Sunday, February 7, 2010

porumaiyin perumai

 பொறுமையின்  பெருமை : 
ஒரு குளத்தில் பெரிய  மீனும், சிறிய  மீனும் இருந்தன. பெரிய மீன்  பொறுமையும், இறை நம்பிக்கையும் கொண்டதாய்... இறை நாம சிந்தனையும் கொண்டதாய் இருந்தது. சிறிய மீனோ...அவசர புத்தியும், பொறுமையின்மையும் .......குறை காண்பதை வாடிக்கையாய் வாழ்ந்து வந்தது. 
          அவர்கள் வாழ்ந்த குளத்தில் பல்வேறு மீன்களும் வாழ்ந்தன. கோடை காலம்  நெருங்கியதால்  எல்லா மீன்களும் அந்த குளத்திற்கு வரும் நீருற்றின் வழியே வேறு குளத்திற்கு சென்றன. சிறிய  மீனோ பெரிய  மீனிடம் பல முறை வேறு குளத்திற்கு செல்லலாம் என வற்புறுத்தியது. பெரிய  மீனோ இறை நாம சிந்தனையில் இருந்ததால் இதனுடைய புலம்பல்களை அது கேட்கவில்லை.
         குளமும் வறண்டது ......மீன்களை.....பல்வேறு பறவைகளும்....உண்டன..இந்த மீன்களோ ..இன்னும் சேற்று பகுதிக்கு சென்றன...ஒரு மீனவன் வந்து மீதி உள்ள மீன்களை பிடிக்க வேண்டும் என கரையில் நின்று பேசியதை இந்த சிறிய
மீன் கேட்டது........பெரிய  மீனிடம் வந்து.." எவ்வளவோ முறை சொல்லியும் நீர் கேட்கவில்லை!...நாளை காலை வந்து நம்மை மீனவன் வந்து பிடித்து செல்ல போகிறான்!" என்று முறையிட்டது. பெரிய  மீனோ..." கண்ணே! ஏன் இந்த புலம்பல்!.....இறைவன் நம்மை கைவிடமாட்டான்...அந்த மீனவன் ரூபத்தில் வந்து வேறு பத்திரமான இடத்தினில் ........இடலாம்!.........நடப்பது நடக்கட்டும்!.........அவன் கருணை நமக்குண்டு!....வீணே புலம்பாமல்.....அவனது நாமாவை சிந்தித்து இருக்கலாமே...!" என்றது.
      அடுத்த நாள் மீனவனும் வந்தான்......ஒருபாத்திரத்தில் நீரிட்டு அந்த இரு மீன்களையும்.......எடுத்து சென்றான்........செல்லும் வழியினில்.........மீண்டும் அந்த சிறிய  மீன் புலம்பியது........"இறைவன் பார்த்துக்கொள்ளுவான்! என்றீர்கள் ..இப்பொழுது பாருங்கள்......இந்த மீனவன் நம்மை வீட்டிற்கு கொண்டு சென்று உணவு செய்து சாப்பிட போகிறான்! எங்கே உங்களது இறைவன் காப்பாற்றவில்லையே ?.." என முறை இட்டது.
     பெரிய  மீனோ... " இறைவனின் கருணையில்  தான் ....இவன் எடுத்து செல்கிறான்......குளம் வற்றினால் நம் இறந்து விடுவோம் என......பாத்திரத்தில்   நீரிட்டு பத்திரமாய் நம்மை எடுத்துச செல்கிறான்...இறைவனை சிந்தனை செய் ! ".......என்று கூறி அது அமைதியானது.........
    மீனவனும்.......வீட்டிற்கு   சென்று......மனைவியை அழைத்து......இந்த மீன்களை உணவாக்கு! நாமோ குளித்து விட்டு வருகிறோம் என சென்றுவிட்டான். அவன் மனைவியோ அரிவாள்மனையை .உள்ளிருந்து எடுத்து வந்து.......மீன்களின் பாத்திரத்தில் உள்ள நீரினை மாற்றி....அவைகளை நன்கு கழுவி......வேறு நீரினில் இட்டு  அருகினில் வைத்து......மீன்களை அறிந்து வைக்க .......வேறு ஒரு பாத்திரம் எடுத்து வர உள்ளே சென்றாள்.
             சிறிய  மீனோ......." பல முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.! இறைவன் காப்பாற்றுவான் என்றீர்கள் .......பாருங்கள்...அவன் மனைவி நம்மை அறுக்க போகிறாள் !" என்று புலம்ப .........பெரிய  மீனோ......" பாவாய்! கவனி.....இறைவனின் கருணையை! ....நெடுநேரம்...ஒரே நீரில் இருந்தோம் என்று இப்போது கூட.....அவன் மனைவி நம்மை புதிய நீரில் இட்டு சென்றாள்!......நம்பிக்கையுடன்.....அவனது நாமாவை கூறு !...நமக்கு நன்மையே செய்வான்.!" என்று கூறியது...........
           அவன் மனைவியோ உள்ளே சென்றதும்.........அங்கு திடீரென வானம்   இருண்டது. கனமான மழை பெய்தது..............கூரையினில் கொட்டிய நீரானது........பாத்திரத்தில் விழுந்தது......பாத்திரம் கவிழ்ந்து .......நீரின் வழியே அந்த இரு மீன்களும்.......கழிவு நீர் குழாயில்  கலந்து.......வெளியே சென்று......கால்வாயினில் கலந்து......பின்பு அவைகள்.....நதியினை சென்றடைந்து.........கடலினில் கலந்தது................
        குழந்தைககளே இப்போது கடல் வற்றுமா?..........அவைகள் இந்த நிலை பெற......அந்த பெரிய  மீனின்  பொறுமையும்........நம்பிக்கையும்   எத்தகையது?  குழந்தைகளே! எவ்வளவு திடமான......நம்பிக்கை!........அரிவாள்மனையால்  ..அறுபடுவோம்!......என்னும் போது  கூட .........நம்பிக்கை இழக்க வில்லை...
     நாம் பெரிய  மீனா!.........சிறிய  மீனா!.......நம்மை நாமே அலசிகொள்வோமா!.........

2 comments:

  1. If one believes, its impossible to fail!

    ReplyDelete
  2. i woul d like to say one small suggestion. in this story instead of saing its a male r female it can be written as patience n god faith people r tensed r unhoped people. but really its a nice story which gives good toughts

    ReplyDelete