Tuesday, November 11, 2014

சுவாமி சிவானந்தர் பண்பு

துறவியின்  சிறப்பம்சம் :
                    
            ஸ்ரீ ராமகிருஷ்ணரின்   பதினாறு   சீடர்களில்  ஒருவர்   ஸ்வாமி  சிவானந்தர்.  காசி  அத்வைத  ஆஸ்ரமத்தில்   வாழ்ந்து  வந்தார்.  அப்போது  அந்த   ஆஸ்ரமத்திற்கு   பிங்கா   அரசர்   செய்து  வந்த   நிதி  உதவியினை   திடீரென   நிறுத்தி  விட்டார். வாடகை   பல  மாதங்களாகக்   கொடுக்கப்பட- வில்லை.  எனவே   வீட்டுச்  சொந்தக்காரர்   வாடகை  கேட்டு   வற்புறுத்தினார் .


         ஸ்வாமி   சிவானந்தர்   சிறிது  பணம்  சேர்த்து  வைத்து  இருந்தார்.  ஒருநாள்   ஆஸ்ரமத்தில்   இருந்த  ஓர்  இளைஞன்  அந்தப்  பணத்தை   திருடிக்  கொண்டு   ஓடி  விட்டான். போகும்போது   அவன்   ஒரே  ஒரு  பைசாவை   மட்டும்   விட்டுச்  சென்றிருந்தான்.

         அந்த   ஒரு  பைசாவைக்   கொண்டு   அன்று   ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு   நிவேதனம்  படைக்கப்பட்டது.


      அந்த    இளைஞனைப்   பற்றி   ஸ்வாமி   சிவானந்தர்   கூறும்போது,  "  அவனுடைய   இல்லாமைதான்   அவனை  அப்படிச்   செய்யுமாறு   தூண்டியது.  ஆனாலும்   கொஞ்சம்   தர்மசிந்தனை   அவனிடம்   இருந்தது.  அதனால்   ஒரு   பைசாவையாவது   விட்டுச்   சென்றான்   அல்லவா ! "  என்றார்.

            இதுவே     துறவி   ஒருவரின்   சிறப்பம்சம்.   இறைவனையே   முற்றும்   நம்பி   சரணடைந்து    வாழ்ந்ததால் தான்     சுவாமிகளால்   இவ்வாறு   நிதானமாக ,  தவறே   செய்தவரிடமும்    நற்சிந்தனைகளையே   காணுமாறு   செயல்பட   முடிந்தது   என்பதில்   வியப்பேதுமில்லை.

    சுவாமி   சிவானந்தர் 

No comments:

Post a Comment