Thursday, March 30, 2017

என்ன கூட்டு இனியே !

நல்ல  நட்பைபெற : 
                 
      Image result for abirami pattar photo 

                            மிகச்சமீபத்தில்  ஒரு  குழந்தை  தினமும்  சத்சங்கத்திற்காக  வந்து  இதனுடன்  பேசும். இன்று  வருத்தத்துடன்  வந்தது, என்ன  விஷயம்  என்று  வினவ ..............நல்லவர்கள்  என  நினைத்து  பழக  அது  சில  துயரங்களை  தருவதாக  வருந்தியது. தவறு  என்று  தெரிந்தால் ........எத்தகைய  பலன்  அதன்  மூலம்  கிடைத்தாலும்  வேண்டாம்  என  ஒதுக்கிவிடுமாறும்  கூறிவிட்டு ........." கூடா  நட்பு  கேடாய்  முடியும் " என்பதையும்  வலியுறுத்தி ,.....

                 நிறைய  ஜபம்  செய்தலே ..................உள்ளுணர்வு   நன்கு  வலியுறுத்தும்  எனவும் , அவர்களை   நினைக்கும்போதே  உள்ளே  அமைதியற்ற  நிலை  உண்டானால் .......நமது  உணர்வோடு   ஒத்துபோகவில்லையானால் ......அவர்களால்    ஒருவித  அமைதியற்ற  தொந்தரவுகளை  உள்ளே  உணரலாம் என்றும்  அதே  நேரத்தில்  அவர்கள்  நல்லோர்கள்  ஆனால்  அவர்களை  நினைத்தவுடன்  மனதில்  அமைதியும் , சாந்தியும்  பெருகும்  என்றும்   கூறி   கீழே வரும்  அபிராமி  அந்தாதியை  தினசரி  12 முறை  பாராயணமாக  சொன்னாலே  தீய குணமுள்ளோர்கள்  நமது  நட்பு  வட்டத்திலிருந்து  விலகிவிடுவார்கள்  என  கூறி  அக்குழந்தைக்காக  அன்று  பிரார்த்தனையும்  செய்தது.........

Image result for abirami pattar photo

அபிராமி  அந்தாதி : பாடல் 79.

        விழிக்கே  அருளுண்(டு )  அபிராம  வல்லிக்கு  வேதம்  சொன்ன 
            வழிக்கே    வழிபட   நெஞ்சுண்(டு )  எமக்(கு ) அவ்   வழிகிடக்கப் 
            பழிக்கே   சுழன்று   வெம்பாவங்களே   செய்து   பாழ் நரகக் 
            குழிக்கே   அழுந்தும்   கயவர்தம்   மோடென்ன   கூட்டினியே .


       அபிராமி   அன்னையே !   உன்னை  வணங்கி  மகிழவே   எமது  கண்கள்  உன்னருளால்  உண்டு. உன்னை  வழிபட  வேதங்கள்  சொன்ன  பல்வேறு   வழிகள்  உண்டு ( ஸ்ரீ  வித்யா  உபாசனை ). ஸ்ரீ  வித்யா   உபாசனையில்  ஈடுபட்டு  ஸ்ரீ சக்ரம் , மஹாமேரு  நவாவரண  பூஜை ,  தர்ப்பணங்கள் , யந்த்ர  பூஜை ,  ஹோமங்கள்  என  பல்வேறு  வழிகளில்   எம்மை  ஈடேற்றிகொள்ள  உன்னருள்  வழிநடத்தி  செல்ல  தயாராக  உள்ளபோது ,  சதா  தீயவற்றையே   பேசி , சிந்தித்து , தீமைகளே ........மற்றவருக்கு   செய்து   அந்தக்  கொடிய  கர்மாக்களால்  மீண்டும் , மீண்டும்    கொடிய  துன்பத்தில்  உழலும் .....பாழ்  நரகக்  குழிகளாகிய  ( கருட  புராணத்தில்  கூறிய  பல்வேறு  கொடிய  பிறவிகள்  மற்றும்  நரகங்களில்  பிறந்து  துன்புறும் )  அத்தகைய  மனிதர்களோடு  இனி  என்ன  நட்பு  வேண்டியிருக்கு ? 

               என   அபிராமி  பட்டர்   பிரார்த்தனை  செய்கிறார் .....இதனை  தினமும்  பாராயணம்  செய்தாலே   குழந்தைகள்  மட்டுமல்ல   பெரியோர்களுக்கும்   தீய  நட்பு  வட்டங்கள்  மெல்ல  விலகிவிடும்.  உத்தமர்கள்   நட்பு  வட்டம்  தானே  அமையும். 

நன்றி : தினமலர்  அபிராமி பட்டர்  படம்.

Wednesday, March 29, 2017

தண்டம், கமண்டலம் எரிந்தது

தண்டம், கமண்டலம்   எரிந்தது :

Image result for sri bhaskararaya pattar

               ஒருமுறை  திரு  பாஸ்கரராய பட்டர்  என்ற  மஹான் ஸ்ரீ வித்யை உபாசனையில்  மிகவும்  சிறந்து  விளங்கினார். இன்று  நம்  எல்லோராலும்  பாராயணம்  செய்யும்  ஸ்ரீ  லலிதா  ஸஹஸ்ரநாமத்திற்கு  முதலில்  வியாக்கியானம்  செய்தவர். இன்றைய  ஸ்ரீ  வித்யை  இவரது  நூல்களை  ஒட்டியே  பலராலும்  பின்பற்றப்படுகிறது  என்றால்  மிகையில்லை.   தேவியின்  அருளை  பெற்ற  உபாஸகர். பால்யத்திலேயே  சரஸ்வதி  உபாஸனையினை  தந்தையிடம்  இருந்து  பெற்ற  இவர்  வெகு  சீக்கிரத்திலேயே   எல்லா  வித்யா  அப்பியாசங்களை  கைவரப்  பெற்றவரானார். 40 கிரந்தங்கள் , மற்றும்  " சௌபாக்ய  பாஸ்கரம் " - லலிதா  ஸஹஸ்ரநாமதிற்கு  விளக்கவுரை  என  எழுதி  ஸ்ரீ வித்யா  சாதனைக்கு  பெருமையினை  ஏற்படுத்தி,  ஆதிசங்கரரின்  வழியையும்  ஒட்டி  வாழ்ந்த   அத்வைத  சாதகரும்  ஆவார்.

