Thursday, September 29, 2016

தேவி கட்கமாலா ஸ்தோத்ரம் :

தேவி கட்கமாலா  ஸ்தோத்ரம் :





                               தேவி  என்றால்  'சக்தி' வடிவான தெய்வீக  அன்னை ,.,.... கட்க - பாதுகாப்பு  தரும்  ஆயுதம் ( வாள் ) , கவசம்  போன்றது  ,.....மாலா - மாலை. ஸ்தோத்ரம் - கீர்த்தனை  அல்லது  ஸ்துதி , பாட்டு   ஆகும்.

                    எவர்  இந்த  ஸ்துதியை  ஸ்துதிக்கிறார்களோ ,  அவர்களின்  கழுத்தில்  அணிந்த  மாலை  போன்று, கவசமாக  இருந்து  அவர்களை  அன்னை  காப்பாள். 




                     மிகவும்  சக்தி  வாய்ந்த, ஆற்றல்  மிக்க,   மந்திர  அதிர்வுகளைக்  கொண்ட ஸ்துதி  இது. ஸ்ரீ சக்ரத்தில்  வாசம்  செய்யும்  தெய்வங்களின்  பெயர்களைத்  தன்னகத்தே  கொண்டது.

                  மத்தியத்தில்  அமர்ந்த  ஸ்ரீ  லலிதையைச்  சுற்றி,  அமர்ந்துள்ள  98 யோகினிகளையே  இதனில்  வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய  இடம் மற்றும்  சக்திகளை, அவர்களின்  செயல்களை  மனதினால்  நினைத்து, பெயரினை  பூரண  அன்போடு  உச்சரிக்க,  நம்முள்  மிகப்  பெரிய  மாற்றங்களை  உருவாக்கும்  அதிர்வுகளை  தன்னகத்தே  கொண்ட மந்த்ர  ஆற்றல் மிக்க  சொற்களால்   ஆனது.

                இதனை   பாராயணம்  செய்தாலே   இயல்பான  தியானம்  நிகழ்கிறது.






                   அம்பிகையை  நோக்கி செல்லும்  பாதை  கணித  அமைப்பு  கொண்டதே  ஸ்ரீ சக்ரத்தின்  அமைப்பாகும்.  சாதகன்  இந்த  பிரபஞ்சத்தைக்  கடந்து  நிற்கும்  பேரறிவான,  ஆற்றலை  எவ்வாறு  அடைகிறான்  என்பதே அடுத்தடுத்த  யோகினிகள்  அமைப்பிடமும்,  அவர்களின்  செயல்பாடுகளையும்  சாதகன்  தன்னுள்  மெல்ல , மெல்ல  தன்னகத்துள்ளே  உணர்ந்துகொள்கிறான்.

                  இவ்வண்டம்  கடந்த  பேரறிவே  தானாகிறான்.  உடல் வேறு ,  தான்  வேறு  என்ற  அனுபவம்  பெற்ற  பின்  மிஞ்சி  இருப்பது  ஆன்மாவே .....அறிவுமயம். மனமற்ற , எண்ணங்களற்ற .........ஆனந்தமயம்.

 
      


         " அன்னையே !  உன்னை   நீயே.....உள்ளபடி  காண்பித்து  அருள்க " என  பிராத்தித்து  தினமும்  இதனை  பாராயணம்  செய்தல் மிகவும் நன்று.  ஸ்ரீ வித்யா  உபாசகர்கள்  நவாவர்ண  பூஜையில்  கிடைக்கும் பலனை ....... ஸ்ரீ  தேவி கட்கமாலா  ஸ்தோத்திரத்தின்  முழு  விரிவாக்கமே  எனலாம்.





                 செய்ய வேண்டியதெல்லாம்  இதனை  தினசரி  பாராயணம்  செய்தலே. பின்னர்  அன்னையின்  காட்சியும், குருவும்  தாமே  வந்து  அடுத்த  படிக்கு  அழைத்துச்  செல்வார்கள்.

                  மனதில்  சொல்லி  தியானிக்க  வசதியாக  கீழ்க்கண்ட  youtube  காணொளி  காட்சி   பயனுள்ளதாக  இருக்கும்.

                  இதனை   பாராயணம்  செய்யுமிடத்தில்  ஏழ்மை , துன்பம் ,  நோய்கள் , மனக்  குழப்பங்கள் , எல்லா வித  துயரங்களும்  அகன்று விடும். சகல  தேவதைகளுடன்  கூடி  அன்னை  லலிதாம்பிகை   அங்கு  வாசம்  செய்வாள். ஆனந்தம்  பொங்கும்  செயல்கள்  நித்தியமாய்  அங்கு  நிகழும்.



பாடல்  இங்கு  பதிவிறக்கம் செய்து  பெற்றுக்கொள்ளவும்.





 நன்றி : ஸ்ரீ  வித்யா  உபாசனா  டிரஸ்ட்.
பூர்ண  மஹாமேரு  டிரஸ்ட்,சென்னை :


Sri Devi Khadgamala Stotram describes about the deities residing in Maha Meru. It is a very powerful Mantra and daily chanting this stotra will give peace of mind.
Click the link shown below to download Sri Devi Khadgamala Stotra/Mantra  in PDF(Tamil):


Sri Devi Khadgamala slogam


http://sanskritdocuments.org/doc_devii/khadgamala.html?lang=ta













                                    
 



                       

No comments:

Post a Comment