய்யறதுக்கு   என்ன  இருக்கு ?  


அவனுக்கு  ஒரே   ஆத்மாவில   தெரியற   பிரதிபிம்பம்  தான்  எல்லாம் ........ அவனுக்கு   அன்னியமா   ஒரு   வஸ்துவும்  இல்லை !

இந்த   நிலையை   ரெண்டு  விதத்துல  அடையலாம்   

ஒண்ணு   நேரடியாக   ஆத்ம விசாரம்   பண்ணி   அடையலாம் ,  மற்றொன்று  இதை   ஒத்துக்கொண்டாலே  போதும். இதற்கு   தகுந்த படி   உலக  விவகாரங்களில்   ராஹத் துவேஷம்   நீக்கிட்டாலே  போதும்.

இதுக்கு  practical sidela   பாகவததுல   உத்தவருக்கு   உபதேசம்   செய்யும்  விதமாக   பகவான்  சொல்றது ..............

" உத்தவா !  இந்த   தத்வம்   உனக்கு   சாட்ஷாத்காரம்   ஆகணும்னா ..........basically   யாரையும்   பத்தி  எதுவும்   பேசாதே !

ரொம்ப  simple  teaching........ ஆனா  ரொம்ப  கஷ்டம் ! நடைமுறைல ......!

யாரையும்   துதிக்கவும்  செய்யாதே !  நிந்தை  பண்ணவும்   செய்யாதே !   

எது  பண்ணினாலும்    ஆத்மாவிலிருந்து   அன்னியமா  ஒரு  வஸ்துவை  கொண்டு  வந்தாச்சு !

அதனாலதான்  ஞானிகள்  இயல்பா   அந்த  நிலைல  இருக்கிறார்கள் ....ஒரே  ஒரு  பொருள்  தான்  இருக்கு ,  அன்னியமா   எதுவும்  இல்லை   என்ற   நிலை  அவர்களுக்கு   சஹஜமா ,  naturala  இருக்கு.  யாரையும்   துதிப்பதும்  இல்லை ,  எவரையும்   நிந்தை  பண்ணுவதும்  இல்லை . யாரைவிடவும்  மேலயும்  இல்லை ,  கீழெயும்  இல்லை...........ஒரே  வஸ்து  தான்  இருக்கு    என்பதே   அவர்கள்  நிலை !


யார்   மற்றவரை  பற்றி   நிந்திக்கவோ ,  துதிக்கவோ   செய்றானோ ,  அவன்  சாட்ஷாத்காரத்திலிருந்து  நழுவிடுவான் ...........கீழே   விழுந்திடுவான் !


 அசத்   அபிநிவேஷகா .....................


அசத்தில   அவன்   விழுந்திடுறான் !

எனவே  விவகாரப்  பிரபஞ்சத்துல   எல்லாம்  பகவத்  சொரூபம் ! இந்த   தத்துவத்தை   ஒத்துக்கொண்டு   அஹங்காரம்   உதிக்காமல்   விவகாரம்  பண்ணினோமானால்  ஜகத்  பூரா   ..............கண்ணாடி   மாதிரி  என்ற  அனுபவமே   சாட்ஷாத்காரம்  கொடுத்திடும்.

ஆத்மஞானதுக்கு  ஒரே   விக்னஹம்   அஹங்காரம்  தான் !  அபிமானம்  தான் !

அதனாலதான்   பாகவததுல .........பகவான்   இன்னொரு   சாதனையும்  சொல்கிறார் .....

அதுல .

எல்லாரும்  பகவத்  சொரூபணும்  சங்கல்பம்  பண்ணிட்டு  நமஸ்காரம்  பண்ணு .........

இந்த  அபிமானம்  அழியரதுக்கு  மருந்துன்னு   சொல்றார்.  கழுதையாக  இருக்கட்டும் ,    குதிரையாக  இருக்கட்டும்.  நல்லவனாக   இருக்கட்டும் ,  கெட்டவனாக  இருக்கட்டும் ..........எல்லாமே   ஆத்மசொரூபம்ணு  சங்கல்பிசிக்கிட்டு  நமஸ்காரம்  பண்ணனும். இந்த   ' பாவம் '  உனக்குள்ள   வர வர  நமஸ்காரம்   பண்ணு.

யாரு  நமஸ்காரம்  பண்றா ?   யாருக்கு  நமஸ்காரம்  ?  அஹங்காரம் ....ஆத்மாவுக்கு   நமஸ்காரம்   பண்றது !

யாரும் ,...........யாருக்கும்   பண்ணல !  நமக்குள்ள   இருக்குகிற   அஹங்காரம்   ...........ஆத்மாவுக்கு  நமஸ்காரம்  பண்றது.

ஞானி   தனக்குள்ள   அஹங்காரம்   முளைக்கவே  விடறதில்ல .........தனக்குள்ளே   எப்பவும்   இருக்கிறதால   அவன்   எப்போதும்   நமஸ்காரம்   பண்ணிட்டே  இருக்கான். அஹங்காரம்   உதிக்காம   இருக்கறதுதான்   உண்மையான   நமஸ்காரம் !


pre - judgement  இல்லாம  இருக்கறது ,  தன்னோடதுன்னு   எதுவும்  இல்லாம   இருக்கறதுதான்  ..........உண்மைல   ஆத்மாவா    இருக்கறது . 

