Friday, October 31, 2014


பிறப்பும்  இறப்பும்  :

            


ராமரும் இலக்குவணனும் வனவாசத்தின்போது படகில் ஆற்றைக்கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு மரத்துண்டுகள் நீரில் மிதந்தவாறு வந்துகொண்டிருந்தது. ஸ்ரீராமர் இலக்குவனக் கூப்பிட்டு, ''இலக்குவா!! அதோ பார்" என்று அந்த மரக்கட்டைகளைக் காண்பித்தார். இவை இரண்டும் சிறிது தூரம் நீரில் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தது. 

திடீரென்று குறுக்கே பாறை ஒன்று வந்தது. பாறையில் மோதி கட்டைகள் பிரிந்தது. இதைக்காண்பித்து, "அன்பு தம்பி!! நம் உறவும் இப்படித்தான். எங்கிருந்தோ வந்த கட்டைகள் சிறிது நேரம் ஒன்றாக இருந்தது. பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்தது. உண்மையில் அவை சேரவும் இல்லை பிரியவும் இல்லை.

 அவ்வாறே நாமும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இப்பொழுது இணைந்துள்ளோம். காலம் கட்டாயம் அனைவரையும் அனைத்திடமும்   இருந்து பிரித்துவிடும். எதற்கும் நாம் வருந்தக்கூடாது. இணைவதும் பிரிவதும் இயற்கையின் நியதி, அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது!!!" என்று மகா உபதேசம் செய்தார்.


             சமீபத்தில்    முக  நூலில்  கேட்ட  ஒரு   காணொளி  எம்மை  மிகவும்  பாதித்து ,  என்ன  செய்கிறோம் , என்ன  செய்ய  வந்தோம் , என்ன  செய்துகொண்டு உள்ளோம் ?  இங்கு  செய்வதற்கு  என்ன  உள்ளது ?.......................இனி  இது  நிகழாமல்  இருக்க  என்ன  செய்ய ?

எதை  அடைந்தால்   நிலைத்த  அமைதியும் ,  பரிபூரண  நிம்மதியும்  பெறமுடியும் ?
இவற்றை   விரும்புவோன்  யார் ?  நானே !

நான்  என்பது ...............

உடலல்ல .........மனம்  அல்ல .............நரம்பு , தசை , எலும்பு , மஜ்ஜை , ரத்தம் ..........வைத்து  கட்டிய  இந்த  கூடு  அல்ல .........தூங்கும்போது  உள்ள  மனம்  அல்ல ..........உள்ளே  சென்று  வரும்  காற்று ..மூச்சு ......அல்ல !.......


உள்ளே  பார்க்கும்  இந்த  பார்வை  நான்  அல்ல !


நான் .......நான்  என்று  எழுந்து  வரும்   இந்த  நான்  யார் ?  எங்கு  உள்ளது ?  இதன்  பிறப்பிடம்  எது ?  எங்கே ?................. 


விசாரம்..........இடைவிடா  விசாரத்தால்  உணர்வே  உருவாய் ...............சொல்லமுடியாத  ஒரு  மாபெரும்  நிம்மதி  ..........எங்கும் , எதிலும்  பரவி  நிற்கிறதே !


இவற்றை  உணர்வோன்   நானே !


எனில்,    இந்த  .........நான்  யார் ?









நன்றி : சனாதன தர்மம்.

1 comment:

  1. Bumi Anna Today (04-06.2016) i read this.

    All are very powerful words anna

    By k.senthilnaathaa, k.pudur

    ReplyDelete