Saturday, January 28, 2017

உயிர் காக்கும் ஸ்ரீ அமிர்தசஞ்சீவிணி மந்த்ரம் !

கொடிய நோய்களையும்  நீக்கும்   ஸ்ரீ அமிர்தசஞ்சீவிணி  மந்த்ரம் :

Image result for south indian village simple pooja room


                  ஒரு  உத்தரணியில்  நீரெடுத்து  அதில்  பச்சைக்கற்பூரம், துளசி  அல்லது  வில்வம்  கலந்து  ஸ்ரீசுதர்ஸன  ஸம்ஹிதையில்  உள்ள  அமிர்த சஞ்சீவினி  மந்திரத்தை  ஜெபம்  செய்து  கொடுக்க   ஆயுள்  வளர்க்கும்  மிகவும்  சக்தி  வாய்ந்த  மந்திரம்  ஆகும்.

                 மேலும்   இதனுடன்  தன்வந்த்ரி  ஸ்லோகமும்  அபிமந்திரித்து  


( 108 முறை  ஜபம்  செய்து  தர ) எப்படிப்பட்ட  கொடிய  நோய்களும் ....கேன்சர்  போன்று   மருத்துவரால்  கைவிடப்பட்ட  நோய்கள் விரைவில்  குணமாகும்.  நோயாளியினால்  முடியாவிட்டால்  வேறு எவரேனும்  குணமாக  வேண்டும்  என்ற  அக்கறை  உடையோரால்  ஜெபம்  செய்தும்  அருந்தலாம். ( இதனை  தினசரி  108 முறை என  நோய்  முற்றிலும்  குணமாகும் வரை   அபிமந்திரித்த  மந்திர  நீரை  தரலாம் )  நித்ய  அநுஷ்டானமுடையோராயின்  மிகவும்  சிறப்பு! கீழே  அமிர்தசஞ்சீவினி  மந்திரம்  மற்றும்  அதற்கு  ஆதாரமாக  சமீபத்தில்  குமுதம்  ஜோதிடத்தில்  வந்த  ஆதாரம். இதனை  எழுத  தூண்டுகோலாக  இருந்த சகோதரிக்கும்  நன்றி. சமையலை  அமிர்தசஞ்சீவினியை  ஜெபம்  செய்துகொண்டே  சமையல்  செய்தால்  அந்த  உணவே  அமிர்தமாக  நோய்களை  நீக்கும்  சஞ்சீவியாக  இருக்கும். பின்பு  அது  உணவல்ல .......அமிர்தம் !


             இதில்  காயத்ரியும்,  மிருத்யுஞ்ச  மந்திரமும்  ஸம்புடிகரணமாக  இணைத்து ( interlocked mantras)  மகான்களால்  அருளப்பட்டுள்ளது.

மந்த்ரம் :

  ஓம்  ஹ்ரீம்  ஹௌம்  நமசிவாய :
  ஓம்  ஹௌம்  ஜூம்  சௌ:  ஓம் 
  பூர்  புவஸ்வஹ  ஓம்  தத்  ஸவிதுர்வரேண்யம் 
  த்ரயம்பகம்  யஜாமஹே  :
 பர்கோ  தேவஸ்ய  தீமஹி  ஸுகந்திம்  புஷ்டி 
 வர்த்தனம்  தியோ யோந  ப்ரசோதயாத் :
 உருவாருஹமிவ  பந்தநாத்  ம்ருத்யோர் 
 முக்க்ஷியமாம்ருதாத்  ஓம்  ஸ்வஹ :
 புவஹ  பூர்( ஹ் )  ஓம்  சௌ:
 ஜூம்  ஹௌம்  ஓம் :


                நண்பர்களே !  வீட்டினிலோ , அருகினிலோ  யாரேனும்  மிகவும்  கொடிய  நோய்களால்  அவதியுற்றால்  அவர்களுக்காக ,  ஜெபித்து  மந்திர  நீரைத்தரலாம். இதனை  குருவிடம்  இருந்து  பெற்று  ஜெபம்  செய்வதே  சிறப்பு !  வாய்ப்பு  இல்லாதோர்  இறைவனே  குருவாக  மனதிற்குள்  வரித்துக்கொண்டு .......உங்களின்  ஜெபத்தை  அவன்  அருகிருந்து  கண்காணிக்கிறான்  என்ற  பூரண  உணர்வுடன்  ஜெபம்  செய்து  தரலாம் . இனி  தன்வந்திரி  மந்திரத்தை  கீழே  இறையருளால்  ஜெபம்  செய்ய .............


ஓம்  நமோ  பகவதே,  மஹா  சுதர்ஸனாய,  வாசுதேவாய,
தன்வந்த்ரயே   அமிர்தகலச  ஹஸ்தாய, சர்வாபய  விநாசனாய , 
சர்வ  ரோக  நிவாரணாய,
த்ரைலோக்ய  நாதாய,  த்ரைலோக்ய  நிதயே, த்ரைலோக்ய  பதயே,
ஸ்ரீ  மகா விஷ்ணு  ஸ்வரூப, ஸ்ரீ  தன்வந்திரி  ஸ்வரூப,
ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ  ஒளக்ஷத  சக்ர  நாராயண  ஸ்வாஹா :

Image result for dhanvantari images hd








நன்றி : திரு. ஏ.எம் . ராஜகோபாலன்  - குமுதம் ஜோதிடம் .
           tamilmagazines.net

1 comment: