Monday, October 3, 2016

வேத மந்த்ரங்கள் - நோய்களை குணப்படுத்தும் ஆற்றல்

இதய  நோயை  குணப்படுத்திய  
" ஸ்ரீ  ருத்ரம் "

 Image result for siva god images

                  திரு. ரங்கன்  அவர்களின்  நண்பர் திரு.சுப்ரமணியன்  என்பவர்  இருதய  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை  சிகிச்சை  நிபுணர்கள்  அவருக்கு  பை-பாஸ்  சர்ஜரிக்கு  பரிந்துரை  செய்துள்ளார்கள். அவரிடத்து  போதிய  பண  வசதியின்மையாலும்,  தனது  மகனுக்கு  மிகப்  பெரும்  செலவு  வைக்க  மனமின்மையாலும்  அவர்  தமது  இருப்பிடமான  சென்னைக்கே   திரும்பியுள்ளார். இனி  கடவுளின்  கருணையே  கதி  என  நம்பிக்கையோடு  நாட்களை   கடத்தலானார்.

                   இங்கு  சென்னையில்   ஸத்சங்கங்கள்  மற்றும்  ' ஸ்ரீ  ருத்ரம் '  - தினசரி  11  முறை , வெவ்வேறு  கோவில்களில்   பாராயணம்  செய்யும்    ஒரு  குழுவில்  இணைந்து  பாராயணம்  செய்துள்ளார்.  அவருக்கு  ஏற்கனவே  'ஸ்ரீ  ருத்ரம் ' - சமகம்   தெரியுமாதலால்,  மிக  எளிதாக  அவர்களுடன்  பல்வேறு  கோவில்களில்  பாராயணம்  செய்துள்ளார்.

                48 நாட்கள்  கழிந்த  நிலையில்  தற்போது  ஆலோசிக்கும்  இதய  மருத்துவரிடம்  ஆலோசனைக்கு  சென்றபொழுது,  அவரது  இதயம்  பூரணமாக   குணம்  அடைந்துள்ளார்  எனவும், இனி  அவருக்கு அறுவை  சிகிச்சை , மருத்துவ  ஆலோசனை  தேவை இல்லை  என்றும், அம்மருத்துவர்  மிகவும்   ஆச்சர்யமுற்று  கடந்த  இரு  மாதங்களில்  அவர்  மேற்கொண்ட    நடவடிக்கைகளை   வினவினார்.
                  
                திரு.சுப்ரமணியன்  அவர்களும்  கடந்த  மாதங்களில்   தினமும்  11 முறை  ' ஸ்ரீ  ருத்ரம் ' -சமகம் பாராயணம், உச்சஸ்தாயீல்   செய்ததாகவும்  கூறினார்.

                   இதய  மருத்துவரும்  water therapy, music therapy, etc...போன்று ' ஸ்ரீ  ருத்ரம் '  செயல்பட்டு  அந்த   மந்திர  அதிர்வு   மிக்க  வார்த்தைகள்   குணப்படுத்தியுள்ளதாகவும்,  உத்தஸ்தாயீல்  அவர்  உச்சரித்தது........அவரது   நுரையீரலை  நன்கு  விரிவடைய   வைத்து,  அதன்  மூலம்   அதிக  அளவு  ஆக்ஸிஜன்  உள்ளே  நுழைந்து,  அதனால்  இதயம் நன்கு   செயல்பட்டு ..............குணம்   அடைந்ததாக   கூறி,    தமக்கும்  வேத  மந்திரங்கள்   நோய்களை குணப்படுத்தும்  ஆற்றல்  கொண்டவை   என்பதில்  அசைக்க  முடியாத  நம்பிக்கை   இருப்பதாகவும்   கூறியுள்ளார்.

                      நண்பர்களே,  இனியேனும்   எங்கேயாவது   " ஸ்ரீ ருத்ரம் " மற்றும்   வேத பராயணமோ , ஸ்துதிகளோ  நிகழ்ந்தால்   நின்று   சற்றே  கேட்போமாக!  தமிழ்  திருமுறைகளுக்கும்  இதே  போன்று  நோய்களை   குணப்படுத்தும்  ஆற்றல்  உண்டு!


 ஸ்ரீ ருத்ரம் :






       https://www.youtube.com/watch?v=VP8Wv1P1NFE   

1 comment:

  1. yes sir, its true words are typically arranged in slokas to vibrate every part of our body while chanting it loudly. you can feel the difference in 20 minutes if you continuously chant any mantra/song whether it is in Tamil or in Sanskrit. Even you can sing a film song with high pitch it will also give you relaxation. But the pronunciation of words makes the difference. Nice message sir.

    ReplyDelete