Image result for sri bhaskararaya pattar

             தமது  மனைவிக்கும்  ஸ்ரீ  வித்யையை  உபதேசித்து  அவரையும்  அந்த  ஸம்ப்ரதாயத்தில்  ஈடுபடுத்தினார். சோழ  நாட்டின்  காவிரிக்கரையில் உள்ள   திருவாலங்காட்டின்  எதிர்பக்கத்தில்  ' பாஸ்கரராயபுரம்'  இவரது  பெயராலேயே  அழைக்கப்படுகிறது. பின்பு  திருவிடைமருதூரில்   வசித்து  வந்தபொழுது ,  ஒருநாள்   மஹாதான  தெருவில்  உள்ள  தமது  வீட்டின்  திண்ணையில்  மாலை  வேளையில்  சாய்ந்து  உட்கார்ந்து  இருப்பது  அவரது  வழக்கம். கால்களை  நீட்டி  தூண்களில்  வைத்து  திண்ணையின்  சுவரில்  சாய்ந்து  இருப்பார்.

Related image

             அருகிலுள்ள   வேப்பத்தூரிலிருந்து  ஒரு  சன்னியாசி  தினமும்   பாஸ்கரராயரின்   வீட்டின்  வழியே  ஸ்ரீ  மஹாலிங்கேஸ்வரரை  தரிசிக்க  செல்வது  வழக்கம். எல்லோரும்  அவருக்கு  மரியாதை  அளிப்பர். ஆனால்  பாஸ்கரராயரோ  எழுந்திருப்பதோ ,  மரியாதையோ  செலுத்துவது  இல்லை.  உண்மையில்  தன்னை  மறந்த  ஆனந்த  நிலையில்  இருந்த  அவருக்கு  வெளியில்  நடப்பதில்  அக்கறையில்லை. வெளிப்பார்வை  இல்லை  என்றே  கூறலாம்.

Related image

         ஒருநாள்  இருவரும்  மகாலிங்கேஸ்வரர்  கோவிலில்,  பிரதோஷ  நேரத்தில்  எதிர் எதிராக  சந்திக்க  நேர்ந்தது.  ஏற்கனவே  தன்னை  வணங்கவில்லை  என்ற  கோபத்தில்  இருந்த  சன்னியாசி  மிக  கடுமையாக ...........சாதுக்களை  இவர்  மதிப்பதில்லை  என  எல்லோர்  முன்னிலையிலும்  சண்டையிட்டார்.  பாஸ்கரராய  பட்டரோ  மிகவும்  சாந்தமாக, பொறுமையாக  அவரின்  குற்றச்சாட்டுகளை  கேட்டுவிட்டு .......இல்லற  தர்மத்தின்படி ( இல்லறத்தாரான  அவர்  சாதுவை  எழுந்து  நின்று  வணங்கவில்லை  என்பதே  குற்றச்சாட்டு )  தாம்  அவரை  வணங்கினால்   அவரது  தலை  வெடித்து  சிதறிவிடும்  என்றும்,  அவரது  உயிரை  காப்பாற்று தற்காகவே   தாம்  வணங்கவில்லை  என்றார். சன்னியாசி  நம்பாமல்  வாதாட, எல்லோர்  முன்னிலையிலும்   சந்நியாசியின்  தண்டம் , கமண்டலத்தை  கீழே  வைக்க  சொல்லி  அதனை  வணங்கி  எழ ..............கமண்டலமும் ,  தண்டமும்  வெடித்து  சிதறின.
                     
                               பாஸ்கரராயரின்  பெருமையை  உணர்ந்த  சன்னியாசி,  தன்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ள ...........பாஸ்கரராயரும்  அவரை   மன்னித்து  அருளினார்.  அதுமுதல்  அந்த  சன்னியாசி  வரும்  நேரத்தில்  பாஸ்கரராயர்  வெளியே  திண்ணையில்  அமர்வதில்லையாம். எப்படிப்பட்ட  மஹான்கள்   இந்த  பூமியில்  வாழ்ந்துள்ளார்கள்.

நன்றி : ' மந்த்ர  ஆராதனை ' -நூல் 
பரமஹம்ஸ  பரத்வாஜ  ஸ்வாமிகள்.

Sunday, March 26, 2017

பஞ்சபூத ஸ்தல பாத யாத்திரை அனுபவம்

உத்தம  பிஷை : 

Image result for bhiksha
  

                அது  ஒரு  கோடைகாலம், 1995-ம்  ஆண்டு  மே -மாதம்,
ஆசிரியராக  பணியாற்றிக்கொண்டு  இருந்தபோது  நண்பர்களாகிய  சிவபெருமானின்  அடியவர்கள்  13 பேர்  சேர்ந்து  பஞ்ச  பூத  ஸ்தல  பாத  யாத்திரையை  இளைஞர்கள்  திருநணா  என்னும்  பவானி  தலத்திலிருந்து  தொடங்கினோம். பவானியில்  ஆரம்பித்து, 1. திருஅண்ணாமலை , 2. காஞ்சிபுரம் , திருப்பதி  வழியாக 3. காளஹஸ்தி,  சென்னை ,பாண்டி -கடலூர்  வழியாக  4.சிதம்பரம், மாயவரம் , கும்பகோணம் ,தஞ்சை  வழியாக திருச்சி -5. திருஆனைக்கா,  கரூர்  வழியாக  மீண்டும்  பவானியில்   பாதயாத்திரை  நிறைவுபெற்றது.

                தினசரி  40km. நடந்து முடிப்போம்...இவ்வாறாக  சுமார்  46 நாட்கள்  பாத யாத்திரை  எம்பெருமானின்  கருணையினால்  நிகழ்ந்தது. எண்ணில்  அடங்கா  அனுபவங்கள்...............பக்குவங்கள்   கிடைத்தன. ஒரு   2 குயர்  நோட்டு  வாங்கிக்கொடுத்து,  ஒரு  பெண் அடியவர்   தங்களின்  எல்லா  அனுபவங்களையும்  எழுதிக்கொடுங்கள்  என்றார்.  சரி, என்று  தினசரி  ஓய்வு  எடுக்கும்  நேரத்தில்  சிரத்தையாக  எழுதி  வந்தோம்.  ஆனால்  இறைவனின்  விருப்பம்  வேறுவிதமாக  இருந்தது. ஆம் , புயலால்  சென்னை  செங்கல்பட்டு , விழுப்புரம் வரை  தொப்பலாக  தொடர்ந்து  மூன்று  நாட்கள்  10 to 12 மணிநேரம்  மழையில்    நனைந்தால்  நோட்  நீரில்  ஊறி  பயன்படுத்தமுடியாதபடி  ஆகின. நீரினில்  ஊறிய  பிணம்  போன்று  எங்கள்  எல்லோரின்  நிலையும்  இருந்தது.  கைவிரல்  தோல்கள்  எல்லாம் நீரில்  தொடர்ந்து  ஊறியதில் உரிந்து  வரும்  அளவுக்கு  மாறியிருந்தன.  ஆனால்  ஒருவருக்கும்  சிறு  சளியோ , காய்ச்சலோ  இல்லை.

                தினமும்  காலையும் , மாலையும்  பாராயணம்  உண்டு.  ஓரிரு  நாட்களில்  பேச்சுக்கள்  குறைந்து, மானசீக  " பஞ்சாட்சர " ஜபம்  மட்டுமே  ஓடிக்கொண்டு  இருக்கும். வேறு  எதுவும்  எண்ண  முடியாது .......கால்களில்  தோல்கள்   உரிந்து ......மீண்டும்  மீண்டும்  நடப்பதால்  ( தார்ரோட்டில் .....மேமாதம் )..........கீழே  இறங்கி  மண்பகுதியில்  நடந்தால் ................சிறு ,சிறு  மணல்  துகளும், சிறு கற்களும்   தோலுரிந்த   கால்களில்  பட்டு.............உச்சந்தலையில்  சுள்ளென்ற  வலியில் ............நடக்கும்போது ...........

            வேறு  வழியே இல்லை !........" பஞ்சாட்சர " ஜபம்  கண்டிப்பாக  ஒவ்வொரு  அடிக்கும்  உள்ளே  நிகழும்.  இப்படித்தான்  தொடர்ந்து  பஞ்சாட்சர  ஜபம்   செய்யும்  பழக்கம்  ஏற்பட்டது.

          எத்தனையோ  அனுபவங்கள்  இருந்தாலும் , ஒரூ  அனுபவத்தை  இங்கு  பகிர்ந்து கொள்கிறோம். ஆந்திராவில்  நக்ஸல்  பிரச்சனை  உள்ள  அடர்ந்த  காடுகளில்  நடந்தது.  ரோந்து  வந்த DSP அந்தஸ்தில் உள்ள  ஒரு  அதிகாரி  எங்களை நிறுத்தி, எங்களின்  யாத்திரை  பற்றி  விசாரித்து  மிகக்  கடுமையாக (பாதுக்காப்பு  கருதி   அக்கறையோடு ) திட்டியது ......( நாங்கள்  எல்லோரும்  இளைஞர்கள்.... 10, 12ம்  வகுப்பு  முடித்த  மாணவர்களும்  எங்களுடன் ) பின்னர்  அவரது  காவல்  எல்லைவரை  பாதுகாப்பு    அளிக்கச்செய்து , தங்குவதற்கு  பள்ளிக்கூடங்களில்  ஏற்பாடு  செய்து......முடிவில்  எங்களின்  யாத்திரை  நோக்கத்தினை  புரிந்ததால்   தனது  குழந்தைகள் , குடும்பத்திற்காக   பிரார்த்தித்து ........எங்கள்  எல்லோரின்  கைகளாலும்  விபூதியினை பெற்றுக்கொண்டு  சென்றது .............................என  எண்ணிலடங்கா  அனுபவங்களுக்கிடையே   கீழ்கண்ட  அனுபவம்  மறக்கமுடியாது.

Related image

        மாலைநேரம்  அது ........ பவானியிலிருந்து  திருவண்ணாமலை  சென்றபோது, அரூர் - தீர்த்தமலை  வழியாக  சென்றபோது  மலைகளை  ஒட்டிய  ஒரு  குக்கிராமம்   நெருங்கினோம்....இரண்டு  இரண்டு  பேராக  சென்றோம். கடைசியாக சென்ற  நால்வரில்  இவனும்  ஒருவன். அப்போது  எங்கள்  நண்பர்  ஒருவருக்கு  சிறிதே  மயக்கம் , சோர்வு   ஏற்பட்டதால்   சாலை  ஓரம்  அமர்ந்து ,  மற்றவர்களை  அடுத்துவரும் கிராம  எல்லையில் அனைவரும்  சாப்பிட்டு  ... காத்திருக்க  சொல்லி  அனுப்பிவிட்டு ....இவருக்கு   அருகே ஒருவரும் .....மற்ற  நாங்கள்  இருவரும்  அவருக்கு  ஏதேனும்  அருந்துவதற்கு  ஏற்பாடு  செய்யலாம்  என்று  நினைத்து  அருகிலிருந்த  ஒரு  ஏழைக்   குடிசையினை  அணுகினோம். மலை, மாலைநேரம்,..... வயலை  ஒட்டிய  சாலை ....நாள்முழுதும்  போக்குவரத்து  அரிதான  சாலை  அது.  ஒரு  குடிசையின்  வாசலில்  ஒரு  தாய்   பிறந்த சில  நாட்களே ஆன  குழந்தையினை  வைத்து சோகத்தோடு  அமர்ந்திருந்தார். 


