Wednesday, February 3, 2010

Periyorkal (Nallorkal) varthaiyai.........mathithaal..........

       ஒரு  அடர்ந்த காட்டின் அருகே குமரன் என்றொரு விறகு வெட்டி இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தையும்  இருந்தனர். இருப்பதில் போதும் என திருப்தி உள்ளவன்.தர்ம நெறி தவறாதவன்.எது கிடைத்தாலும் அது இறைவனின் கருணை என வாழ்க்கையை நடத்துபவன்.
      அந்த காட்டினுள்.....ஒரு அடர்ந்த மரத்தின் அடியினில்......உண்மையான தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவன் ஒவ்வொரு முறையும் அந்த அடர்ந்த காட்டினுள் செல்லும் போதும்....அவரை நமஸ்கரித்து .......சேவைகள் ( அவருடைய இருப்பிடத்தை சுத்தம் செய்து .....அவருக்கு தேவையானதை பேரன்போடும்....பணிவுடனும் வழங்கி .....அவரது ஆசியினை பெற்று ) பலவும் செய்து வாழ்கையின் உண்மை நிலையினை அறிய ஆசியினை வழங்குமாறு ...........பணிந்த பின்னரே  உள்ளே செல்வான்.
    இவனது  பண்புகள் பலவும் அந்த தபஸ்வியினை கவர்ந்ததால் ........அந்த முறை அவன் விறகு வெட்ட வரும் போது........அவனது சேவைகளை பேரன்போடு ஏற்றுக்கொண்டு ................அவனுக்கு ஆசியினை வழங்கி.........."" குமரா!......காட்டின் உள்ளே செல்!""  என்று மட்டும் கூறினார்.
      குமரனும்........காட்டின்  முன்புறம் உள்ள சிற்சில மரங்களை மட்டும் வெட்டி, கொண்டு வந்து.....அவற்றை ஊரினுள் விற்று....தனது குடும்ப தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவான்.  இந்த முறை.....அந்த தபஸ்வி சொன்னது போல் சற்று காட்டின் உள்ளே சென்றான். அங்கு சந்தன மரங்கள் இருக்க கண்டான்.அவற்றை வெட்டி  தனது வறுமையை போக்கிக்கொண்டான்.
      மறுமுறை....காட்டின் உள்ளே செல்லும் பொழுது....தபஸ்வியின்  வார்த்தைகளை மீண்டும் யோசிக்க .......இன்னும் உள்ளே சென்றான்..........இப்பொழுது....தங்கம் இருக்க்கக்  கண்டான்!..........மறுமுறையும் உள்ளே செல்லும் பொழுது அவனுக்கு தபஸ்வியின் வார்த்தைகள் நினைவுக்கு வரவே இன்னும் உள்ளே சென்றான்............
      இம்முறை அவனுக்கு வைரங்களே கிடைத்தன!.............தேவையானவற்றை கொண்டு வந்து அவன் தனது குடும்பத்துடன்........அந்த தபஸ்வியின் வழி காட்டுதலோடு  தனது வாழ்வினை இன்னும் செம்மைபடுத்திக் கொண்டான்.

    குழந்தைகளே .....ஒரு உத்தமரின் வழிகாட்டுதல்......வாழ்க்கையை எவ்வவளவு செம்மையாக்குகிறது?........
      இதற்கு காரணம் என்ன?.........அந்த வழியினை பின்பற்ற ......அவனக்கு எது உறுதுணையாக  இருந்தது.?

3 comments:

  1. god cannot guide us directly. so he created parents and guru. the wood cutter followed Guru's Sayings and obliges him. hence he succeeded in his life.

    ReplyDelete
  2. Yes agree with Satya.... Its matha and pitha that is our parents who lead us to the guru . Without our parents guidance we can not reach the guru. Its so simple to understand that its our parents who admit us in the school, gurukulam, veda padasaalai whatever one name it. Then Guru show us the path and make us realize that in each and every step that we take forward God is with us.

    ReplyDelete