Thursday, October 16, 2014

ஞானம்  வந்து  விட்டது !



                  தம்முடைய   மகனும்,  ஞானியுமான   சுகதேவரிடம்  வியாசர்  சொன்னார்,  "  குழந்தாய் !  நீ   என்னவோ   ஞானிதான்.  ஆனால்   உன்மீது   இன்னும்  குருவின்   முத்திரை   விழவில்லை !  ஜனகரிடம்   போ "

                                ஜனகர்   தம்   விசாலமான   உப்பரிக்கையில்   மூன்றாம்   மாடியில்   அமர்ந்திருந்தார்.  சுகதேவர்   அங்கே   சென்றார்.  ஜனகரின்   வினாக்களுக்கு   உடனுக்குடன்   பதில்   கூறினார்.

                          "  எதற்கு   வந்தாய் ? "

                          "  ஞானம்  பெற ! "

                          "  யார்   அனுப்பியது ? "

                          "  வியாசர் "

                          "  எங்கிருந்து  வருகிறாய் ? "

                          "  கடைத்தெருவிலிருந்து ........."

                          "  வரும்பொழுது   கடைத்  தெருவில்   என்னென்ன   பார்த்தாய் ? "

                         "  சக்கரைப்   பணியாரம்   அடுக்கி   வைத்திருந்ததைப்
பார்த்தேன் ! "

                        "  இன்னும்   என்னென்ன   பார்த்தாய் ? "

                        "   இங்கே   ஏறி   வர   சர்க்கரையால்    ஆன   மெத்தைப்  படிகள்   இருந்தன.  சர்க்கரையால்   ஆன   பொருட்கள்   வழியில்  இருந்தன.  மேலும்   சர்க்கரை   உருவங்கள்   இங்குமங்கும்   நடமாடுவது   தென்பட்டன ! "

                        "  இப்போது   காண்பது   என்ன ? "

                        "  ஒரு   சர்க்கரைச்   சிலை   இன்னொரு   சர்க்கரைச்  சிலையோடு  பேசிக்கொண்டிருக்கிறது. "

             உடனே   ஜனகர்,  " நீ  போகலாம்.  உனக்கு   எல்லா  ஞானமும்   வந்து  விட்டது ! "  என்று   அருளினார்.



சுகப்ரம்மம்   ஜனகருடன் ..!

குறிப்பு :
                      இங்கு   சர்க்கரை  என்பது    பிரம்மம் ,  ஆத்மா   என்று   பொருள்படும்.   ஆம் !  சுகதேவர்  ( சுகப்ரம்மம் )   அனைத்தும்    ஆன்மாவே ,  பிரம்மமே   என்ற   அனுபவத்தில்   இருந்ததால் ,   அவருக்கு   பிரம்மத்தை   தவிர   வேறு   ஒன்றும்   தெரியவில்லை !  எனவே   ஜனகரும் ,  அவருக்கு  சொல்லித்தர   வேண்டியது   எதுவுமில்லை  என்று   அறிந்ததால்   சகல  மரியாதையுடன்    அனுப்பி  வைத்தார்.

No comments:

Post a Comment