             எங்களை  பார்த்ததும்  அவருக்கு  சிறிது  மகிழ்ச்சி,....எங்களின்  யாத்திரை  அறிந்ததும் ....சோர்வோடு  இருந்த  நண்பருக்கு  வெளியே  கட்டிலை  போட்டுவிட்டு  அவரை  அழைத்துவந்து  ஓய்வு  எடுக்கும்படி  பணித்து  விட்டு ....வந்துவிடுவதாக  கூறிவிட்டு குழந்தையை சற்றே  பார்த்துகொள்ள   சொல்லிவிட்டு வெளியே சென்றார்.........குழந்தை .........உறங்கிக்கொண்டு  இருந்தது....அவர்  
 சென்று ........அருகிலிருந்த  வீட்டில்  அரிசி  வாங்கிவந்து  கஞ்சி  வைத்து  அடியவருக்கு  கொடுத்தார். கணவர்  வடநாட்டுக்கு சென்றுள்ளார் ....லாரி ஓட்டுநர் ....வறுமை .....அந்த  அம்மா  காலையிலிருந்து  எதுவும்  சாப்பிடாமல்  இருந்துள்ளார் .........

                என்னிடம்    கஞ்சிதான்   இருக்கு .........குடிப்பீங்களா ? என்றார். நண்பரின்  நிலையோ  ரொம்பவும்  மோசம்.  எது  கிடைத்தாலும்  ஈஸ்வர  கருணை ...............ஏனெனில்  அன்று  வழியில்  கிணறு  ஒன்றில்  குளித்து, (கிணற்றில் நன்கு  ஆட்டம் போட்டனர் )  துவைத்தத்தில்   வெயில்  காலம்  ........மதிய  உணவு  ஏற்பாடு  செய்வதற்குள்  வெய்யிலில்  மாட்டிக்கொண்டோம்.
சாப்பிடவில்லை ........வெயிலில்  நடந்து , குளித்து , துவைத்து   வந்ததால், பசி ........ஆம்  அந்த  பசியில்  அந்த  அன்னை யிட்ட பிக்ஷை  கஞ்சி  ..................அமிர்தம்  போன்றது ............அதுபோன்ற  சுவையும் ,  திருப்தியும்  அதன்பின்பு  இன்று  வரை  எந்த  உணவிலும்  கிடைக்கவில்லை ......பல்வேறு  ஆசிரமங்களில்  சாப்பிட்டு  இருந்தாலும்  அன்று .....தான்  பசியோடு  இருந்தும் .........பாதயாத்திரை  செல்லும்  அடியவர்கள்  என்று .........( அவரின்  தந்தை  இரவு  வந்து  அரிசி  தரும் வரை )  பசியோடு   இருந்தும்  பிச்சையாக  அருகில்  இருந்த  வீடுகளில்  அரிசி  வாங்கிவந்து  அன்னம்  பாலிட்ட  அன்னையின்  கண்களில்  திரண்டிருந்த  நீரை  இன்னும்  மறக்கமுடியவில்லை.  பின்னர்  விசாரித்து  தெரிந்ததில்  அவரும்  சாப்பிடாமல்  அன்பர்களுக்கு   அன்னமிட்டபின்பே  அவரும்  மீதிகஞ்சியை  அருந்தினார்.

Image result for ramana maharshi pictures

            17 -நாட்களே  ஆன  குழந்தையை  எங்கள்  கைகளில்  கொடுத்து  ஆசீர்வதிக்கவேண்டி ...........அவனுக்கு  (ஆண்குழந்தை ) பெயரிட  வேண்டினார். அவர்  எங்களுக்காக  பிச்சையெடுத்து  வந்துள்ளார்  என  அருகிலிருந்து  வந்தவர்  சொல்ல ...........எங்களுக்குள்  நெகிழ்ச்சி .................

        பாராயணம்  செய்து ......தேவாரப் பதிகங்களும்  பாடி .........அக்குழந்தைக்கு " திருஞானசம்பந்தம் " எனப்  பெயரிட்டபோது  அவரின்  தந்தையும்  வந்து  சேர்ந்தார். எளிமையான  தேவாரப்  பதிகம்  அளித்து ........ ' பஞ்சாட்சரம் '  தினசரி  கூறுங்கள் ,......வாழ்க்கை  சூழல்  மாறும்  எனக்  கூறி  அண்ணாமலையரிடம் பிரார்த்திப்பதாக  கூறி   அவ்விடம்  விட்டு  நடந்தோம்.


Image result for indian sadhus begging

 ரமண  பகவானின்  மலை  வாசம்  செய்த   ஆதி  நாட்களில் , எளிய  ஏழைமக்கள்   அளித்த  கஞ்சி  மற்றும்   தமது  அண்ணாமலை  முதல்  பிஷை  பற்றிய  நினைவுகள்  நண்பருடன்  பேசியபோது, எங்களின் 
மறக்க  முடியாத  இந்த  பிஷை  அனுபவத்தை  இருவரும்  பகிர்ந்துகொண்டோம்.



Saturday, March 25, 2017

கடைசி பிறவி!

ஸ்ரீசக்ர  பூஜையும் , கடைசி  பிறவியும் :




                ஒருவருக்கு  ஸ்ரீ சக்ர பூஜை  செய்ய  ஏற்படும்  விருப்பம்,  மற்றும்  அதனை  பற்றி  அறியும்  ஆவல்  ஏற்படுவதே  அவர்களின்  முந்தய  பிறவிகளின்   புண்ணியங்கள்  கைகூடியதால்.........மற்றும்   நற்செயல்களின்  விளைவுகளால்  லலிதாம்பிகையின்  கருணை  பார்வை  அவர்கள்  மேல்  விழுந்ததால்  மட்டுமே அரிதினும்  அரிய வாய்ப்பு  பெறுவர்  என்பதே   ஸ்ரீ  சௌந்தர்யலஹரீ  -யில்  ஸ்லோகம்   11, மற்றும்  12- ல் ,  ஆதி  சங்கர  பகவத்பாதாள்  அவர்களின்  வாக்கும்   ஆகும். அத்தகையோருக்கு   அதுவே  கடைசி  பிறவியாகும்   என்பதே  சிவமே   தாமாய்   வந்த  .......சங்கரரின்      ( பகவத்பாதாளின் )  வார்த்தையால்   அறியலாம்.

