Friday, October 24, 2014

கேள்வி  -  பதில் .........ஸ்வாமி  பப்பா   ராமதாஸ் :




பக்தர் :           ஸ்வாமி.   மாலையில்   தாங்கள்   ஏதோ  சில  மந்திரங்கள்                                            சொன்னதைக்    கேட்டுகொண்டு  இருந்தேன். அதைப்  பற்றி                                         எங்களுக்கு   சிறிதேனும்   கூறுங்கள்.

ராமதாஸ் :  ஆரம்ப  ஆன்மீக   சாதனையில்,ஒரு  ஆத்ம  சாதகனுக்கு   மிக                                    கடினமாக  இருப்பது   தனது  மனதை   கட்டுப்படுத்துவதே  ஆகும்.
எப்போது  மனம்   அலைபாய்ந்த  படி  இருக்குமோ  ,  அமைதியற்றதாக  இருக்கும்போதும்   அதை  தியானத்தின்   மூலம்   இறைவனிடம்
 இருத்துவது   என்பதும்  கடினமே.

            எனவே   முதலில்  மன  ஒருமைப்பாட்டுக்கு  சில  பயிற்சிகள்  மேற்கொள்ள வேண்டும். இதற்கு  நாம ஜபம்   மிக  சிறப்பாக    உதவக்கூடிய
ஒரு  வழி.   மந்திர  ஜபம்   எனபது   இறைவனின்   திருநாமம்  மற்றும்  அவருடைய   அற்புதமான  சிறப்புத் தன்மைகள்  கொண்டது.  எப்பொழுதெல்லாம்   நீங்கள்   இறைவனின்  நாமத்தை   உச்சரிக்கிறீர்களோ  அப்பொழுதெல்லாம்  உங்கள்  மனம்  இறைவனை   நோக்கித்  திருப்புகிறீர்கள்.

          இடைவிடாத ,  தொடர்ச்சியான   உணர்வோடு  கலந்த  நாம  ஜபம்  உங்களுக்கு   அமைதியையும்,  மன  ஒருமைப்பாட்டையும் ,  சாந்தியையும், பின்பு   நிச்சல  நிலையையும்   ஒருங்கே  அளிக்கிறது.  மேலும்  அது   எல்லா  தீய  ஆசைகளையும்  அழித்து, அதே  நேரத்தில்  மனதை  தூய்மையும்,  சக்தி மிக்கதாகவும்   ஆக்குகிறது.

         மனம்   எப்பொழுது   தூய்மையாகவும்,  ஒருநிலைப்பட்ட  சக்தியுடையதாகிறதோ   அப்பொழுதே   அது   இறைவனை   தன்னிலிருந்து  வெளிபடுத்தும்   இயல்புடையதாகிறது.

         ராமதாஸ்   தன்னுடைய  அனுபவத்திலிருந்து  கூறுவது, ...... யார்  ஒருவர் ,
" ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்  ஜெய்  ஜெய்  ராம்  "  என்று   இடைவிடாமல்  ஜபிக்கிறார்களோ  ,   அவர்   உண்மையிலேயே  தூய்மையும் , அதே  நேரத்தில்  அவரது   இதயம்  வெளியிடும்  தூய்மையான  அன்பில்   அனைத்து  உயிரினங்களும்  மகிழும்   பேற்றினைப்  பெறும்.  அவர்  இதயம்  இறை அன்பால்  நிரப்பப்பட்டு,  எல்லையற்ற   ஆனந்தம்  மற்றும்  அமைதியால்   நிரம்பி  வழியும்.  இவ்விதமே   ராமதாஸை   இறைவன்  தனது  குழந்தையாக்கி  உள்ளான்.

          எல்லா   ஞான   ஆசான்களும்   கூறுவதும்  இதுவே.  நமது  எண்ணத்தில்  தூய்மை,  குழந்தை   போன்ற   கள்ளம் , கபடமற்ற   தன்மை ,  இதுவே  இறைவனை   அடையத்   தேவையானவை.  இந்த  மிக  உயர்ந்த  நிச்சல  நிலை   இறைவனின்  திரு நாமத்தை   திரும்பத்  திரும்ப   உச்சரிப்பதால்  கிடைக்கிறது.


 பக்தர் :           ஸ்வாமி   மேலும்   தியானம்   என்பதைப்  பற்றி   தயை   கூர்ந்து
                            அருளவேண்டும் !


