Friday, October 31, 2014

எது பகுத்தறிவு?

பிரம்மமயம் :


எது பகுத்தறிவு?
சில வருடங்களாக "கடவுள் இல்லை" என்று சொல்வது மட்டுமே பகுத்தறிவு என்று தவறாக கருதப்படுகிறது.
உண்மையில் கடவுளே இல்லை என்று சொல்வது பகுத்தறிவல்ல. உண்மையில் கடவுள் என்றால் என்ன? ........
எது  கடவுள் தன்மை ?........
அதனை  அடைவது   எவ்வாறு ?..........
என்பதனை பகுத்து  ஆராயும் அறிவுக்கே பகுத்தறிவு என்று பொருள்.

எது கடவுள்?
நம் வேதங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை, அவன் ஆதியும் அந்தமும் அற்றவன். அனைத்தும் ஆனவன்.ஏகன் அநேகன் என்றெல்லாம் கூறுகிறது.
அக்கூற்றுகளின் வழியில் சென்றால் நமக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாக தெரியும்.
அது "கடவுள் ஒன்றே" என்பதுதான்.
ஒன்றான இறைவன் பலபெயர்களாலும் உருவங்களாலும் கற்பனை செய்யப்படுகிறான்.
அதை"ஏகம் சத்! விப்ரா பஹுதா வதந்தி" என்கிறது ரிக்வேதம்.
உலகில் ஒரே கடல்தான் உள்ளது. ஆனால்
"இந்தியப்பெருங்கடல்" "வங்கக்கடல்" "அரேபியக்கடல்"...........என்றெல்லாம் அதற்கு கற்பனைப்பெயர்கள் பல வழங்கப்பட்டாலும் கடல் பெயரற்ற ஒன்றுதான்.
அவ்வண்ணமே இருக்கும் ஒரே இறைவனுக்கு, இறைவன், கடவுள், ஆற்றல், இயற்கை,நுண்ணறிவு, சித், ப்ரஹ்மம், நுண்ணுணர்வு, சிவன், விஷ்ணு, அல்லாஹ், அருகன், ஈஷ்வா, அடநோமஸ்......................என்றெல்லாம் பற்பல கற்பனை பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன.  


ஆனாலும் இறைவன் என்று கூறப்படும் அது பெயரில்லா, உருவமில்லா, முழுமையான ஒன்று.
அது இரண்டுகள் அற்றது.



எப்பொழுது நம் மனம் வியவகரித்து கற்பனைகளை உண்டாகுகிறதோ அப்பொழுது இரண்டுகளற்ற இறைவன் என்னும் உண்மை நம் கண்களுக்கு பலவான உலகம் என்னும் மாய தோற்றமாக தெரிகிறது.


எப்பொழுது மனம் கற்பனைகளை உண்டாக்க நிறுத்தி அனைத்தையும் ஒன்றாக கருத துவங்குகிறதோ அப்பொழுது ஆத்மலாபம் சித்திக்கும்.


தங்கம் ஒன்றுதான் ஆனால் அதற்கு கம்மல்,மாட்டி, வலை, கொலுசு, சங்கிலி என்று எண்ணற்ற கற்பனைப் பெயர்களும் வடிவங்களும் வழங்கப்படுகின்றன. பொருட்கள் பலவாக இருந்தாலும் அவற்றின் ஆதாரம் ஒன்றுதான். அதுவே தங்கம். பொருட்கள் இல்லாமல் தங்கம் இருக்கும். 


ஆனால் தங்கம் இல்லாமல் அப்பொருட்கள் நிலைநிற்காது.
அதுபோலவே நாம் பலவற்றை நம் மனம் என்னும் கண்ணால் கண்டாலும், அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஒரே சக்திதான். அச்சக்தியையே நமக்கு புரிய கடவுள்,.....ப்ரஹ்மம்.......என்றெல்லாம் கூறுகிறோம்.


எவ்வாறு நீர்க்குமிழி நீரிலயே பிறந்து,வளர்ந்து, உடையுமோ அவ்வணமே அனைத்தும் இறைவனிடமே தோன்றி,...வளர்ந்து,....ஒடுங்குகின்றன.
இருப்பது அவ்வாற்றல் ஒன்றே.


இருப்பவன் இறைவன் ஒருவனே!

அவனைத் தவிர்த்து நீங்களும், நானும் இல்லவே இல்லை.  இறைவனத்  தவிர்த்து நமக்கும் வேறு பொருட்களுக்கும் இம்மியளவும் தனித்ததொரு இருப்பு இல்லை.

இதை  உணர்வதற்கே  இந்த  மனிதபிறவி ,..........உயிர்  வாழ்தல் ...........மூச்சுவிடல் !
எல்லாம் !.........

தனித்த  இருப்பு  இன்றி  இருத்தலே ............பிரம்மத்தில்.........அதுவாய்  இருத்தலே .......சரணாகதி ........முக்தி   என்பதும் !

                              

சரி !  இதை  எப்படி  தெரிந்துகொண்டு  அதுவாய்  இருப்பது .......?

