Thursday, October 16, 2014


தாயும் ஆனவர்:



ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்ணை   அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.

பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.

தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”

அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

"நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்...”

தயிர் டப்பா இடம் மாறியது.

கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு - உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.

“கோபாலா! அந்த டின்னேட, எல்லாத்தையும் அந்தப் பொண்கிட்ட கொடுத்திடு...”

டின் இடம் மாறியது.

அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார்.
“அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு...”

ராமுவுக்க்கு பரம் சந்தோஷம்... பெரியவாளே சொல்கிறார்கள் என்று. அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.

தாயும் மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அசோக் நகர் ராமுவைப் பார்த்து, “எவ்வள்வு ரூபாய் கொடுத்தே?” என்று பெரியவா கேட்டார்கள்.

பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது.

“பெரியவா சொன்னார்கள் என்றால், லட்சக் கணக்கில் கொண்டு வந்த் கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்?’ என்று நினைத்தார்.

“நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது. அதை கொடுத்தேன்...’

“நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே”

“இப்போதெல்லம் டெலிவரிகாக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போனால் கூட மூனு, நாலு ஆயிரம் ஆயிடறது...”

சில நிமிஷங்களுக்கு பின் பெரியவா சொன்னார்... “நீ வெறும் ராமன் இல்லை... தயாள ராமன்...”

“போதும் ! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும்...” என்று நெஞ்சுருக்கச் சொன்னார் ராமுஎன்கிற ராமன்...”

உம்மாச்சி தாத்தா சரணம் !!!

No comments:

Post a Comment