          சமீபத்தில்  மிகவும்  பழமையான  பதிப்பு  - 1924,  ஏழாவது  பதிப்பு -1968.......... தேதியூர்  சுப்ரமணிய  சாஸ்திரிகளின்  
ஸ்ரீ  சௌந்தர்யலஹரீ  விளக்கவுரை  -  இதனில்  மிகவும்  விஸ்தாரமாக ஸ்ரீ  சக்ர  பூஜை, மஹாமேரு ......அந்த  பூஜைகளை  பஞ்சதசீ  உபதேசம்  பெற்று  செய்யும்  சாதகனின்  நிலை  பற்றி விவரித்துள்ளார்.  

               ஸ்ரீ  ஷோடசாக்ஷரி     உபதேசம்  பெற்று  44 கோணங்களுக்கும்   முறைப்படி  பூஜை  செய்பவனாய்  44,000 ஜெப   ஆவிருத்தி  செய்பவருக்கு  ஏற்படும்  அளவற்ற ,.........பயன்களை  என்ன  சொல்ல ?

Image result for athi sangarar


முறைப்படி   பூஜை  செய்பவருக்கு ..........இதில்  சற்றே  விரிவாக  காண்போம்.

           முறைப்படி என்பதில்  ...............மடியாக ,  ஆச்சாரமாக ...சரியான   மந்த்ர  உச்சரிப்புகள்  செய்பவராக ....தவறாமல் .......  சிரத்தையாக ......(bhavam) பாவத்துடன் .....உண்மையாக  பூஜையை   செய்தல்  என்பது  அடங்கும்.   இன்னும்  சொல்லப்போனால்  என்னுடைய  அநுஷ்டானங்களை   விடாமல்  செய்வதற்கு  உள்ளே   ஒரு  வைராக்கியத்தோடு, அடமாக  இருத்தல் ...........

மடி  மற்றும்  ஆச்சாரம் : 
                                 
                           நமது  தேகத்தை  அம்பிகை  வசிக்கும்  இடமாக  இருப்பதால் .........அங்கு  சில  ஒழுங்கும் , தூய்மையாகவும்   கடைபிடித்தல்  அவசியம். 



Image result for maha periyava high resolution photos


மஹா பெரியவா  கூறியதைப்போல ....

  தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: 
                     ப்ரோக்தோ  ஸநாதன:|


தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.
ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.


ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் "ஆசாரம்"என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற 'மடி'அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்;சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் (நெற்றிக்கிடுதல்) பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு (ஹோட்டலுக்கு) ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.
இப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுபடி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.
ஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்*. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.
'ஆசாரம்'என்பதைத் தமிழிலே நேராக 'ஒழுக்கம்'என்று சொல்லிவிடலாம். "உயிரினும் ஓம்பப்படும்"என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா?
இங்கிலீஷில் ' character' என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும்,
'conduct' என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை ஸம்ஸ்காரங்களை, சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.
புற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே 'ஆசாரம்'. 

Image result for maha periyava high resolution photos


ஆசார விஷயங்கள்
புறத்திலிருந்து அகத்துக்கு


புறம் என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக, வேதாந்தமாகப் போகிறபோது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீனமாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக்கொண்டு, புழுத்துப் போனதைத் தின்றுகொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும், ஆஹாரம் இப்படியிப்படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்தமான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் 'புற'த்திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது. நாம் இருக்கிற நிலையில் இப்படிப் புறசுத்தியில் கண்டிப்பும் கறாருமாக இருந்து ஆரம்பித்தால்தான், அப்புறம் என்றைக்கோ ஒருநாள் அந்த ஞானிகளுடைய நிலைக்குப் போகலாம். என்பதற்காகவே, அதாவது முடிவிலே முழுக்க ஆத்ம லோகம் என்கிற அகவாழ்விலே சேர்கிறதை லக்ஷ்யமாகக் கொண்டே சரீரம், வீடு, சுற்றுப்புறம் முதலான புற விஷயங்களின் சுத்தத்திலிருந்து ஆரம்பித்து ஆசாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வெளிவிஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடிஸ போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும். ஆசாரம் ஆத்ம ஸாக்ஷ£த்காரத்தை உண்டாக்கி விடவில்லை என்று இந்த நாள் வேதாந்திகள் சொல்கிறது நிஜந்தான். அதாவது, உடனே, நேர்பலனாக உண்டாக்கவில்லை என்பது நிஜந்தான். ஆனால் என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜமான வேதாந்திகளாக ஆக வேண்டுமானால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர-குடும்ப-ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்துஸ இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படி பண்ணிக்கொண்டு போனால்தான் முடியும். ஆசாரமேயில்லாமல் ஆத்ம ஸம்பத்தை ஸம்பாதித்துக் கொள்வது என்பது எந்த ஒரு நாளுமே அந்த 'ஐடியல்'நிலைக்குப் போக முடியாமல், நம்மைக் கெடுப்பதில்தான் முடியும்.
" ஆசார ஹீநம் ந புநந்தி வேதா :"- அதாவது, ஆசாரமில்லாமல் எத்தனைதான் வேதத்தைப் படித்தாலும் அதனால் ஒருத்தனை வேதம் சுத்தனாக்கி விடாது என்று சொல்லியிருக்கிறது. எப்பேர்ப்பட்ட புண்ய தீர்த்தமானாலும் மண்டையோட்டிலே கொண்டு வந்தால் எப்படிப் பிரயோஜனப்படாதோ, எத்தனை நல்ல பசும் பாலானாலும் நாய்த்தோற் பையில் வைத்திருந்தால் எப்படிப் பானயோக்யமாகாதோ அப்படியே ஆசாரஹீனன் எவ்வளவு வேத சாஸ்திரங்களெல்லாம் படித்தவனாயிருந்தாலும் அவனிடமுள்ள வித்யை அவனுக்கும் உதவாமல் லோகத்துக்கும் உதவாமலே போகும் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. வேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் 'வால்யூ'கிடையாது.
சுத்தர்கள் எப்படி வாழ்கிறார்களோ, தங்கள் வாழ்க்கை யுதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்;'சான்றோர்', 'மேலோர்'எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷ£த்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை*. 


                                - " தெய்வத்தின்  குரல் "  - மஹாபெரியவா !

