Thursday, October 30, 2014

ராம !  ராம !!  ராம !!!..........

Photo: ஸ்ரீமத் போதேந்த்ர யோகீந்த்ற தேசிகேந்திரம் உபாச்மஹே.

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம!!!

"ராம" என்னும் சொல் ஒரு நபரையோ, குணத்தையோ குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு தத்துவம். நிர்குண பரபிரம்மத்தின் பெயர். 

ஸ்ரீமத் பாகவதத்தில் சுகசார்யார் "எத்தனையோ ராமர்கள் இருந்திருக்கின்றார்கள் அதில் ரகுகுல ராமைப்பற்றி உனக்கு சொல்கிறேன் கேள்" என்று பரிக்ஷித் ராஜாவிற்கு கூறினார்.
நமக்கு தெரிந்தது தசரத மைந்தனான சீதாராமன் மட்டுமே. ஆனால் புராணத்தில் ராமன் என்னும் பெயரில் எண்ணற்ற மகான்களும்,மகாபுருஷர்களும் இருக்கின்றனர். ராமாவதாரத்திற்கு முன் அவதாரமும் ராமன் தான்.அதாவது பரசு ராமன் என்பது.........
கையில் கோடரி இருந்ததனால் அந்த ராமனுக்கு அப்பெயர்.

தசரதராமனது அடுத்த அவதாரமும் ராமன் தான். அது பலராம அவதாரம். பலம் பொருந்தியதனால் அந்த ராமனுக்கு அப்பெயர்.
"ராம" என்னும் சொல்லின் சிறப்பு அப்பெயர் கொண்ட நபரால் அல்ல. "ராம நாமதினால்தான் அந்த நபர்களுக்கு சிறப்பு".


சரி,.... இப்பொழுது ராமநாமத்தின் சிறப்பை பார்போம்:


நான்கு வேதங்களின் நாடு பாகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். ஸ்ரீருத்ரத்தின் நடுவில் சிறப்புற திகழ்வதே "நம:சிவாய" என்னும் சிவா பஞ்சாக்ஷர மந்திரம்.
"சிவ" என்றால் நன்மை,மங்களம் என்று பொருள்.


நம:சிவாய என்றால் மங்கலத்தை தருபவருக்கு போற்றி என்று பொருள். இதில் முக்கிய எழுத்தாக இருப்பது "ம:" என்னும் எழுத்து. இதை எடுத்துவிட்டால் "ந சிவாய" என்றாகிவிடும். அதன் பொருள் "நன்மைகளை என்றுமே தராதவர்" என்று பொருள்.
திருமாலின் பஞ்சாக்ஷரம் "நாராயணாய" என்பதாகும். நாராயண என்னும் சப்தத்திற்கு "பரபிரம்மம்" என்று பொருள்.இதில் முக்கிய எழுத்து "ரா" என்பதாகும். இவ்வெழுத்தை அகற்றிவிட்டால் "ந அயனாய" என்றாகிவிடும். அதாவது அயனம் என்றால் கண், "கண்கள் அற்றவன்" குருடன் என்று அனர்த்தமாகிவிடும்.


இவ்விரண்டும் பஞ்சாக்ஷரங்களுக்கு "ஆத்ம அக்ஷரம்" என்று அழைக்கப்படும்.


இவ்விரண்டு ஆத்மஅக்ஷரங்களும் ஒன்று சேர்த்தல் "ராம:" என்னும் அற்புதமான திருநாமம் கிடைக்கும்.
எவ்வாறு "நம:சிவாய" என்பதில் "ம:" என்னும் எழுதும், "நாராயணாய" என்பதில் "ரா" என்னும் எழுதும் நீங்கிவிட்டால் அவைகள் பொருளற்றனவாக மாறிவிடுகிறதோ,அவ்வண்ணமே பரம்பொருளான "ராமன்" இல்லாவிடில் இப்பிரபஞ்சம் பொருளற்றதாகிவிடும் என்பதனை குறிப்பதே "ராமநாமம்" ஆகும்.


ஆக ராமநாம ஜபம் செய்தால் அது குணமுடைய சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து தியானிப்பதாகவும், நிர்குண பரப்பிரம்மத்தின் தியானமாகவும் அமையும்.

ராம ராம ராம ராம ராம ராம.


-------------------------------------------------------------சுவாமி  ஞானானந்தர் 



நன்றி : ஞானானந்தமயம் 

1 comment: