Saturday, July 5, 2014

இறைவனை  அன்றி  வேறொன்றுமில்லை   
யோகி ராம் சுரத்குமார்  மற்றும்   சுவாமி சச்சிதானந்தஜி

சுவாமி  ஸ்ரீசச்சிதானந்தஜி  அவர்களின்    அனுபவ வார்த்தைகள் ;

நாம் எந்த  ஒரு வழியில் இறைவனை அணுகினாலும் , சாதனை  செய்தாலும் , நாம் செய்ய   வேண்டியது  என்னவெனில்  இடைவிடாது  இறைவனை பற்றிய  நினைவு கூர்தலே. இத்தகைய  இடைவிடாத  இறை நினைவு , இறை உணர்வு  ஆனது  நமது  அனைத்து   தொடர்புகளையும்   இறைவன்  தொடர்பாக  மாற்றியமைத்துவிடும். இதன் மூலம்  நாம்  தொடர்பு  கொள்ளும் அனைத்து பொருட்கள்  மற்றும்  நாம் பார்க்கும்  எல்லா பொருட்கள் , நம்  சிந்தனைகள்,  நம்மால்  தொடப்படுவது .........அனைத்தும்  இறைவனாகும்.  உண்மையில்  இறைவனை  அன்றி ஒன்றும் இல்லை.

( மரமாக   பார்த்தால்  மரத்தில் செதுக்கிய யானை தெரிவதில்லை. அது  யானை என்ற  உணர்வோடு பார்த்தால்  மரம் தெரிவதில்லை.   அனைத்தும்  இறைவனே  என்ற  உணர்வோடு பார்க்க...........சாதனை  செய்ய  செய்ய ............பொருட்களோ , உயிரினங்களோ,  ஏன்  உலகமோ  இல்லவே  இல்லை..)

 நம்முடைய  மனம்  சிறுவயது முதலே  அனைத்தும்  இறைவனாக  பார்க்காத  வண்ணம்  பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது.  ஒரு  உயர்ந்த குருவின்  கருணையால்  பொருட்களாக , உயிரினமாக  பார்த்த  பார்வையை  மாற்றி  நமது  இயல்பான  பார்வையில்  அனைத்தும்  இறைவனாக ,   பிரம்மமாக   பார்க்க  பழகும்  போது  அனைத்தும்  நாம்  இறைவனாக  காண்கிறோம்,  இறைவனாக   தெரிகிறது.

         அகந்தையை  அழிப்பதற்கு  மிகசிறந்த  வழி :
ஒரு  சாதகனின்  வாழ்க்கை  துன்பம்  நிறைந்ததும், அதே நேரத்தில்  அவனுக்கு  அகந்தையின்  பிடியிலிருந்து  விடுபடுவதற்கான  வழியாகவும், அனைத்தும்  இறைவனாக  உணர   தேவையான  இறை அருளை  பெறுவதற்காகவும்  துன்பத்தின்  வழியே  வழி நடத்தபடுகிறது.  அனைத்து   துன்பத்திலிருந்தும்  விடுபட  இந்த  அகந்தை  இறைவனிடம்  சரணடைய ........" ஓ! இறைவா  ........அனைத்தும்   நீயே.........நீயே  இந்த  உடல்;...நீயே  இந்த  மனம் ;.........நீயே    புத்தி .......நீயே  புலன்கள்;............ நீயே  புலன்களின் உணர்வுகள் :........அதனை  இயக்கும்    ஆற்றல்;.......அனைத்தும்  நீயே...........எல்லாம்  நீயே !"..............  இப்படியாக   உணர்ந்துவிட்டால்    பின்பு   அகந்தைக்கு    இடமேது?....எனவே   இம்முறையிலே  நாம்  நமது  சாதனையை  செய்வோமாக ...............

