Thursday, January 12, 2017

இவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி !

என்ன ஒரு பாதுகாப்பு !




Image may contain: 1 person, sitting

( மஹா  பெரியவா - தமது  13 வது வயதில் ........... )


                    மஹா பெரியவாளுக்கு நம் போன்ற ஹிந்துக்கள் தான் பக்தர்கள் என்று இல்லை. உலகம் முழுதும் பல ஜீவன்கள் அவரால் ஈர்க்கப் பட்டவர்கள். பிரான்ஸ் நாட்டில் பாரிசில் ஒரு பாங்க் தலைவர் டைரக்டர் அந்த வெள்ளைக்காரர். அவர் பூர்வ புண்ய கர்மா எப்படியோ அவருக்கு மஹா பெரியவா பத்தி விஷயங்கள் தெரிந்திருக்கிறது. மனதில் இனம் புரியாத ஒரு பக்தி ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ஒரு தரம் இந்தியா வந்த போது பாம்பேயில் இருந்தவர் எப்படியாவது சென்னை போக வேண்டும். அங்கிருந்து விசாரித்துக் கொண்டு பெரியவாளை பார்க்க ஆவல். அவருக்கு ஒரு நண்பர் சென்னையில் டாக்டர் ராகவன். பாம்பேயில் வந்து சேர்ந்ததும ஹல்லோ ராகவன் ஹவ் ஆர் யு ? நான் இந்தியா வந்திருக்கேன். பாம்பேலே ஒ அப்படியா சென்னை வருவீங்களா? அதுக்கு தானே போன் லே பேசறேன். எனக்கு உங்க சங்கர் சாரி பாக்கணும் ரெண்டே நாள் தான் இருக்கு. அதுக்குள்ளே கண்டிப்பா பாத்துடனும் ஒரு ஆசை. ஏற்பாடு பண்ண முடியுமா? நா காலம்பர ப்ளைட்லே வந்துடறேன். ஆஹா எனக்கும் ஒரு நல்ல சான்ஸ். மார்னிங் வந்துடுங்க. ஏர் போர்ட்லே காத்திண்டிருப்பேன் ஒரு வெளிநாட்டவர் மதராஸ் வந்து உங்களை சந்திக்கிறேன். பெரியவரை தரிசனம் பண்ணியே ஆகவேண்டும். ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொன்னதால் ராகவன் பறந்தார். பெரியவா மைலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். பெரியவாளை தரிசனம் பண்ணினார். விஷயம் சொன்னார். பெரியவா முகத்தில் ஒரு க்ஷண காலத்துக்கு புன்னகை. சரி இரவு பூஜை முடிந்ததும் வெள்ளைக்காரனுக்கு கீழ உக்கார முடியாது. ஒரு நாற்காலி போடு. உபன்யாசம் முடிஞ்சதும் வந்து பாக்கறேன் என்றார். எல்லாம் முடிந்ததும் யாராவது வந்தாளா? என்றார். இல்லை பெரியவா அப்போது வேஷ்டி துண்டுடன் ஒருத்தர் வந்து பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணினார். (சன்யாசிகளுக்கு எப்போதும் நாலு நமஸ்காரம் பண்ணுவதுதான் சம்ப்ரதாயம்). அவருக்குப் பின்னால் டாக்டர் ராகவன்! ஆம் அந்த வெள்ளைக்காரர்தான் வேஷ்டியில் கச்சிதமாக வந்து நாலு நமஸ்காரம் பண்ணியது! நாலு நமஸ்காரம் பண்ணனும்னு எப்பிடி தெரிஞ்சதுன்னு கேளு! எல்லாரும் பண்ணறதைப் பார்த்து பண்ணினேன் பக்கத்திலிருந்த பாணாம்பட்டு கண்ணனிடம் அந்த வெள்ளைக்காரனை மட்டும் அழைச்சிண்டு உள்ளே வா அவர் பேசற இங்க்லீஷ் எனக்கு புரியாது. வேணா.......