Thursday, August 25, 2016

மாணவர்களுக்கு - தேர்வில் வெற்றி பெற ...........

       


          சில  மாணவர்கள்   தேர்வில்   வெற்றி பெற  சிரமப்படுவதாக  சில  மாதங்களுக்கு   முன்பு   வருந்தி  முறையிட்டனர்.  அவர்களுக்கு  கீழ்க்கண்ட  மந்திரங்களை   தினமும்  காலை   மற்றும்  மாலையில்  ஜபித்து வரும்படி  அறிவுறுத்த .....................அவர்களில்  மிகவும்  நடுத்தரமான  மாணவி  யூனிவர்சிட்டி  ரேங்க்  எடுத்துள்ளார்.  கண்களில்  நன்றியோடு  தான்  தினமும்  108 முறை  ஜபம்   செய்ததாகவும் ,  ,,,,.........தனது   நினைவாற்றல்   அதிகரித்ததாகவும் , அதனால்  மிகச்  சிறப்பாக...... இறை-கருணையால்     வெற்றி பெற்றதாகவும்   கூறினார்.

            
  வித்யா   வித்யாகரீ  வித்யா  வித்யாவித்யா  ப்ரபோதிநீ 
 விமலா   விபவா   வேத்யா   விஸ்வஸ்தா விவிதோஜ்வலா.

   
மேலும்  சில  பலன்  தரும்  ஸ்லோகங்கள் :
  
Image result for saraswathi images

தேர்வில் வெற்றி தரும் ஸ்லோகம்

தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.


பாஷ்யாதி  ஸர்வ ஸாஸ்த்ரானி  ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச  ஸர்வானி  துவந்து தேவி நமோஸ்துதே.




இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனப்பாடம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!    

இதனுடன்  ஹயக்ரீவரையும்  உபாசனை  செய்யலாம் .


கல்வி  மற்றும் ஞானம் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள் முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒரு வீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!


                                    Image result for saraswathi images


ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா


Image result for hayagreevar goddess images

 ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே




இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள்

சகல ஞானமும் பெற்று, புத்திமானாக, நல்ல

 அறிவாளியாக  வாழ்வில் 

உயர்வீர்கள்.

இது  எல்லாவற்றுக்கும்  மேலாக  தாய்,  தந்தையை ,  ஆசிரியரை ,  நல்லோர்களை ,  உங்கள்  சொல்லாலும், செயலாலும்   கஷ்டப்படுதாமல்  இருந்தாலே  இறைவனின்  அருள்   .........பள்ளம்  நோக்கி  வரும்  வெள்ளமெனப்  பாயும்...............   


நன்றி : ஆக்கத்தில்  உதவி : ஸ்ரீ  நடராஜ  குருக்கள்.



    

No comments:

Post a Comment