Thursday, September 4, 2014


பெரியவாகிட்ட   உபதேசம்  பெற்ற  தம்பதி :


ஒரு சிவராத்திரி நாளன்று விடியற்காலையில் பக்த சிரோமணிகளான ஒரு தம்பதி வந்து பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.

அந்த அதிகாலையில் ஸ்நானம் செய்ய உடல் நிலை இடம் கொடுக்கவில்லை, ஆனாலும் ஸ்நானம் செய்து தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.

”வயசாயிடுத்து. பஞ்சாக்ஷர ஜபம் எடுத்துக்கனும். பெரியவா அனுமதி கொடுக்கனும். இதோ நிற்கிறாரே, இந்த வைதீகரிடம் தான் ஒரு நல்ல நாள் பார்த்து மந்த்ரோபதேசம் செய்து கொள்ளப் போறோம்…”என்றார் முதியவர்.

அவர் சுட்டிக் காட்டிய வைதீகரை பார்த்தார்கள், ‘பெரியவா”. பின், தன்னுடைய சொம்பு தீர்த்தத்தை அவர்கள் மேல் புரோக்ஷித்தார்கள். முதியவரை ஆசமனம் செய்யச் சொன்னார்கள்.

உடனே, தானே அவர்களுக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ரம் உபதேசம் செய்தார்கள்.

தம்பதிக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

மந்த்ரோபதேசத்துக்கு நாள் – நக்ஷத்திரம் பார்ப்பது சாமனிய வழக்கம். ஆனால், குருவே மனம் குளிர்ந்து உபதேசிக்க விரும்பினால், காலம், யோகம் பார்க்க வேண்டியதில்லை என்கின்றன சாக்த தந்த்ர நூல்கள்.

“எங்களுக்கு ராஜயோகம்” என்றார்கள் அந்த தம்பதிகள்… பின்னே உபதேசித்தது ‘உம்மாச்சி தாத்தாவாச்சே’’!

No comments:

Post a Comment