Friday, October 17, 2014

மன்னன்  வணங்கிய   ஓடு :  
              
     

                பாண்டிய   மன்னன்    வரகுண    பாண்டியன்   சிவபெருமானிடம்   மிகுந்த    பேரன்பு   பூண்ட   அடியவனாக  விளங்கினான்.


                   அவன்   சிவபெருமானின்   பல்வேறு   திருத்தலங் களுக்கு   சென்று   வழிபடுவதைத்    தலையாயக்    கடமையாகக்   கொண்டிருந்தான்.


                ஒரு முறை   அவன்   திருவிடைமருதூரை   அடைந்தான்.  திருக்கோவிலுக்குச்   செல்வதற்கு  முன்பு     கோவில்   இருந்த   வீதியை  வலம்   வந்தான்.


                அங்கே   வழியில்   ஒரு   மண்டை   ஓடு   கிடந்தது.  அதைப்   பார்த்த  அவன்  கண்களில்   நீர்  மல்க    அந்த   மண்டை   ஓட்டிற்கு   முன்பாக  பலமுறை   நிலத்தில்   விழுந்து   வணங்கினான்.


              "  எதற்காக   இப்படி   மண்டை  ஓட்டை   வணங்குகிறீர்கள் ? "  என்று   உடன்  வந்தவர்கள்   கேட்க ,


                "  இறந்த   பின்பும்   வீதிவிடங்கரின்   திருவீதியில்  கிடக்கும்   நற்பேறு  இந்த   மண்டை   ஓட்டிற்கு   கிடைத்துள்ளதே !  இப்படிப்பட்ட   நற்பேறு   எனக்கும்   கிடைக்க   இறைவன்  அருள்புரிய   வேண்டும்   என்ற   எண்ணத்தில்தான்   இப்படி   வணங்கினேன் ! "  என்று   பதில்   சொன்னார்   வரகுணபாண்டியன்.


               

No comments:

Post a Comment