Friday, September 12, 2014

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்

மனைவிக்கு  மகான்  செய்த  மரியாதை :



           பகவான்  ஸ்ரீ ராமகிருஷ்ணர்  தமது  மனைவியாகிய  அன்னை  சாரதா  தேவியை  அம்பிகையின்  அம்சமாகவே  கருதி , அன்னையின்   அன்பான  பணிவிடைகளை  ஏற்றுக்கொண்டு  கள்ளம்கபடமற்ற  சிறு  குழந்தையைப்  போன்றே  பழகி  வந்தார்.

         குருதேவரிடம்  உள்ள  சிறப்பு  என்னவென்றால்,  எந்த  உணர்வில்  இருந்தாலும்  அதில்  பரிபூரணமாக  இருப்பார். உள்ளும்,  புறமும்  ஒன்றானவர். அம்பிகை  எனபது  மட்டுமல்ல,  தமது  அவதாரத  நோக்கத்தின்  ஒரு பகுதியாகவே  அன்னையைப்  போற்றி வந்தார்.

     ஒருநாள்  குருதேவரின்  அறைக்குள்  உணவை  எடுத்துக்கொண்டு, 
அன்னை   நுழைந்தார்..  குருதேவர்  தன்னுடைய  அண்ணனின்  மகளான  லக்ஷ்மி  நுழைவதாக   எண்ணி , " துயி "  என்று  கூப்பிட்டு,  வெளியில்  போகும்போது  அறையின்  கதவைச்  சாத்திவிட்டு  போகுமாறு  கூறினார்.

      வங்காளத்தில்  " துயி "  எனபது  ' அடி '  என்ற  பொருள்படும்  மரியாதைக்குறைவான  சொல்லாகும் .

      " சரி,  அப்படியே  செய்கிறேன் "  என்று  கூறிய  அன்னையின்  குரலைக்  கேட்டதும் தான்   அறைக்குள்  நுழைந்ததே  யார் ?  என்று  தெரிந்தது.

        அன்னையை  மரியாதைக்குறைவாக  அழைத்ததை  எண்ணி  வெட்கமும்,
 வேதனையும்  அடைந்தார்.

        அவர்  அன்னையிடம்   " லக்ஷ்மி " என்று  எண்ணினேன்.  " தயவு செய்து  மன்னித்துவிடு "  என்று  கூறினார்  குருதேவர்.

        தம்மை  அப்படி  அழைத்ததில்  தவறு  ஒன்றுமில்லை  என்று  கூறி  அன்னை  அவரை  சமாதானப்படுத்தினார்.

          ஆனால்  மறுநாள்  காலை ,  " நான்  உன்னை  மரியாதைக்  குறைவாக  அழைத்துவிட்டதை  நினைத்து  எனக்கு   இரவெல்லாம்  தூக்கம்  இல்லாமல்  போய்விட்டது "  என்று  அன்னையிடம்  சிறு  குழந்தையைப்போல்    மிகவும்  வருத்தத்துடன்     கூறினார் .

  அதன்  பின்புதான் ,  குருதேவர்  சமாதானமடைந்தார் . 

அன்னை  நீண்ட  காலத்துக்கு  பின்னர்   இந்நிகழ்ச்சியை  நினைவு  கூர்ந்து ,
  " அடீ !  என்றுகூட  என்னை  அழைக்காத  ஒருவரை  நான்  கணவராகப்  பெற்றிருந்தேன்.  ஆஹா !  அவர்  என்னை  எப்படியெல்லாம்  போற்றினார்?  ஒருமுறை  கூட  என்னைக்  கடிந்துகொண்டதில்லை.   என்  உணர்வுகளை  மதித்து  நடந்துகொண்டார்.   சிறு  பூவினால்  கூட  அவர்  என்னை  அடித்தது இல்லை.  "  என்றார் .



குறிப்பு :  

            தமது  உரிமை  செல்லும்  இடத்திலும்  மகான்கள்  எவ்வளவு  பண்புடனும்,  அதே  நேரத்தில்    தவறுக்கு  எவ்வளவு  தூரம்  வருந்துகிறார்கள்.  . அப்படி  வருந்த  .....அந்த  இடத்தில்  கிளம்பும்  தூய  உணர்வே   இன்னும்  சித்த  சுத்தியினை  நல்கும்.  எனவே  இது  வணங்கிப்  பெற வேண்டிய  பண்பல்லவா  இது!

நன்றி : சின்ன  சின்ன  கதைகள் ,  விஜயா  பதிப்பகம்.  

1 comment:

  1. I like very much Ramakrishna Paramahamsar, after a long search i got the 3 volume book "Gurudevar Ramakrishnar" it was such an wonderful book book with all details written by one of his disciple.

    ReplyDelete