Saturday, March 11, 2017

ஸ்ரீ சக்ரத்தின் அவசியம்!

ஸ்ரீ  சக்ரத்தின்  அவசியம் - வரிவஸ்யாரஹஸ்யம் :



           ஓர்  அணுவைப்  பிளக்கும்போது  வெளிப்படும்  மூன்று ஆற்றல்கள்.........

1. எலக்ட்ரான் 

2.புரோட்டான் 
3.நியூட்ரான்      
                           என்பன  நாம் அறிந்ததே.  நியூட்ரான்  என்னும்  உட்கருவை  வைத்தே  எலக்ட்ரான்களும்,  புரோட்டான்களும்  குறுக்கும் , நெடுக்குமாக சுழல்கின்றன. மேலும்  இந்த  எலக்ட்ரான்கள்  ஓர்  அலை  வடிவிலேயே சுழலும். இந்த  உட்கருவே  அணுசக்தி  வெளியீட்டிற்கு  முக்கிய  காரணமும் ஆகும்.
        சரி, இதற்கும்  ஸ்ரீ  சக்கரத்திற்கும்  என்ன  சம்பந்தம் ? ஸ்ரீ  சக்ர  பூஜையிலும்  அதே  நிகழ்வுகள்  நிகழ்ந்தால் ............................பாருங்கள்!  அலை  வடிவிலான  தாமரைத்தளங்கள் ,  ப்ரோட்டான்களின்   செயல்கள்  போன்றே  குறுக்கும் , நெடுக்குமான  முக்கோணங்கள் ......அற்புதமான  முறையில்  அமைந்து ,  மந்திரங்கள்  அவற்றில் பட்டு  எதிரொலித்து,  மிகுந்த  ஆற்றலோடு  பூஜை  திரவியங்களால்  சாத்வீகமான  நல்லதே  செய்யும்  ஆற்றல்கள்  ( Electro  Magnetic Wave -  Positive Energy )  அந்த  இடத்தை  சுற்றியும்  அதிக  அடர்த்தியோடு  நிறைந்துவிடுகிறது. அங்கு  செல்வோர்களுக்கு  சீரான , ஒழுங்கு  நிறைந்த  சிந்தனைக்கு -  மன  ஒருமைக்கும் , அதன்  உச்சகட்டமான   எண்ணங்களற்ற   ஆனந்த  நிலையும்  சம்பந்தப்பட்டவர்களின்  உள்ளங்களில்  ஏற்பட   காரணமாகின்றது.

           Positive Energy - 70% மேல்  நீர்  மூலக்கூறுகளால்  நிறைந்த  நமது  உடல்  மிக  எளிதாக   தூய்மையான  உணர்வுகளால்   ஊடுருவதால்  நமது  கண்களுக்கே  தெரியாமல்  நீர்  மூலக்கூறுகள்  சத்வ  குணத்தை  ஆகர்ஷித்து  நோய்மூலக்கூறுகள்  மெல்ல  மெல்ல  குணப்படுத்தப்படுகின்றன. positive  energy - யால்  செல்களும்  புத்துணர்வு  பெற்று  active  நிலையை  இன்னும்  நம்முள்   முன்னெடுத்து  வருகின்றன.

   கீழ்கண்ட  நீர்மூலக்கூறுகள்  படங்கள்  எவ்வாறு  உணர்வை  வெளிப்படுத்துகின்றன  என்ற  ஜப்பான்  நாட்டு  அறிஞரால்  புகைப்படம்  எடுக்கப்பட்டது .


கோபம் , வெறுப்பு , அன்பற்ற  தன்மைகளில் அன்பு  மற்றும்  பிரார்த்தனை  பூஜைகள்  நேரங்களில்  நீர்மூலக்கூறுகள் :


Image result for water molecule photos of japan scientist image

பூஜைகள் , பிரார்த்தனையில் :

Image result for water molecule photos of japan scientist image    Image result for water molecule photos of japan scientist image


Related image

தவறான  வார்த்தைகள் ,  அதிக  ஒலி  மற்றும்  வீணான  சப்தங்களின்  போது :


Related imageRelated image  Related image



   நண்பர்களே !  நமது  உடல்  72%  நீர்   மூலக்கூறுகளால்  உருவாகியுள்ளது.
நாம்  எப்படி  உள்ளோம்  என்பதை  நமது எண்ணங்களின்  முக்கியத்துவம்  என்ன  என்பது  இப்போது  நன்கு  தெரிகிறதா ?


மந்திரங்களின்   அதிர்வுகள் , பூஜைகள்  நம்மையும் ,  நம்மை  சுற்றியும்  எவ்வளவு   ஆழமாக  பாதிக்க  முடியும்  தெரிகிறதல்லவா ...................!


    ஸ்ரீ  சக்ர  பூஜையின்   நன்மைகள்   வார்த்தைகளால்  இவ்வளவு  என்று  அளவிட்டு  கூறிவிட முடியாது. அவற்றை  ஒவ்வொரு  அத்தியாயத்திலும்  அன்னையின்  கருணையால்  பார்ப்போம் . ஸ்ரீ சக்ரத்தின்  பிந்து  ஸ்தானமே
அணுவின்  உட்கரு  போன்றது.  இன்று  மண்டையை  பிய்த்து  படித்துக்கொண்டிருக்கும்  அணுசக்தி  கொள்கைகள்  போன்ற  பலப்பல  உண்மைகளின்   அடிப்படையே  ஸ்ரீ  சக்ரம்  தன்னகத்துளே   பலவற்றைக்  கொண்டுள்ளது.




ஸ்ரீ  சக்ர  பூஜையினை  விளக்கும் தோறும்  அவற்றை  அங்கங்கே  லலிதாம்பிகையின்  கருணையால்  காண்போம்.

No comments:

Post a Comment