Monday, July 24, 2017

☆ ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் ☆


தஸ மஹாவித்யா : - 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

☆ ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் ☆
Related image
சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தினார் ,
அவரிடம் நியாயம் கேட்க
யாகம் நடக்கும் இடத்திற்கு செல்ல தாட்சாயணி அனுமதி கேட்டாள்.

அழையாத விருந்தாளியாக
தன் மனைவி தாட்சாயணி சென்று அவமானப்பட்டு திரும்பக் கூடாது என்று எண்ணியதால் சிவபெருமான் அனுமதி தரமறுத்தார்...

இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி காளியாக மாறினார்.

கருமை நிற மேனியும் கோபம் கொண்ட விழிகளுடன்,
மண்டை ஓடுகளை மாலையாக கொண்டு இடி போல் பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே சிவபெருமான் எல்லாத் திசைகளிலும் ஓடினார்.

சிவபெருமான் திரும்பிய பத்து திசைகளிலும் திசைகளுக்கு ஒருவராக தோன்றிய தேவியின் மாறுபட்ட பத்து விதமான பயங்கர தோற்றத்தைக் கண்டார்.

இந்த பத்து தேவியர்களின் தோற்றமே தசமஹாவித்யா ஆகும்.
* சிவனின் நேரெதிரில் தேவி
எடுத்த முதல் தோற்றம்.,
காளி.!
* சிவனின் மேல் திசையில்
தாரா தேவி.!
* சிவனின் வலது திசையில்
சின்னமஸ்தா தேவி.!
* சிவனின் இடது திசையில்
புவனேஸ்வரி தேவி.!
* சிவனின் பின் திசையில்
பகளாமுகி தேவி.!
*.சிவனின் கீழ் திசையில்
திரிபுரபைரவி தேவி.!
* சிவனின் தென்கிழக்கு திசையில்
தூமாவதி தேவி.!
*சிவனின் தென்மேற்கு திசையில்
திரிபுரசுந்தரி தேவி.!
* சிவனின் வடமேற்கு திசையில்
மாதங்கி தேவி.!
* சிவனின் வடகிழக்கு திசையில்
கமலாத்மிகா தேவி.!
இப்படியாக பத்துவிதமான தேவியர்களின் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவபெருமான் வேறு வழியின்றி தாட்சாயணி விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தட்சனின்
யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.
தட்சன் தனது ஆணவச் செருக்கால் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன்பும் சிவபெருமானின் மகிமையை அறியாமல் அவரது புறத்தோற்றத்தை இழிவாக
கூறி தாட்சாயணியை  அவமதித்தான்.
கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு தேவலோகமே கூடியிருந்த யாகசாலையில் தன்னால் தன் பதியான சிவனுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்ட தாட்சாயணி மிகவும் மனம் வருந்தினாள்.
தந்தை தட்சனால் தான் பெற்ற இந்த உடலை அழிக்க எண்ணி தனது சக்தியினை கொண்டு அக்னி எழுப்பி அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள் லோகமாதா.
இதைக் கேள்வியுற்ற
சிவபெருமான் வீரபத்திரரைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார்.
வீரபத்திரருடன் தச மஹாவித்யா தேவியரும் யாகசாலை சென்று அழித்தனர்.
சிவபெருமான் யாகசாலை வந்து நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தன் அன்பு மனைவி தாட்சாயணி உடலைப் பிரிய மனமின்றி தன் தோளில் போட்டுக் கொண்டு "ருத்ரதாண்டவம்" ஆடினார்.
ருத்ரமூர்த்தியின் கோபத்தினால் ஏற்படப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற காக்கும் கடவுளான "மஹாவிஷ்ணு"
சக்ராயுதத்தால் அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவைகளை பூலோகத்தில் 51 இடங்களில்
விழச் செய்தார்.
தேவியின் அங்கங்கள் விழுந்த
51 இடங்களும் சக்தி வாய்ந்த பீடங்களாகவும் புண்ணிய க்ஷேத்ரங்களாகவும் ஆயின.
பைரவர் வீரபத்திரர் காவலுடன் அம்பிகையின் கோவில்கள் "51 சக்திபீடங்கள்" தோன்றன.
"தச மஹாவித்யா" தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய
தட்சன் யாகம் " 51 சக்திபீடங்கள் "
தோன்ற காரணமாகி முடிவடைந்தது.

தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது.

ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. 

         நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்க வைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து  நன்மைகளையும்  தனது  பக்தர்களுக்கு  அருள்பவள். அனைத்து  நல்ல விஷயங்களையும்  ஆகர்ஷித்து  தருபவள். மீனாட்சி யின்  அம்சம்.  ஸ்ரீ ராஜ சியாமளா  என்றும்  அழைக்கப்படுபவள். கிளியை  கைகளில்  தங்கியிருப்பாள். நன்மைகள்  அனைத்தின்  இருப்பிடம். இவளின்  மந்திர ஜபம் ......அனைத்தையும்  ஆகர்ஷிக்கும்  வல்லமையை  தரும். ஆன்ம சாதகர்களுக்கு  அளவிடா  ஆர்வத்தை  சாதனைகளில்  அளித்து  மேலும், மேலும்  அவர்களை  அன்னை  லலிதாம்பிகையிடம்  அன்புப்  பிணைப்பினில்  வைத்திருப்பாள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள். ' ஹ்ரீம் ' என்ற  மந்திர  பீஜத்திற்கு  உரியவள். அனாஹத  சக்கரத்திற்கு  உரியவள்.

3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள். முக்கியமாக  எதிரிகளின்  நாக்கினை  இழுத்து கதையால்  அடித்து  சிதைப்பவள். ' வாக்  ஸ்தம்பனம் ' எதிரியிடத்து  ஏற்படுத்துவாள்.

4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள். தனது  பக்தர்களுக்கு  தீங்கு  விளைவிப்போருக்கு  சகல  துரதிஷ்ட்டத்தையும்  , கொடிய  நோய்களையும்  ஏற்படுத்துவாள்.

10. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடப்படுவதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.


தானியங்கு மாற்று உரை இல்லை.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.

தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.



தானியங்கு மாற்று உரை இல்லை.

நன்றி :  ஸ்ரீ  வித்யா  பாலா  குருக்கள்.

No comments:

Post a Comment