Thursday, October 16, 2014


ஆத்ம   ச்ரேயஸுக்கு   ஹானி :
 


பைஜாமா-ஜிப்பா போட்டுக் கொள்கிற ஸ்த்ரீகள் மேலுக்கு அங்க வஸ்த்ரம் மாதிரி ஒன்று பேருக்குப் போட்டுக் கொள்வதாகத் தெரிகிறது. ஸ்த்ரீத்வம் என்று இருப்பதன் மான, கெளரவ, வெட்கங்களுக்கு இந்த மேலாடை போதவே போதாது.

யதோக்தமாகப் புடைவை உடுத்திக்கொண்டு அதன் மேலாக்குப் போர்வையிலிருப்பதுதான் அவர்களுக்கு லக்ஷணம், ரக்ஷணம் எல்லாம். புருஷர்களின் தப்பான பார்வையைத் தூண்டிக் கொடுக்கிற எந்த ஆடை அலங்காரமும் அவலக்ஷணந்தான்.

பெண்கள் கற்பு நெறியை நெருப்பு மாதிரிக் காப்பாற்றி வந்து அதையே தேசாசாரத்தின் ஜீவரத்தமாகப் பண்ணிக் கொண்டிருக்கிற இந்த பாரத வர்ஷத்திலே அதற்கு ஊறு விளைவிக்கும்படி பண்ணினால் நம்முடைய மஹோன்னத நாகரிகமே இடிந்து விழுகிற மாதிரிதான்!

இன்றைக்கு ஜிப்பாவுக்கு மேலே பேருக்கு ஒரு வஸ்திரம் என்பது எதிர்காலத்தில் இல்லாமலே போகலாம். ஏனென்றால் மானாவமானங்களை மதிக்காமல் ஸெளகர்ய – அஸெளகர்யங்களைப் பார்த்தல்லவா இப்போது உடுத்தத் தலைப்பட்டிருக்கிறார்கள்? ஜிப்பாவுக்கு மேலே அங்கவஸ்த்ரம் மாதிரி ஒன்று போட்டுக்கொள்வது அஸெளகர்யமாயிருக்கிறது என்று தோன்றிவிட்டால்?

ரொம்பவும் அருவருப்பான இன்னொரு விஷயம் ஸ்த்ரீகளுக்கு ‘நைட்-கெளன்’ பழக்கமும்   வந்திருக்கிறது என்பதாகும். குருவை மிஞ்சின சிஷ்யனாக இதில் வெள்ளைக்காரர்களையும் மிஞ்சி விட்டிருக்கிறார்களென்று தெரிகிறது. வெள்ளைகாரர்களில் புருஷர்கள்கூட ‘பெட்-ரூமில்’ மட்டுந்தான் ‘நைட்-கெளனில்’ இருப்பது; அந்த ரூமை விட்டு அகத்துக்குள்ளேயே வெளியில் வந்தால்கூட அப்படியே வராமல் ஸாதா ட்ரெஸ்ஸுக்கு ‘சேஞ்ஜ்’ பண்ணிக் கொண்டுதான் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நம் தேசத்துப் பெண்களோ ‘நைட்-கெளனி’லேயே ‘நைட்’ போன அப்புறமும் தெருவில்கூட சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் தலைகுனிவான விஷயம்.

                 இப்படியெல்லாம் செய்வது ஸ்த்ரீகளின் ஆத்ம ச்ரேயஸை அடியோடு கெடுக்கும். தேசத்திலும் அமங்களங்களை, பல தினுஸான பீடைகளை வ்ருத்தி பண்ணும்.

- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா

No comments:

Post a Comment