Monday, August 29, 2016

ரிபு கீதை

ரிபு கீதை  -      ஒரு  பாமரனின்  பார்வையில் :

Image result for ribhu gita


                      பகவான்  ஸ்ரீ  ரமண மகரிஷி  சந்நிதியில்  தினசரி   பராயணமாக  ரிபு கீதை நிகழ்ந்துள்ளது.  பல  சமயங்களில்  பகவான்  மிகவும்  சிலாகித்து  ரிபு கீதையின்  பாராயணப்  பயனைக்  கூறியுள்ளார்கள்.  அதனைக்  கேட்டு  பசு   லட்சுமி  நிர்விகல்ப  சமாதியில்  இருந்ததை   பகவான்   அன்பர்களுக்கு   சுட்டிக்காட்டியுள்ளார்.

             நினைவின்றி   நிற்பதுவே   அகண்ட  மாகும்
                     நினைவின்றி    நிற்பதுவே  நிட்டை   யாகும்
             நினைவின்றி   நிற்பதுவே    ஞான     மாகும்
                      நினைவின்றி   நிற்பதுவே    மோட்ச   மாகும்
             நினைவின்றி   நிற்பதுவே    சகஜ  மாகும்
                   நினைவின்றி   நிற்பதுவே   பிரம்ம   மாகும்
             நினைவின்றி   நிற்பதுவே   சிவமும்   ஆகும்
                      நினைவணுவும்   இல்லையெல்லாம்   பிரம்மம்  தானே !


                   மேற்கண்ட   ரிபுகீதை  பாடல் - 26 ( அத்யாயம் 5)  முமுக்ஷுக்கு  மிகவும்  விருப்பமான ,  முக்கியமான   நிதித்யாசனப்  பாடலாகும். அகண்டம்  என்பது   அகண்ட  ஆத்மானந்தமாகும்.  அதுவே  நிஷ்டை (தவமும் ),  அதுவே  ஞானம் , அதுவே  சகஜ  சமாதி ,  ................அதில் நிலைத்து   அவ்வாறு  இருத்தலே    பிரம்மமும் ,  அந்த   நிலையே   சிவம் ,  மற்றும்  எல்லாமும்   ஆகும் .  அந்த  நிலையில்  எவ்வித  எண்ணங்களும்   அற்று.....  இருப்புணர்வாய் .........உணருருவாய்   இருப்பதே    பிரம்மம்    ஆகும்.


                                Image result for ribhu gita

                     என்ன சொல்ல ..........பாராயணம்   செய்ய, செய்ய  ....அகண்ட  ஆனந்தமாய் ......தன்னில்  தானாய் ......சிவமே தாமாய் ...........அன்னியமில்லா ...........பிரம்மமாக  நிலைபெறுவார்   என்பது   அனுபவ    திண்ணம்.  ( மிக  உயர்ந்த  சாந்தி  நிலையை  உடனடியாய்  உணரலாம்.)

Image result for ribhu gita


மேற்கண்ட   ரிபுகீதை   நூல்   கிடைக்குமிடம் :

                                                   ஸ்ரீ  ரமணாஸ்ரமம் ,
                                                   திருவண்ணாமலை ,
                                                   தமிழ் நாடு ,  இந்தியா.

       பாராயணம்  செய்யும்  அன்பர்களுக்கு   வசதியாக  ஒலி  வடிவில் (audio- mp3)
 ரிபுகீதை ரமணாஸ்ரம  வலைப்பதிவில்  தரவிறக்கம்  செய்தும்  கேட்டு  ஆனந்தித்து  அனுபவம்  பெறலாம்.







No comments:

Post a Comment