Monday, February 1, 2010

Ellaam nalame..................

   ஒரு  ஊரில் ஸ்ரீ ராம பக்தன் இருந்தான். அவன் தனது செயலெல்லாம்  ஸ்ரீ ராமனது செயல் என உறுதியான நம்பிக்கையும்...........பணிவும், நன்னடத்தையும் கொண்டவனாய் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் இரவு உணவு முடித்து விட்டு அவனது வீட்டு திண்ணையில்  அமர்ந்தவனாய் ஸ்ரீ ராம நாம சிந்தனையுடன் அமர்ந்து இருந்தான். அப்போது அந்த வழியே சில திருடர்கள் அரண்மனையில் திருட வந்தனர். ஆள் பற்றாக்குறையின் காரணமாக..இந்த ராம பக்தனை....இழுத்து சென்றனர்.  இவனும் அவர்களுடனே சென்று......திருடிக்கொண்டு வரும்பொழுது........அரண்மனை காவலர்களால் ஸ்ரீ ராம பக்தன் மட்டும் பிடிபட்டான்.
      அடுத்தநாள் அரசனின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்க பட்டான். நடந்தது என்ன? என அரசனால் வினவப்பட்டது..........." ஸ்ரீ ராமனின் கருணையால் இரவு உணவு முடித்து.......ராமனின் கருணையால்  வெளியில் அமர்ந்து...ஸ்ரீ ராமனை  சிந்தித்து இருந்த பொழுது.........ராமனின் கருணையால் இவர்களால் இழுத்து செல்லப்பட்டு .......ஸ்ரீ ராமனின் கருணையால் ............பிடிபட்டு......ராமனின் கருணையால் தங்கள் முன்பு நிறுத்தப்பட்டு.........ராமனின் கருணையால் விச்சரிக்கபடுகிறேன்" என்று சொன்னான்........
     அரசனோ..........இவன் உண்மையில் திருடனல்ல........நல்லதொரு பக்தன் என முடிவு பண்ணி அவனை விடுதலை  செய்தான்.
இது...எதனால் நிகழ்ந்தது?
உண்மையான  பணிவு எப்பொழுது வரும்?
நேர்மையான....யார் மீதும குறை சொல்லாத குணம் எதனால் வரும்.....?
எல்லாம் ராமனின் கருணை.......என திருடர்களால் பிடித்து செல்லும் போதும்....திருட்டு குற்றச்சாட்டு  சுமத்தி விசாரிக்கும் போதும் .....இது ராமனின் கருணை என சொல்லத தோன்றுவது..... எதனால்?
எத்தகைய நம்பிக்கை அவரிடம் திடமாக இருந்தது ...?  சற்றே அலசுவோம...........

2 comments:

  1. A little faith will bring your soul to heaven, but a lot of faith will bring heaven to your soul.

    ReplyDelete
  2. beleive everything is for good given by god to u. this will make everything good for u ever throughout ur life.

    ReplyDelete