     

        ....  மந்திரசக்தி  மிக்க  உடலும் , உடுத்தும்  உடைகளும் , பயன்படுத்தும்  அனைத்து பொருட்களும்   ஒரு உபாசகரின்   மந்திர  அதிர்வுகளால்  நிறைந்து  இருக்கும்.

              எனவே  சாதாரணமானவர்கள் ........உலகியல்  எண்ணங்கள்  அதிகம்  உள்ளவர்கள்
 இவர்களை  தொடுவதால் ..........இவர்களால்  அது  அசுத்தமடையும்  என்பதால்  மடியாக ........தானே  துவைத்து,  தானே  உலர்த்தி .....வேறு  எவரும்  தொடாமல்  பாதுகாத்து ..........தானே  சமையல்  செய்து  சாப்பிடுகின்றனர்.  நமது  எண்ணங்கள்  நாம்  தொடும்  பொருள்களில்  எல்லாம்   பதியும்  என்பதால் .....................மடியாக ........மந்த்ர  ஜபம்  செய்பவர்  அனைத்துவிதமான  எண்ணங்களில்  உழல்பவர்களிடமிருந்து   விலகி  ........தங்களது  மந்த்ர  தேக  சுத்தியை   பாதுகாக்கும்  பொருட்டே  தங்களுக்கு  உரிய  பொருள்களையும்  மற்றவர்கள்  தொட  அனுமதிப்பதில்லை  அல்லது  விலகி  இருக்கிறார்கள்.  

               எமக்கு   தெரிந்த  நண்பர்  ஒருவர்  .......ஜெப ,  தவங்கள் .....  பூஜைகளே   வாழ்க்கை  எனக்  கொண்ட  ஒருவர்  .........ஒருமுறை  ஓரிடத்தில்  மற்ற  உலகியல்  மனிதர்  தந்த  உணவை  அன்பினால்  வற்புறுத்தி  அளித்ததை, சாப்பிட்ட  சிறிது  நேரத்திலே  மிகுந்த  அவதிக்குள்ளானார்.  பின்னரே  அவரின்  உலகியல்  எண்ண  அலைகளே  தன்னுடைய  அவஸ்தைக்கு   காரணம்  என்பதை  பகிர்ந்தார். சிறிது  காலத்தில்  அவரைப்பற்றி  நண்பர்  கூறியதை  ஆராய்ந்து  பார்த்ததில்  நண்பரின்  கூற்றே  உண்மை  எனப்  புலப்பட்டது.


                    ஒழுங்கு  நிறைந்த  மந்த்ர  தேகத்தை  கொண்டு  அவர்கள்  பூஜைகள்  செய்வதும் ......அதன்  மூலம்  மிக  எளிதில்  அவர்கள்  மனம்  மிக  உயர்ந்த  நிலையை  எளிதாக  அடைவதற்கே  மடியும், ஆச்சாரங்களும்  அன்றி  .........மற்றவர்களை  வெறுத்து  ஒதுக்கி  வேற்றுமை  படுத்துவதற்காக  அல்ல. அது  வெறும்  பம்மாத்து  வேலை  அல்ல.


                 அதே  நேரம்  மடியாக  இருத்தலையும், ஆச்சாரமாக  இருத்தலையுமே  மிகப்பெரும்  விஷயமாக, தகுதியாக    எடுத்துகொண்டு   மிகவும்   அலட்டிக்கொள்பர்களைக்   கண்டு  வெறுமனே  சிரித்து  அவ்விடம்  விட்டு  அகன்ற  மஹான்களையும்   கண்டதுண்டு.

            முதலில்  வெளியில்  தூய்மை ...பின்பு  உள்தூய்மை  தானே  ஏற்பட்டு ............பூஜைகளால்  மனம்  உயர்ந்த  நிலையில்  எல்லாம்  ஒன்றே  என்று  ஆன  பின்பு   இந்த  மடி ,  ஆச்சாரம்  என்பது   முதல்  வகுப்பே  என்பது  புரிந்துவிடும்.
ஆயினும்  அதுவும்  தேவையே .....மிகவும்  நல்லதே .....ஆரம்ப  சாதகர்களுக்கு ...........தொடர்ந்து  கடைபிடித்தல்  இயல்பாகிவிடும்.

        முதிர்ந்த  நிலையில்  கடைபிடித்தாலும்,  கடைபிடிக்காமல்  போனாலும்  இரண்டும்  ஒன்றே.  ஆயினும்   பெரியோர்கள்  இகழ்வதும்  இல்லை ....வெறுப்பதும்  இல்லை தானும்  கடைபிடித்து,............மற்றவர்களும்  கடைபிடித்து   மேல  வர   ஊக்குவிப்பார்கள்.

                   மந்திர  அதிர்வுகள் , தொடும்  வஸ்திரம்  , பூஜை  திரவியங்கள் , விக்ரஹம் , யந்திரம் ,..........எல்லாவற்றிலும்  படும்  , பதியும்  என்பதால்  மடியாக ,  ஆச்சாரமாக   இருக்க  வேண்டும்  என்கின்றனர்.

Related image
                
       பூஜையை  பற்றி  மஹா  பெரியவா  அவர்கள்  தமது " தெய்வத்தின்  குரல் " நூலில்   கூறியுள்ளதை   கீழே  காணலாம் .

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.
 சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.
      ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதான பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
          இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.
                  இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹணம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.
         ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.
       இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது 'பஞ்சாயதன பூஜை' எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். 'ஷண்மத ஸ்தாபனம்' என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.
          பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
    வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.
 நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.
      நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. 'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமல்லை. 'அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.
எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.
அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!


                       Image result for maha periyava high resolution photos

நன்றி : காஞ்சி  மடம் 
               மஹா  பெரியவா  அவர்களின்  ' தெய்வத்தின்  குரல் '

Friday, March 17, 2017

அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?


