Friday, October 17, 2014

கும்பகர்ணன்  கேட்ட  வரம் :
                     
            ராமருக்கும்   கும்பகர்ணனுக்கும்   யுத்தம்  நடந்தது.

                   அப்போது   கும்பகர்ணன்   ராமரைப்   பார்த்து,  "  ராமா ! இந்தப்  போரில்   நான்  இறப்பதும் ,   நீ   வெற்றி   பெறுவதும்   உறுதி.  


                அப்படியிருக்கும்   போது    நமக்குப்   பின்னால்   வரக்கூடிய   சந்ததியினர்   உன்னைப்பற்றியும்     ராவணனனைப்பற்றியுமே    பெருமையாகப்   பேசுவார்களே   தவிர   என்னைப்   பற்றி   நினைக்கக்கூட   வகை   இல்லாமல்  போய்விடுமே !"  என்று   கூறி   வருந்தினான்.


                  அதற்கு   ஸ்ரீ  ராமர்,  " வருந்தாதே   கும்பகர்ணா ! எங்களைப்  பற்றி   பேசும்   இடங்களிலெல்லாம்    உன்னைப்   பற்றியும்   பத்து    பேராவது  நினைக்கும்படி  செய்துவிடுகிறேன் ! "  என்று   அருளினார்.

               
               இதன்  விளைவு  தான்   இன்றும்   ராமாயணம்   நடைபெறும்   இடங்களில்   எல்லாம்   குறைந்தது    பத்து   பேராவது   கும்பகர்ணனை   நினைத்து  ( தூங்கிக் )  கொண்டிருகிறார்கள்.

No comments:

Post a Comment