Monday, November 10, 2014

மகா பெரியவா உபதேசங்கள் : 9

ஸ்வயம்பாகம்  :
                               
       

       வாழ்க்கைக்கு   முதலாக   வேண்டியது   அன்னம்.

     நமக்கு   வேண்டிய   உணவை   நாமே   தயார்   செய்துகொள்ள  வேண்டியதுதான்   ஆதாரக்  கல்வியின்   முக்கிய  நோக்கமாக   எனக்குப்  படுகிறது.  இப்படி   நாம்   பழக்கிக்  கொள்ள  வேண்டும்.

                                              **********************

          புருஷர்கள்   எல்லாம்   சமையல்   பண்ணத்  தெரிந்து   கொள்ள   வேண்டும். ஹோட்டலுக்குப்   போவதை   தவிர்த்துப்   பழக  வேண்டும்.


         எவ்வளவு   சுத்தமாக   நம்முடைய   ஆகாரத்தை   நாமே   தயாரித்துக்  கொண்டு   சாப்பிட  முடியுமோ   அவ்வளவு   சுத்தமாக  ( சத்வ  குணமாக )  அவரவர்களே   சமைத்து   சாப்பிடக்  கற்றுக்  கொள்ள  வேண்டும்.

                                             ***********************

         இப்போதிலிருந்தே,  ஆபீஸோ ,  ஸ்கூலோ   அதில்   என்றைக்கு   லீவோ   அன்றைக்கு ,  வாரத்தில்   ஞாயிறு   ஒரு   நாளாவது    சகலமானபேரும்   ஸ்வயம்பாக   வழக்கத்தை   மேற்கொள்ள   வேண்டும்.

         ஸ்வயம்பாகம்  ( நாமே  சமைத்து  சாப்பிடுவது  - சத்வ  குணத்தோடு )  என்ற   ஒரு   சின்ன   நியமத்தால்   அநேக   நன்மைகள்   உண்டாகின்றன.

                                          *************************

     சித்த   சுத்தி,  தேக  ஆரோக்கியம் ,  செலவு  மட்டுப்படுவது ,  இதற்கு  மேலாக  குண  தோஷங்கள்   அற்ற  உணவு  ( செய்பவரின்   எண்ணங்கள்   உணவில்  பதியும்  ஆதலால்  வெளியில்   சாப்பிடுவது   தவிர்த்தல்  நலம்  ),    ஐம்பது  வயசுக்குமேல்   கல்யாணம்   கூடாது   என்பது   போன்ற    சாஸ்திர  விதிகளை   அனுசரிக்க   முடிவது ,  பிராணி   ஹிம்சைகளை   குறைவது.


                                     ****************************

     ஸ்வாமிப்   பிரசாதம் ,  குரு  பிரசாதம்   தவிர   ஸ்வயம்பாகம் தான்   என்று  ஆக்கிக்  கொண்டுவிட   வேண்டும்.

       என்  அபிப்ராயம் ,  பதினைந்தே  நிமிஷத்தில்   தயாரிக்கக்  கூடியதாக  ஏதாவது   ஒரு  சிம்பிள்   ஆகாரத்தைப்   புருஷர்கள்   அத்தனைபேரும்   தெரிந்து   கொண்டு   தாங்களே   அதைப்   பண்ணி   போட்டுக்கொண்டு   சாப்பிட  வேண்டுமென்பது.

                               
                                  *******************************

               
          அரிசியைக்   களைந்து,  உலர்த்தி ,  சிவக்க  வறுத்தெடுத்து   அரைத்து  வைத்துக்கொள்வதே  " ஸத்துமா  " .  உடம்புக்கு   நல்ல   சத்து   தருவதாலும்,
 ஸத்வ   குணம்   ஊட்டுவதாலும்   அதற்கு    ஸத்துமா  என்றே  பெயர்   இருக்கிறது.

             ஸத்துமாவிலே   மோரை   விட்டோ ,  பாலை   விட்டோ  சாப்பிடலாம்.  கொஞ்சம்   சாப்பிட்டால்  கூட   புஸ்   என்று   ஊறிக்  கொண்டு   பசி   அடங்கி  புஷ்டியாய்   இருக்கும்.

          நாள்கணக்கில்   பிரயாணம்   பண்ணும்  போது   கூட   கண்ட   இடத்தில்   கண்டதைத்   திண்ணாமல்   இதைக்  கொண்டே   காலம்   தள்ளி   விடலாம்.

                              ****************************************

           
             தானே   சமைத்துக்  கொள்வது  என்கிறபோது  வேலையைக்   குறைத்துக்   கொள்ள  வேண்டும்   என்று   இருக்குமாதலால் ,  பல  தினுஷுகளில்   வியாஞ்ஜனம்   பண்ணிக்கொள்ள   தோன்றாது.  அதாவது   நாக்கு  ருசி,  அமிர்த போஜனம்  பண்ணி   சித்த  சுத்தியை   கெடுத்துக்  கொள்ளாமல்   இருப்போம்.

                             ******************************

         இன்னொருவர்  சமைத்துப்   போடுகிறபோது  நாக்கைத்   தீட்டிக் கொண்டு, " இது  உப்பு ,  அது   உரைப்பு "  என்று   நோணா வட்டம்   சொல்லத் தோ ன்றுகிறது . இதில்   நமக்கும்   அதிருப்தி.  பண்ணினவர்களுக்கும்  மனக்கிலேசம்.


       நாமே   செய்துகொண்டால்   அந்த  சமையல்   எப்படி  இருந்தாலும்  தேவாமிர்தமாக   தோன்றும்.  சாப்பிடுகிற  வேளையில்  " அரிபிரி "  என்றில்லாமல்   சந்தோஷமாக ,  திருப்தியாக  இருக்கும்.  ஆஹாரம்  இதனாலேயே   உடலில்   ஒட்டி ,  சித்தத்திலும்   நல்லதைப்   பண்ணும்.

                             *******************************


             ஸ்வயம்பகத்தினால்   ஒரு   டிசிபிளின்  உண்டாகிறது. சும்மா  உட்கார்ந்து  கொண்டிருக்கவோ,  அரட்டை ,  சீட்டு ,  கேளிக்கை , சினிமா   என்று   போகவோ   விடாமல்   சமையல்   வேலை   என்று   ஒருத்தனைக்  கட்டிப்போடுகிறதல்லவா ?

                             ***************************

                                                                                                  - மகா  பெரியவா 







No comments:

Post a Comment