ருத்ராக்ஷம் யார் அணியலாம்?

periyva-rare-bharath


ருத்ராக்ஷம் யார் அணியலாம்?
பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பஶுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தர்ஶனம் பெற்றார்.
அந்த உன்னதமான ஶிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.
பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பஶுபதிநாத் ப்ரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.
” பஶுபதீஶ்வரரை நன்னா தர்ஶனம் பண்ணினியா?…”
” பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தர்ஶனம் பண்ணினேன்…”
கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…..
“ஸெரி…. இத.. என்ன பண்ணப் போற?…..”
“பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு….”
இழுத்தார்…..
பெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…
“அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”
ஒரே தடாலடியாக கேட்டார்.
பக்தருக்கு தூக்கிவாரிப் போட்டது!
“ஆஹா! பெரியவா…….. இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!”
இப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?
“இல்ல.. பெரியவா…! ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!.”
“ஏனோ …..?”
“ஏன்னா, நா… ஒரு Bank Oficer. அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. “இப்டி எழுது”…ன்னு எனக்கு மேல இருக்கற officer உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா….”
பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.
பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.
“இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது…. இந்த மாலையைக் குடு!”
பக்தருக்கோ பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!
நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.
“ஆஹா! என் wife சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ!..ன்னு சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா……!..”
ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.
“பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது”
மனைவியிடம் கூறி ஸந்தோஷப்பட்டார்.
கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர்.
கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் ஸொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.
“ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்! அந்த bank-ல ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…”
இந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.
ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் ! இதுதான் பெரியவா திருவாக்கு!

ஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
compiled & penned by gowri sukumar

நன்றி : ஸ்ரீ  மஹா பெரியவா blog
           திரு  மகேஷ்  அவர்கள் 

வாராஹி - உருவிய பட்டா கத்தி :

முடிவு  எடுக்கும் திறமை, வறுமையை  நீக்குதல்,  நோய்  நீங்குதல், அவமானம்  துடைத்தல்  :




             மிகச்சமீபத்தில்  திரு. பாலகுமாரன்  அவர்களின்  வாராஹி  பற்றிய  அனுபவத்தை  youtube - காணொளி  காட்சியில்  கண்டேன். அவர்  ஸ்ரீ  வித்யா  உபாசகர்  என்பது  தெரியும். ஆனந்தமாக இருந்தது.........இவனுடைய  அனுபவங்களுடன்  பல  நிகழ்ச்சிகள்  ஒத்துப்போயின. மனிதனாக  பிறந்தால்  அவமானம்  நிச்சயம் , அதிலிருந்து  காப்பவள்  வாராஹி.  ஆம் , சாக்த  உபாஸகத்தில்  உடம்பினை   அதிரச்செய்கின்ற   ஒரு  மந்திரம்  வாராஹி  ஜபம். மஹா  சக்தி  நிலை   வாராஹி.... வீட்டின்  முன்பும்  பலர்  வந்து  நின்று  சண்டையிட்டு, அவமானப்படுத்தியது ................இவன்மீது  காவல்துறையின்  மூலம்  பொய்  புகாரை  ஜோடிக்கச்  செய்த  முயற்சிகள் ..........வாராஹியை   உள்ளே  பிடித்துக்கொள்ள, ஜபத்தால்  கதற ,  அவை அனைத்தும்  விலகியது...........சம்பந்தப்பட்ட  எதிராளி  பெண்மணிக்கு  அதன்  பின்னர் 6  மாதங்களுக்கு  மேல்  கால்களில்  நடக்க  இயலாத  தன்மை ...................கணவனும் ,  மனைவியும்   மனம்  வெதும்பி  பல்வேறு  இடங்கள்  சிகிச்சைக்காக  அலைந்தது ....... பின்பு  அவர்களுக்காகவும்  குணமாகட்டும்  என  தன்வந்திரி  ஜபம் ,  ஹோமம்  செய்தது ..........நினைவுக்கு   வந்தன.

               எங்கிருந்தாலும்  நல்லதை  மட்டுமே  எடுத்துக்கொள்வோம் என்ற  வேட்கையில்  இதனை  பகிர்ந்துகொண்டோம்.



              வாராஹி  உருவிய  பட்டாக்கத்தி!......அடிப்பதை  தடுத்து  நிறுத்துவது  மட்டுமல்ல,  அடித்தவருக்கு  பாடமும்  நடத்தப்படும் ......என்பன  எம்முடைய  அனுபவங்களும்  கூட ....! இதனை  மாதா  அமிர்தானந்த  மயி  மடம், கொல்லம்   கடற்கரையில்  காலை  முதல்  மாலை   வரை  ஜபம்  செய்துள்ளோம்.  நீங்களும்  பார்த்து  அவற்றினால்  ஏதேனும்  கற்றுக்கொண்டு  வாழ்க்கையை  சத்சங்க  வழியில்  அமைத்துக்கொள்ள  .............................








            நன்றி  ஐயா , மிகச் சத்தியமான  நினைவுகளை  பகிர்ந்து  கொண்டதற்கு ..............


தினசரி  ஜப, தவங்களால்  நமது  நேரத்தை   அமைத்துக்கொள்ள ....................

முதலில்  ஆரம்ப நிலையில்  108 என்று  ஆரம்பித்து ........பின்னர்  தானாகவே  1008  என்று  சொல்லுமளவுக்கு  மனம்  உள்ளே  இழுத்துக்கொண்டு  சென்றுவிடும்.

1. காயத்ரி                   -108
2. கணபதி                   -108
3. பாலா                        -108
4. பஞ்சாக்ஷரீ             -108
5. லக்ஷ்மி                     -108
6. பஞ்சதசீ                   -108
7. ப்ரத்யங்கிரா         -108
8. சாமுண்டி               -108
9. ராஜசியாமளா     -108
10. வாராஹி               -108
11. ஷோடசி                -108
12.சூலினி, வனதுர்கா -108
13. மஹா ஷோடசி       -108

                    மேலும்  இத்துடன்  நேரமிருப்பின்  தன்வந்திரி , சுதர்ஷனம், நரசிம்மர் , சரபேஸ்வரர் , ஸ்வயம்வர பார்வதி, அமிர்தசஞ்சீவிணி, இந்திராக்ஷி  கவசம், புவனேஸ்வரி மந்த்ரம், 
தாரா, தூமாவதி , பகளாமுகி  ...........போன்றவை  அவரவர்  உபாஸனைக்கு  ஏற்ப  ஜபம்  செய்து  முன்னேறிவிட   சனாதன  தர்மம்  இடம்  அளிக்கிறது.


