Thursday, October 16, 2014

யார்தான்   தவறு   செய்யவில்லை ? 

           
           அசோகவனத்தில்   இருந்த  சீதையை  அங்கிருந்த   அரக்கியர்கள்  மிகவும்   துன்புறுத்தினார்கள்.


                    இதனை   அறிந்த   ஆஞ்சநேயர்   அவர்களைக்   கொல்ல  நினைத்தார்.

               
               அப்போது   சீதை,  "  ஆஞ்சநேயா    அவர்களை  ஒன்றும்   செய்யதே ! யார்தான்   தவறு   செய்யவில்லை ? "  என்று  அனுமனைக்   கட்டுப்  படுத்தினாள்.

             
                  தவறு   செய்வது   மனித  இயல்பு.


              மன்னிப்பது    தெய்வீக   குணம்  என்று   ஒரு   பொன்மொழி   கூறுகிறது.


               அன்புக்குப்   பகைவனில்லை   என்பது   முற்றிலும்   உண்மை.

         
           புகை  நடுவினில்   தீயிருப்பது  போல்   பகை   நடுவிலும்   பரமன்   வாழ்கிறான்    என்பதே   பாரதியின்   வாக்கு.


     ( இன்றைய    அசோகவனம்   சீதை   கோவில்  மற்றும்  அனுமனின்   பாதம்  பதிந்த  பாறை  )
        

No comments:

Post a Comment