சீடன்:- சுவாமி! நீங்கள் எங்கும் ப்ரஹ்மம் தான் உள்ளது அதைத்தவிர வேறு எதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கு உலகம் தான் தெரிகின்றதே தவிர ப்ரஹ்மம் தெரியவில்லையே.!! ஏன்?
.
சத்குரு:- ஒருவன் நகை வாங்க ஆசாரி இல்லத்திற்கு சென்றான். அங்கு அவன் பொன்னால் ஆன வளையல், காப்பு, கம்மல், பிள்ளையார் மாடம், பற்பல வடிவங்களில் பற்பல நகைகளைப் பார்த்தான். 

ஆனால் அங்கு உள்ள ஆசாரிக்கோ, அவை யாவுமே பொன்னாகவே தெரிந்தன தவிர பல பொருட்களாக தெரியவில்லை. தங்கமும் அதன் எடையும் தவிர வேறு எதுவும் அந்த ஆசாரிக்கு முக்கியம் இல்லை, 

அதே போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை, ஆதலால் எனக்கு அனைத்துமே பிரம்மமயம். உனக்கு உலகில் பலவற்றில் பற்று உள்ளது. பிரம்மத்தைத்தவிர வேறு பலவும் உனக்கு வேண்டியுள்ளது. ஆகையால்தான் உனக்கு உலகம் தெரிகின்றது. இருவருக்குமே காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வை வேறு!!!


பிரம்மம் ஒன்று.  எல்லாம் ஒன்று.... என்பது வேதத்தின் கூற்று.அது எப்படி சாத்தியம்?

எல்லாம் ஒன்று,கடவுள் ஒன்று என்றால் அந்த ஒன்று ஏதோ சப்பாத்தி மாவைப்போலவோ,கிரிக்கெட் பந்தினைப்போலவோ ஒரு வடிவமாக இல்லை.


அது எப்படி ஒன்று என்பது தாங்கள் அத்வைதிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தெரியவில்லை.
இப்பொழுது ப்ரஹ்மம் (அ) இறைவன் (அ) பிரபஞ்சம் (அ ).................. எப்படி ஒன்று என்பதனை பாப்போம்.

இங்கு ஒரு உதாரணத்தை பார் ப்போம்.
ஒரு மகிழுந்து(கார்) உங்கள் முன்னாள் இருக்கிறது என்பதாக வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது உங்களிடம் நான் வந்து உங்கள் முன்னால்  இருப்பது என்ன ? என்று வினவினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
கார்..........என்றுதானே.
ஆனால் நான் சொல்கிறேன். அங்கு கார் இல்லை பல ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கலாலான ஒரு இயந்திரம் உள்ளதென்று..........! 

இதல் எது சரி?
இரண்டுமே சரிதான்.


உண்மையில் கார் என்ற ஒரு பொருள் உலகில் இல்லவே இல்லை. அது பலப் பல உதிரி பாகங்களால்  ஒருங்கிணைந்த ஒன்று. நீங்கள் உதிரிபாகங்களாக பார்த்தால் பலவாகவும், அனைத்தின் ஒருங்கிணைப்பாக பார்த்தால்...... காராக, ஒன்றாக தெரிகிறது.
அதே போல் தான் இப்பிரபஞ்சத்தில் இருப்பில் அதாவது உண்மையில் உள்ள அனைத்தின் ஒருங்கிணைந்த கூட்டிற்கு வழங்கப்படும் பெயர் தான் ப்ரஹ்மம்,இறைவன்,கடவுள்,இயற்கை........என்பதெல்லாம்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் ஒருங்கிணைப்பிற்கு வழங்கப்படும் பெயரே இறைவன்.


நீங்கள் அந்த ஒருங்கிணைப்பை தனித்தனியாக பார்த்தல் உலகமாகவும்,அனைத்தின் கூட்டாகப் பார்த்தல் பிரம்மமாகவும் தெரிகிறது.
இப்படித்தான் ப்ரஹ்மம் ஒன்று ஆகிறது.
எப்படி பல கம்பிகள் ஒன்று சேர்ந்து வலை ஆகிறதோ,
எப்படி பல ஆயிரம் நூல் சேர்ந்து ஒரு ஆடை ஆகிறதோ,
அப்படித்தான் எல்லா நட்சத்திரங்களின், எல்லா கோள்களின், எல்லா தாவரங்களின், எல்லா ஜீவராசிகளின், எல்லா மிருகங்களின், உங்களின், எனது ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த கூட்டிற்கு(the mass totality) வழங்கப்படும் ஒரு பெயரே ப்ரஹ்மம்.
அல்லேலூயா என்றோ ,  அல்லா  என்றோ ....... ப்ரஹ்மம் என்றோ, இறைவன் என்றோ தனித்து எதுவுமே இல்லை.


இருப்பதெல்லாம்   ஒன்றேயான   ஆத்மவஸ்து !.......ஸ்வரூபம் ........அதுவே  சுகமயம் !
உணர்வே  தனது  உருவமான .........  பூரண  உணர்வு மயம் !



நன்றி : சனாதன தர்மம்.

No comments:

Post a Comment