டாக்டர் ராகவனை கூப்பிடட்டுமா? எல்லாம் ஒனக்கு தெரிஞ்ச இங்க்லீஷ் போறும். வா அந்த பிரெஞ்சுக்காரர் சொன்னார் நான் கொஞ்ச காலமா வேதாந்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் என் உடல் முழுதும் மரத்து விட்டது போலவும் நான் உடலை விட்டு வெளியே இருப்பது போலவும் என் உருவம் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக இருப்பது போலவும் தெரிந்தது. என் உடல் முழுக்க அண்டங்கள் தொங்குவது போலவும் தெரிந்தது. அந்த சமயம் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. துக்கக்கலப்பே இல்லாத ஆனந்தம்! இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியும் என் மனஸில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. என் மனைவி மகன் இறந்த போது கூட என் மனஸில் எந்தவித சலனமும் இல்லை. எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன்... ஆபீசில் என்னுடைய இந்த வினோதமான மனநிலையை பார்ப்பவர்கள் என்னை பைத்தியம் என்கிறார்கள். அதனால் என்னை ஆஸ்பத்திரியில் கம்பி அறைக்குள் அடைத்து விடுவார்களோ? என்ற பயம் மட்டும் உள்ளூர இருக்கிறது என்றார். நடமாடும் தெய்வம் மெதுவாக பேச ஆரம்பித்தது...... உள்ளே..ன்னா என்ன? வெளியே...ன்னா என்ன? எல்லாமே நாலு சுவருக்குள்ளதானே? ஆபீசும் நாலு சுவருக்குள்ளதானே? இந்த கேள்வி அந்த வெள்ளைக்காரரின் மனஸில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. தாங்கள் எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டினார். தனக்கு ஏதாவது உபதேசம் பண்ணவேண்டும் என்று கெஞ்சினார். நீ இப்போ பண்ணிண்டு இருக்கற த்யானத்தையே விடாமப் பண்ணிண்டு வா! ஒன்னோட attainment [சித்தி] வரைக்கும் ஒங்கூடவே இருக்கேன் [என்ன ஒரு பாதுகாப்பு!} என்று சொல்லிவிட்டு தான் கட்டிக்கொண்டிருந்த காவி வஸ்த்ரத்திலிருந்து ஒரு மூலையை கிழித்து அவரிடம் கொடுத்தார். இதை எப்பவும் ஒன் கூடவே வெச்சுக்கோ!
[என்ன ஒரு அனுக்கிரகம்!! யாருக்குக் கிடைக்கும் இப்பேர்ப்பட்ட பாக்கியம்?] வெள்ளைக்காரரின் ஆனந்தம் பன்மடங்கு பெருகியது. நமஸ்காரம் பண்ணி விட்டு வெளியே வந்து டாக்டர் ராகவனிடம் உங்களால்தான் எனக்கு இவ்வளவு பெரிய பாக்கியம் என்றார். பாணாம்பட்டு கண்ணனின் மனஸில் ஆயிரம் கேள்விகள்! மறு நாள் காலை ஒரு மணி நேர ஜபம் ஆரம்பிக்கும் முன் மஹா பெரியவா கண்ணனைக் கூப்பிட்டு ஒனக்கு நாயன்மார்கள் எத்தனைன்னு தெரியுமோ? என்றார். அறுபத்து மூவர். கபாலீஸ்வரர் கோவில்ல உத்சவம் கூட நடக்கறதே! கபாலி கோவில்ல போய் எண்ணிண்டு வா போய் எண்ணினால் அறுபத்தேழு! ஜாஸ்தியா இருந்த நாலு பேர் யார்? யார்? சொல்லு பாப்போம் போய் விஜாரித்துக் கொண்டு வந்தார்.
அதுல ஒருத்தர் அப்பாலும் அடி சார்ந்தாருக்கடியார் அதே தான். அப்பால்...ன்னா தேசத்தால காலத்தால அப்பாற்பட்டவா......காலத்தாலன்னா இனிமேலும் பொறக்கப் போற அடியார்களுக்கு..ன்னு அர்த்தம். நேத்திக்கி வந்த வெள்ளைக்காரன் தேசத்தால அப்பாற்பட்டவந்தான். இவனுக்கு இன்னும் நாலு ஜன்மாதான் பாக்கி" என்றார்.



நன்றி : வித்யாசாலை .

No comments:

Post a Comment