நன்றி : மயிலை  வாராஹி  வழிபாட்டு  சங்கம்.
            திரு  பாலகுமாரன்  அவர்கள்.

Saturday, March 11, 2017

ஸ்ரீ சக்ரத்தின் அவசியம்!

ஸ்ரீ  சக்ரத்தின்  அவசியம் - வரிவஸ்யாரஹஸ்யம் :



           ஓர்  அணுவைப்  பிளக்கும்போது  வெளிப்படும்  மூன்று ஆற்றல்கள்.........

1. எலக்ட்ரான் 

2.புரோட்டான் 
3.நியூட்ரான்      
                           என்பன  நாம் அறிந்ததே.  நியூட்ரான்  என்னும்  உட்கருவை  வைத்தே  எலக்ட்ரான்களும்,  புரோட்டான்களும்  குறுக்கும் , நெடுக்குமாக சுழல்கின்றன. மேலும்  இந்த  எலக்ட்ரான்கள்  ஓர்  அலை  வடிவிலேயே சுழலும். இந்த  உட்கருவே  அணுசக்தி  வெளியீட்டிற்கு  முக்கிய  காரணமும் ஆகும்.
        சரி, இதற்கும்  ஸ்ரீ  சக்கரத்திற்கும்  என்ன  சம்பந்தம் ? ஸ்ரீ  சக்ர  பூஜையிலும்  அதே  நிகழ்வுகள்  நிகழ்ந்தால் ............................பாருங்கள்!  அலை  வடிவிலான  தாமரைத்தளங்கள் ,  ப்ரோட்டான்களின்   செயல்கள்  போன்றே  குறுக்கும் , நெடுக்குமான  முக்கோணங்கள் ......அற்புதமான  முறையில்  அமைந்து ,  மந்திரங்கள்  அவற்றில் பட்டு  எதிரொலித்து,  மிகுந்த  ஆற்றலோடு  பூஜை  திரவியங்களால்  சாத்வீகமான  நல்லதே  செய்யும்  ஆற்றல்கள்  ( Electro  Magnetic Wave -  Positive Energy )  அந்த  இடத்தை  சுற்றியும்  அதிக  அடர்த்தியோடு  நிறைந்துவிடுகிறது. அங்கு  செல்வோர்களுக்கு  சீரான , ஒழுங்கு  நிறைந்த  சிந்தனைக்கு -  மன  ஒருமைக்கும் , அதன்  உச்சகட்டமான   எண்ணங்களற்ற   ஆனந்த  நிலையும்  சம்பந்தப்பட்டவர்களின்  உள்ளங்களில்  ஏற்பட   காரணமாகின்றது.

           Positive Energy - 70% மேல்  நீர்  மூலக்கூறுகளால்  நிறைந்த  நமது  உடல்  மிக  எளிதாக   தூய்மையான  உணர்வுகளால்   ஊடுருவதால்  நமது  கண்களுக்கே  தெரியாமல்  நீர்  மூலக்கூறுகள்  சத்வ  குணத்தை  ஆகர்ஷித்து  நோய்மூலக்கூறுகள்  மெல்ல  மெல்ல  குணப்படுத்தப்படுகின்றன. positive  energy - யால்  செல்களும்  புத்துணர்வு  பெற்று  active  நிலையை  இன்னும்  நம்முள்   முன்னெடுத்து  வருகின்றன.

   கீழ்கண்ட  நீர்மூலக்கூறுகள்  படங்கள்  எவ்வாறு  உணர்வை  வெளிப்படுத்துகின்றன  என்ற  ஜப்பான்  நாட்டு  அறிஞரால்  புகைப்படம்  எடுக்கப்பட்டது .


கோபம் , வெறுப்பு , அன்பற்ற  தன்மைகளில் அன்பு  மற்றும்  பிரார்த்தனை  பூஜைகள்  நேரங்களில்  நீர்மூலக்கூறுகள் :


Image result for water molecule photos of japan scientist image

பூஜைகள் , பிரார்த்தனையில் :

Image result for water molecule photos of japan scientist image    Image result for water molecule photos of japan scientist image


Related image

தவறான  வார்த்தைகள் ,  அதிக  ஒலி  மற்றும்  வீணான  சப்தங்களின்  போது :


Related imageRelated image  Related image



   நண்பர்களே !  நமது  உடல்  72%  நீர்   மூலக்கூறுகளால்  உருவாகியுள்ளது.
நாம்  எப்படி  உள்ளோம்  என்பதை  நமது எண்ணங்களின்  முக்கியத்துவம்  என்ன  என்பது  இப்போது  நன்கு  தெரிகிறதா ?


மந்திரங்களின்   அதிர்வுகள் , பூஜைகள்  நம்மையும் ,  நம்மை  சுற்றியும்  எவ்வளவு   ஆழமாக  பாதிக்க  முடியும்  தெரிகிறதல்லவா ...................!


    ஸ்ரீ  சக்ர  பூஜையின்   நன்மைகள்   வார்த்தைகளால்  இவ்வளவு  என்று  அளவிட்டு  கூறிவிட முடியாது. அவற்றை  ஒவ்வொரு  அத்தியாயத்திலும்  அன்னையின்  கருணையால்  பார்ப்போம் . ஸ்ரீ சக்ரத்தின்  பிந்து  ஸ்தானமே
அணுவின்  உட்கரு  போன்றது.  இன்று  மண்டையை  பிய்த்து  படித்துக்கொண்டிருக்கும்  அணுசக்தி  கொள்கைகள்  போன்ற  பலப்பல  உண்மைகளின்   அடிப்படையே  ஸ்ரீ  சக்ரம்  தன்னகத்துளே   பலவற்றைக்  கொண்டுள்ளது.




ஸ்ரீ  சக்ர  பூஜையினை  விளக்கும் தோறும்  அவற்றை  அங்கங்கே  லலிதாம்பிகையின்  கருணையால்  காண்போம்.