ராமதாஸ் :   மன  ஒருமைப்பாடு   கைகூடினால்   தியானம்  என்பது                                                  தானாகவே   நிகழும்.   எல்லா   திசைகளிலும் ,  மனம்   அலை                                    பாய்ந்துகொண்டே  இருந்தால்   தியானம்  எங்கனம்  நிகழும்.   முதலில்  மனதை   பற்றி   அறிவோம்.  மனதில்   எப்போதும்   எண்ணங்கள்  பலப்பல   அலைகளாக    எழுவதும், பின்பு   அவை  வீழ்வதும்  நிகழ்கின்றன ! எனவே  முதலில்   அவற்றை   எல்லாம்   ஒரே   எண்ண   அலையாக  மாற்ற வேண்டும்.   அதனை  கடவுளின்   திருநாமம்   என்ற  ஒரே   அலையாக  மாற்றுகிறோம்.

            இறுதியாக,  அந்த   ஒரே  எண்ண  அலையும்  மறைந்துவிடும். இப்போது  எண்ணங்களே   இல்லாதாததால் ......எழுச்சி ,  வீழ்ச்சி   அற்ற  நிச்சலமான  நிலையை  மனம்  அடைகிறது.  இந்த  நிச்சல  நிலையை   மனம்   அடைந்தால் ...........உடலைப்  பற்றிய   எண்ணங்கள்   அனைத்தும்   மறைந்து  விடுகிறது.

         இதன் பின்பு  நீங்கள்   அறிவதே ......நீங்கள்   உடல்  அல்ல ,  எப்போதும் நிலையாக   இருந்து   ஒளிவிடும்   ஆத்ம  ஸ்வரூபமே   என்பதை  அனுபவப்பூர்வமாக,.........   இதுவே   சமாதி என்பதையும்   நன்கு  அறிவீர்கள் !
சமாதி  பற்றிய   முழு  உண்மையும்   இதோடு   முடிந்துவிடுவதில்லை.

        நீங்கள்   எப்பொழுது   இத்தகைய  சமாதியிலிருந்து  வெளியே    வருகிறீர்களோ ,   அப்பொழுதே   இந்த  உலகத்தை   இறைவனாக   பார்த்துப்  பழக  வேண்டும்!  இதுவே  உண்மையில்   சமாதியாகும். இந்த  உள்ளும்  இறைவன் , வெளியும்  இறைவன்   அல்லது   இறைவனின்  வெளிப்பாடே  இந்த  உலகம்  என்ற  அனுபவமே   சமாதி  என்பதின்   முழுமை  ஆகும்.

            சகஜ சமாதி  என்பதும்  இதுவே !  இந்த  பிளவுபடாத  ( உள்ளும்  ராமன் , வெளியும்  ராமன்  என்ற )   முழு  இறை  உணர்வு   நிலையில்  எப்போதும்   இருப்பதே  சமாதி, .....மற்றும்   இந்த  நிலையிலேயே   உங்களின்   பேச்சு ,  செயல் , நடை ,  பாவனை    என்ற   உலக  கர்மாவும்   ( பின்பு   அது   உலகியல்  கர்மா  அல்ல )  இருத்தல் வேண்டும்.  ஏனெனில்  இப்போது   நீங்கள்  எது  செய்தாலும்   அது   இறைவனுக்கு',  இறைவனுக்காக ........................!

        இது  இடையீடின்றி   தொடர்ந்தால் ..... சமாதிக்குச்   செல்வதும்  இல்லை.  சமாதியிலிருந்து  வெளியில்   வருவதும்   இல்லை.  கண்கள்  திறந்திருந்தாலும்   அது  சமாதியே ......தியானமே !

         இதுவே   இறை  அனுபவம்  பெற்ற  நிலை !  தியானம்   என்பதும்  இதற்கே !
தியானத்தின்  மூலம்    உடலே   நான்   என்ற   நிலையை  கடந்து  விடுகிறீர்கள். இதனால்   உங்களின்  மனமானது   இறைவன்  என்ற   எண்ணத்திலேயே , எல்லையற்ற   அந்த   உண்மையில்   இருந்து   இருந்து   அம்மயமாகிறது.
( அங்கு   ' நான் '  என்ற  அகந்தையின்   தனி  இயக்கம்   இருக்காது )

         நீங்கள்   உங்களை   இறைவனில்  இழக்கிறீர்கள்.  அங்கே  இருப்பது  இறைவன்  மற்றும்    இறைவன்   மட்டுமே !  இவ்விதமே  நீங்கள்   மன  ஒருமைப்பாடு  என்பதிலிருந்து   தியானம்   என்ற   நிலைக்கு  மாறுகிறீர்கள்.

         சமாதி  மற்றும்  சகஜ  சமாதிக்கும்   இவ்விதமே   உங்கள்  மனம்  உயர்கிறது.  இறை  அனுபவம்   என்ற   நிலையில்  படிப்படியாக  பெறும்  அனுபவம்  இதுவே !




நன்றி  :  " தி  விஷன் "  -  ஆனந்தாஸ்ரமம்  இதழ்.
              
               

No comments:

Post a Comment