Wednesday, October 8, 2014

ஸ்வாமி  ராமதாஸ் :


   "  இங்கு  அவரே  பக்தன்,  அவரே    பகவான்.  இங்குள்ள  எல்லா  உருவங்களும்   அவரே,     அனைத்திலும்  அவரே   நிறைந்து , அனைத்துக்கும்  மேலானவராகவும்  இருப்பவர்.

      இங்கு  நிகழ்வதெல்லாம்  அவரின்  தெய்வீகத்தின்  திருவிளையாட்டே. இந்த   உலகமும்,  பிரபஞ்சமும் ..........எல்லா  விண்வெளி  உலகங்களும்  அவருடையதே. எங்கும்  நிறைந்த, தலைமையாய்  உள்ள  தானே  தன்னை  அனைத்தின்  உருவங்களாய்  வெளிப்படுத்துகிறது. எனவே  எல்லா  உருவங்களின்  உள்ளேயும்  அவரே  உள்ளார்.

   
     அவரே  எல்லா  இடங்களிலும்,  எல்லா  நிகழ்ச்சிகளிலும்  ஈடுபட்டு  செய்பவர் , செயல் , செயல்விளைவு  ஆகவும்  உள்ளார் .

     எனவே  நிகழ்வது  அனைத்தும்  அவரின்  அருள்  விளையாட்டே !

நன்றி : தி  விஷன் ,  ஆனந்தாஸ்ரமம் 

No comments:

Post a Comment