எப்பொழுதெல்லாம்  மற்றவர்களை  பார்க்கிறோமோ ,  அவர்களுக்குள்ளே  இறைவனை பார்க்க முயற்சி செய்தல்  வேண்டும்.  அவர்களுக்குள்  உள்ளே உள்ள இறை உணர்வை  காணக்காண  உண்மையிலேயே  அன்பு  செய்ய  ஆரம்பித்துவிடுவோம். இந்த  முறையில்  நாம்  பயிற்சியினை  செய்யசெய்ய ,  இதன்  மூலமாக  ஆனந்தம்  அதிகமாவதனை நன்கு  அறியலாம்.  இந்த  சாதனைக்காக  தனிப்பட்ட  எந்த  ஆசாரமும்  தேவையில்லை.  நாம்  எங்கே  எந்த சூழ்நிலையில் 
வாழ்ந்தாலும்  பரவாயில்லை, அங்கே  இருந்தே தொடங்குவோம்.  காலையில்  எழும்  அந்த   நொடியில் .........நாம்   உணர வேண்டியது.........காணவேண்டியது .......நம்மால்   காணப்படும்   பொருட்கள்  எல்லாம்  இறைவனின்  இருப்புதன்மை  கொண்டது.  இறைவனே! இந்த  பல்வேறு  பொருட்களாக  நம்  முன்னே  உள்ளார். அந்த  பொருட்களின்  ஒவ்வொரு  அணுவிலும்   இறைவனின்  இருப்புதன்மை  உள்ளது. நாம்  சந்திக்கும்  ஒவ்வொரு  மனிதருள்ளும்  கடவுளே  உள்ளார். இந்த  முறையில்  நாம் நம்  மனதை  பயிற்சியால்  மாற்றி அமைத்தால் .......நமது வாழ்க்கை  அருள்  நிரம்பிய  வாழ்வாகும்.

    இரவில்  நமது  கடமைகளை  முடித்து   படுக்கைக்கு சென்றபின்பு  நாம்  இறைவனின்  மடியிலேயே  நமது  தலையினை  வைத்து உறங்குவதாக  உணர வேண்டும்..அதேபோல, அதிகாலை  நாம்  எழுவதும்  இறைவனின்  மடியிலிருந்தே   எழுவதாக  உணரவேண்டும். இது வெறும்  கற்பனையல்ல......உண்மை  என்னவெனில்  இங்கு  அனைத்தும்  இறைவனே.....படுக்கையும்.........ஆனால்  நம்மை  உணர விடாமல்   தடுக்கும்  சில தடைகள்  யாதெனில்.  நமது  அறியாமையே....இப்போது  உள்ள  மனமே ! இந்த  அறியாமைகள்  ......மேற்கண்ட  பயிற்சியினால்  நீங்கும்.


அனைத்திலும்   புனிதமான  இறைஉணர்வே ;  ஆன்மீக பயிற்சிகள் என்பது  தினசரி கடமைகளுக்கு வேறானதல்ல. நாம்  செய்ய  வேண்டியதெல்லாம் நமது கடமை மீதான  பார்வையை  மாற்றி  பார்ப்பது  மட்டுமே. நம்முடைய  சாஸ்திரங்களும்  சொல்வதும்  ......அனைத்தும்  இறைவனே!....அனைத்தும்  பிரம்மமே!...... இறைவனை  அன்றி  வேறுஎதுவுமில்லை.  எனவே  நமது   கடமைகளும்  இறைவனே....அவைகள்  புனிதமானவையே!........நம்மோடு  வேலை  செய்பவர்களும்  இறைவனே......... புனிதமானவர்களே!..............நமது  வேலையில்  பயன்படுத்தப்படும்  பொருட்களும் இறைவனே !.....புனிதமானவையே!.....நம்மை  வேலை  செய்ய  வைக்கும்  அந்த  ஆற்றலும்  இறைவனே !.......இதில்  நமது   முயற்சி எனபது  என்ன  என்றால்  எல்லாவற்றையும்  தொடர்ச்சியாக ........இறைவனாக......காண்பது.....உணர்வது ........ மட்டுமே.   இங்கு  பின்பு  வேலையே  கடவுள்  வழிபாடாகும்.  முடிவில்  நாம்  அறிந்துகொள்வது  என்னவெனில் .....இறைவனே  நம்மிலிருந்தும் , வெளியிலும்   செயல்களை செய்பவராகவும்  இருந்து ,  அவருடைய  வேலையை   நம்மிலிருந்தே அவருக்கு  தேவையானதை  அவரே  பெற்றுக்கொள்கிறார் என்பதை  ....... நிதர்சனமாக  அறிந்துவிடுவோம். 


நன்றி : " The  vision"  -ஆனந்தாஷரமம் 





1 comment: