Tuesday, February 2, 2010

Irai nambikkai--vidhiyai vellum

    ஒரு ராம பக்தன் இருந்தான். அவன் தனது திருமணத்திற்காக      ஒரு நல்ல நாளினை குறித்து வர வேண்டி பண்டிதரை பார்த்து வர அருகில் உள்ள ஊருக்கு சென்றான். அந்த பண்டிதரோ மிகவும்  நேர்மையானவர்..................இவன் சென்ற நேரமோ...மாலை ஆகிவிட்டது.அந்த பண்டிதருக்கோ இவனை பற்றி நன்கு தெரியும்.....எனவே....அவனது ஜாதகத்தை வாங்கி பார்த்தார்.
     அவனது ஜாதகத்தை பார்த்ததும்....அதிர்ச்சி உற்றவராய்  நாளை காலையில்  உனக்கு  நல்ல நாளை சொல்கிறோம் என வீட்டின்  உள்ளே சென்றுவிட்டார். ராம பக்தனோ  வெகு தூரத்தில் இருந்து  வருவதால் ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த கோயிலின் ( அது சிவன் கோவில் ) மண்டபத்தில் தங்கலாம் என தீர்மானித்து ........அங்கு தங்குவதற்கு சென்றான்.
      தூங்கலாம் என படுத்த பொழுது .........கோயிலின் கருவறை முழுவதும் வவ்வால்களின் எச்சம் இருக்க கண்டு.......பூஜையும் இல்லாமல் எம்பெருமான் இங்கு இருக்கின்றாரே   என கண்களில் கண்ணீர் மல்க கருவறையும்.....மண்டபமும்  ராம நாமம் சொல்லியவாறே சுத்தம் செய்த  பின்பு தூங்க போனான்.
      இரவு திடீரென மழை பெய்தது......சோர்வினில் நன்கு தூங்கி விட்டான். காலையில்  எழுந்து பார்த்தால்  .....மண்டப தூண்  ஒன்று இவனருகே ...விழுந்து கிடந்தது.....அதனடியில் ஒரு பாம்பும் இறந்து கிடந்தது. இவனோ.....சற்றே அதிர்ச்சியுடன் ராம நாமம் சொல்லியவறாரே ........அந்த பண்டிதரின் வீட்டை நோக்கி நடந்தான்.
    பண்டிதருக்கோ...  இவனை  பார்த்ததும்  மிகுந்த ஆச்சர்யம்!.....ஏனெனில் நேற்று இரவே இவனது விதி முடிந்து விட்டது!...............பின்பு எவ்வாறு இங்கு வர முடிந்தது?........என தன்னுள் நினைத்தவராய் ....இரவு என்ன நடந்தது? எங்கு தங்கினாய்? ( ஏனெனில் அவன் நேற்று இரவே பாம்பினால் கடிபட்டு இறக்க வேண்டும்! என்பது  அவனது விதியாக ஜாதகத்தில் இருந்தது .....அதை நேரிடையாக சொல்லாமல் நாளை கலை வா.....என பண்டிதர் அனுப்பி வைத்தார்..)என வினவ......அவன் ராம நாமம் சொல்லியவரே கோவிலின் கருவறை சுத்தம் செய்து......தூங்கும் பொழுது.....பாம்பு கடிக்க வர........கோவிலின் மண்டப தூண் பாம்பின் மேலே விழுந்து.....தானோ கைப்பற்றப்பட்டதை சொல்ல...........பண்டிதரும்..............உனது இறை நம்பிக்கையும்....உனது ராம நாமம் உன்னை பாம்பினால் இறக்க இருந்த உன்னை  காப்பாற்றியுள்ளது ............என கூறினார்...........
       அவரும்  பேரன்போடு ராம நாமம் கூறினார்.......அவனும்...இறைவனால் தனது விதியும்  மாற்றி அமைக்க பட்டுள்ளதை எண்ணி எண்ணி .....கண்களில் கண்ணீர் மலக........நன்றி கூறி சென்றான்.
        குழ்ந்தைகளே இதிலிருந்து  தெரிவது என்ன? நமக்கு திடமான இறை நம்பிக்கை இருந்தால் நமது விதியும் வழி விட்டு விலகி நிற்கும்.........?

2 comments:

  1. Maha mandiram sonnal podhum . Marana bhayam maraindhe pohum. Maha mandiram solvom marana bhayam velvom. Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare!

    ReplyDelete
  2. A boat sailing without a paddle cannot reach the bank or cannot be safe n the water current. here god is the paddle who controls the boat. if we believe him he will help us to face all the storm / protect us from all hurdles.

    ReplyDelete