கண்ணாடில  தெரியற  பிரதிபிம்பம்  தான்   என்  முன்னால  இருக்குனு ......
என்னோட   ஆத்மாதான்   எதிர்ல   மனிதரா , உயிரினமா  இருக்குனு  தெரிஞ்சிகிறது .........அனுபவமாக  உணரும்போது ............

இரண்டு  இல்லாத   ஆத்மா   ஒன்றே  இருக்கு !


என்  குடும்பத்தில  இருக்கிறவங்களே   எதிரியா  இருக்காங்கன்னா .......என்னுள்  உள்ள   ஏதோ  வாசனை  ஒன்று   அவர்கள்   மூலமா  வெளியில்  நிகழ்வாக  (  கண்ணாடில   உருவம்  தெரிவது  போல )
 நடந்து   ஏதோ  கணக்கு    தீர்க்கப்படறது !  ஆபீஸ்ல   மேலதிகாரி   கோபிக்கிறான ...............ப்ராரப்தம்   ஏதோ  தொடர்பு படுத்தி   ஏதோ   தீர்க்கப் படுது. எனக்குள்ளேயும் ,  அவனுக்குள்ளயும்   ஏதோ  connected  ஆக  இருக்கு.


எனக்குள்   உள்ள   வஸ்துவோட  reflection  தான்   அவன். அவனை  அப்படியே   ஏற்றுக்கொள்.  அவனும்   ஆத்மசொரூபம்னு  ஏற்றுக்கொள் . அவனிடம்   வாங்கவேண்டிய   திட்டுகள்   எல்லாம்  அமைதியாக ,  எந்த  எதிர்ப்பும்   இல்லாமல்   வாங்கிக்கொண்டாய்   எனில் ,  

ப்ராரப்தம்   இருவருக்கும்  உள்ளது   தீர்ந்துவிடும்.  தீர்ந்தால் ......அவன்  மாற்றப்படலாம் ,  நாம்   மாற்றப்படலாம் ,  அல்லது   அவனே   மாறி  விடலாம்.


 பிரபஞ்சம்   பூராவும்   உள்ளதான்   இருக்குங்கற   தத்வதோட  இரகசியம்  நம்மள   centre  ஆ  வச்சுக்கிட்டு   உலக  விவகாரம்   பண்றதுக்காக !


இதுதான்   பக்தில  "  எல்லாம்   பகவான்  இச்சை "   என்கிறோம்.

எனவே  உள்ள  அன்பு   உருவானால்  வெளியவும்  அன்பு  பெருகுகிறது ,  வெறுப்பு   உள்ளே  எழுந்தால்   வெளியில்   ஏதோ   ஒரு  வடிவில்  அது   திரும்ப   வருகிறது.


அதனால்  தான்  பகவானும் ,

ஒருவனாம்   உன்னை  ஒளித்  தெவர்   வருவார்  
உன்  சூதே  இது  அருணாச்சலா !

என்கிறார் தாயுமானவரும்  இதனை ..........

தன்மயமாய்   நின்றநிலை  தாமே  தானாகி  நின்றால் 
நின்மயமாய்  எல்லாம்  நிகழும்  பராபரமே !

என்கிறார்.


 என்னோட  தொடர்புடைய  எதுவும் ,  எவரும்  என்னுள்  உள்ள  வாசனையின்   பிரதிபிம்பம்  தான்  வெளியில் உருவமாக  வைக்கப்பற்றுக்கு ..........பகவானே!  நீ  தானே இதெல்லாமா  இருக்க !


இரண்டாவதா  உன்னவிட  எதுவுமில்லையே ! 
எல்லாமே  நீதானே !





              
   






Sunday, February 1, 2015

நம்பிக்கையே சரணாகதி

இறைவனை  அடையும்  எளிய  வழி :


சாதாரண மானுடராய்ப் பிறந்து, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, இறைத் தேடலின் விளைவாய் இல்லறம் துறந்து இந்தியா முழுமையும் சுற்றி, அனுபவம் பெற்று, இறுதியில் தன்னையும் இறைவனையும் உணர்ந்து மகாஞானியாய் முகிழ்த்தவர் பகவான் யோகி ராம்சுரத்குமார். இறைவனை அடைவதற்கு சாதியோ, மதமோ, கல்வியோ, செல்வமோ தடையில்லை. படித்தவர், பாமரர் என அனைவரும் இறைவனை அடைய முடியும். அதற்குத் தேவை இறைவன் மீதான நம்பிக்கையும், சரணாகதியும், அவர் நாமத்தைப் பாராயணம் செய்வதும்தான் என்பதை உலகுக்கு அறிவித்தவர்.
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே பிரார்த்தனை;
இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம்;
இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே சமாதி;
அதுவே சரணாகதி


– என்று வலியுறுத்திய யுக புருஷர். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொண்ட வள்ளல். விசிறி, கொட்டாங்குச்சி, தலைப்பாகை, சால்வை என்று மாறுபட்ட தோற்றத்தில் வலம் வந்த மகா சித்தர்.

யோகி ராம்சுரத்குமார் – வாழ்க்கையும் உபதேசமும் – அரவிந்த் சுவாமிநாதன்-சூரியன்  பதிப்பகம் - நூலிலிருந்து ........

நூல் கிடைக்குமிடம் :
சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191
ஆன்லைனில் வாங்க: