Friday, October 10, 2014

             பீஷ்மரின்  செயலும்,                                   திரௌபதியின்  சிரிப்பும் :
                      

        பீஷ்மர்   அம்புப்   படுக்கையில்   கிடந்தபோது   தருமருக்கு   பல  நீதிகளை , பல  சம்பவங்களாகவும் ,  கதைகளாகவும்   கூறிக்  கொண்டு   இருந்தார்.

         அப்போது   திரௌபதி   அதைப்  பார்த்துச்  சிரித்தாள். " ஏனம்மா  சிரிக்கிறாய்  ? "  என்று   பீஷ்மர்  கேட்டார்.

         அதற்குத்   திரௌபதி,  "  இன்று  இத்தனை   நீதிகள்   கூறுகிறீர்கள்.  ஆனால்  அன்று   அரசவையில்   நான்   மானபங்கம்   செய்யப்பட்டபோது   தாங்கள்  வேடிக்கை   மட்டும்   பார்த்துக்கொண்டு   இருந்தீர்களே ,  ஒழிய   எந்த   நீதியையும்   அன்று   அவர்களுக்கு  எடுத்துக்கூறித்   தடுக்கவில்லையே ! அதை   நினைத்துதான்   இப்போது   சிரித்தேன் ! " என்றாள்.

          "  நீ  சிரித்தது   சரிதான் !   அன்று   நான்   அதர்ம  வழியில்  இருந்ததற்குக்  காரணம்  துரியோதனன்   கொடுத்த   உணவை   சாப்பிட்டுக்கொண்டு   இருந்ததுதான்,  அந்த   உணவின்   குணதோஷமே   என்னை   அன்று   இயக்கியது.  அதனால்   என்னிடம்   சாத்வீகக்  குணம்  குறைந்திருந்தது.


           இன்றோ ,   என்  உடலில்   உள்ள   அத்தனை   ரத்தத்தையும்   அர்ஜுனன்  தன்   அம்பினால்   எடுத்து ,   என்னைப்   பரிசுத்தம்   உள்ளவனாக  மாற்றி விட்டான் !

           அதனால்   தானம்மா   நீதிக்  கதைகளைச்   சொல்லிக்  கொண்டு  இருக்கிறேன்  "  என்றார்    பீஷ்மர்.

No comments:

Post a Comment