Monday, September 8, 2014

வேடனே ....முனிவராய் .....



தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்ப்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலித்து  காப்பது  உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர..... பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது  தர்மசுபத்தினியிடம்   வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? பாவத்தில்  பங்குண்டானால்  இப்போதே  உங்களை  விட்டு  விலகி  ஓடிவிடுகிறேன் - இது அவனது தர்மசுபத்தினி .
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என  அறிந்து கொண்டேன்.
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்பிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?
 புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, .....எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ......எந்த நாமம்  ஜனன ...மரணத்தை  ஒழிக்குமோ ......, எந்த நாமத்தை பரமேஸ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ .....அந்த தாரக  நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!


ராம  ராம  ராம   ---என்றே  சொல்லிவா ...நட ....சாப்பிடு ....மூச்சுவிடு ....ராம ... ராம.....ராம .....என்றே  தூங்கு .... சொல்லி சொல்லி ...ராம ராம  என்றே....ராமனில்  நிலையாக  அமர்ந்து விடு!

சொல்லி  பார்த்தான் ....வரவில்லை ....அவ்வளவு  பாவம்  
செய்துள்ளேனா ?   கதறினான் .....மீளவேண்டுமே!  உள்ளுக்குள்   தவித்தான் ....

இவனது  பரிதாபநிலை  நாரதரை  இரக்கம்  கொள்ளச்செய்தது.

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

மரா  மரா  மரா ....மரா  மரா   மரா


ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம  ராம  ராம ராம .........


நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது.  ராம
...ராம   என்று  சொல்ல  சொல்ல .....எண்ணங்கள்  குறைந்தன .......உடலில்  பசி  குறைந்தது ........மூன்று  வேளை  உணவு  தேவைப்படவில்லை.  ஒரு  வேளை  மட்டும்  சாப்பிட்டால்  போதும்  என்றானது .....இதனால்  உடலில்  ஜீரண சுரப்பிகளின் வேலை  குறைந்தது . உடல்  மிகவும்  லேசானது 

கண்களை  திறக்கத்  தோன்றவில்லை. புலன்கள்  வெளியில்  இழுக்கவில்லை. ராம ....ராம .....என்றே  ஒரே  புள்ளியில்  நிலைத்து .....வெளியுலகம்  மறந்தது.

ராம  நாமம்  சொல்லச்  சொல்ல  ....ஒரு கட்டத்தில்  காற்றே  போதுமானதாக  இருந்தது .

சிறிது  நாட்களில்  வேடனின்  உடலைச்  சுற்றிலும்  கரையான்கள்  புற்றினை   கட்டியது. ........அந்த  இடத்தில  ஒரு  தெய்வீக  அமைதி  தவழ்ந்தது . அந்த  அமைதியால்  ஈர்க்கப்பட்டு  காட்டு  விலங்குகள்  எல்லாம்  அங்கே  கூடின.

கொடிய  விலங்குகளும்  தமது  விலங்கு  இயல்பான  பகைமையை .....வேட்டையாடுதலை  மறந்தன. கிடைத்ததை  உண்டு  .....மீண்டும் , மீண்டும் ....அங்கே  அமைதியை  விரும்பி  கிடந்தன.

வேடன்  ரத்னாகர்  இப்போது  வால்மீகி  முனிவராய் ........தன்னை  மறந்து  தானே  அனைத்தும்  ஆன.......ஞானம்  கைவரபெற்று .....ராமாயண  இதிகாசத்தை  இயற்ற  முடிந்தது.



நன்றி : அம்மாஞ்சி 

No comments:

Post a Comment