Friday, October 17, 2014

சமீபத்தில்  முகநூல்   பார்த்த  பொழுது   தமிழ்மறை  என்ற  பக்கத்தில்  பார்த்தேன்.  எமது  கல்லூரி  நாட்களில்  இருந்தே     தினமும் பாராயணம்  செய்யும்   பதிகம்.   மற்றவர்களுக்கும்   பயனளிக்கும்  என்பதால் ............

இந்தப்   பதிகத்தை   பாராயணம்   செய்தால் தேவாரப்   பதிகங்கள்   முழுவதையும்   (படித்த) பாராயணம்  பலன் கிடைக்கும். 

| திருஞானசம்பந்தர்


                                                         

இந்தப் பதிகத்தை பாராயணம் செய்தால் தேவாரப் பதிகங்கள் முழுவதையும் படித்த பலன் கிடைக்கும்.

திருஞானசம்பர்   தினமும்   ஒவ்வொரு   தலமாக   தரிசனம்   செய்து   திருமுறைகள்   பாடி   வந்துகொண்டு  இருந்தார்.  அந்நாட்களில்   அவரின்   தந்தை  சிவபாத ஹிருதயர்  தினமும்   ஞானசம்பந்தரின்    திருமுறைகளை   பாராயணம்  செய்த  ( படித்த )    பின்னரே   உணவு   எடுத்து   வந்தார்.  தினமும்   பதிகம்   பெருகப்  பெருக   தந்தையாரின்  பாராயணக்  காலமும்   நீண்டுகொண்டே  சென்றதால்,   உணவு   உண்ணும்   நேரமும்    தள்ளிப்போனது.

இது   திருஞானசம்பந்தரின்   கவனத்திற்கு  வந்தது.  அவர்  தந்தையாரிடம் , " தந்தையே !  இதுவரைப்   பாடிய   பாடல்களின்   பயனும்,  இனிவரும்   தேவாரங்களைப்   பாடுவதால்  கிடைக்கும்    பயனும்   இந்த   ஒரு   பதிகம்  பாடினாலே  கிடைக்கும் "  என்று   அருளிய   பதிகம்   தான்   " திருவெழுக்கூற்றிருக்கை "  என்ற   பதிகம்.  இதனையே   நாமும்   பாராயணம்   செய்து  வந்தால்   மனத் தூய்மை , , இறையருள்   கிடைக்கும் !

இறையருள்   கிடைத்தால்   வேறு  என்ன  வேண்டும் ?  இறையருளே   எல்லாம்  தரும். எல்லா  நலன்களும்   நம்மை  வந்தடையும்.


பாடியவர்: திருஞானசம்பந்தர்:     தலம்: சீர்காழி
******************************************

ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;

ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,

முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி

அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;

பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வரபுரம் ஒன்று உணர்சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
                                       
          சிவாயநம   என்று  இருப்பாருக்கு   அபாயம்  ஒருநாளுமில்லை .

நன்றி : தமிழ்மறை  முகநூல்  பக்கம்.

No comments:

Post a Comment