Saturday, September 27, 2014

காசியில்  விஸ்வநாதரின்  கருணை:



            கங்கைக்கரையில்   மாலை  ஆரதி          ( கங்காமாவுக்கு  வழிபாடு )


              இரவு  1.30 மணிக்கு  நாங்கள்  பயணம்  செய்த  பஸ்  காசிக்குள்  நுழைந்து, .....     லாட்ஜ்   வாசலில்  நின்றது.    ஏற்கனவே .....  புத்த  கயாவில்  புத்தர்  ஞானம்  பெற்ற  போதி  மரத்தை  தரிசித்த  நேரத்தில்  இருந்தே  எமது  உள்ளம்  ஒரு வித  தூய  உணர்வில்  திளைத்துக்கொண்டு  இருந்ததால் ......இரவு  முழுவதுமே  ராம  நாமாவை  உச்சரித்துக்கொண்டு  இருந்தோம். எங்களின்  வழிகாட்டி  அதிகாலை  3.00 மணிக்கு  கங்கை  கரைக்கு  மஹா  சங்கல்பம்  செய்து ,கங்கையில்  குளித்து  பின்னர்  அபிஷேகப்  பொருட்களை  கங்கா  தீர்த்ததுடன்  கலந்து  அதனை  எடுத்துச்  சென்று  விஸ்வநாதருக்கு  அபிஷேகம்  செய்தல்  வேண்டும்  என்றதால் .....  எமது  அறையினில்  தூங்காமல்  அதிகாலை  3.00 மணிக்காக  காத்துக்கொண்டு  இருந்த  நேரமும்  ராம நாமாவில்  கழிந்தது.

அதிகாலை  3.00 மணி  எல்லோரும்  கங்கைக்கரை  அடைந்தோம். எம்மை  முன்பும் ,  பின்பும்  இரண்டு  தம்பதியர்  அழைத்துச்  சென்றனர்.  ( எமக்கு  காசி  இதுவே  முதல் முறை  வருகிறோம் )  அவர்களை  காசி  விஸ்வநாதர்  மற்றும்  அன்னபூரணியாகவே  பாவித்து  அவர்களுடன்  மகா தச அஸ்வமேத  காட்  ( காட்  = படித்துறை) தச  என்றால்  பத்து  என்று  பொருள்படும்.


இங்கு  கங்கையில்  ஒருமுறை  மூழ்கினால்  பத்து  அஸ்வமேத  யாகம்  செய்த  பலன்  உண்டாம் .




எமக்கு  அங்கு  படிகளில்   இறங்க ,  இறங்க  ........கபீர் மற்றும்  ராமானந்தர்  நினைவு  வந்தது .....இதோ...இந்த ...படிக்கட்டுகளில்   தானே   கபீர்   படுத்துக்கொண்டு ...........குரு   ராமானந்தர்   கபீரின்    முதுகில்   கால்  வைத்து  மிதிக்க .......ராம   ராம   ....என   கூறிட ......அதனையே   தீட்சையாக  கபீர்   பெற்றார் ......இந்த படியில்   கபீர்   படுதிருப்பாரோ ?...... இங்கு   ராமானந்தர் நின்றிருப்பாரோ !.....கபீரை....தமது  திருவடியால் ... .மிதித்து      சீடருக்கு  .....ராம.....  ராம ....என்று  கூறி  அவரை  கருணையுடன்   பார்த்திருப்பாரோ?..........இந்த  உணர்வு  எம்மை  ஆட்கொள்ள  .....  அங்கு   தேடித்தேடி   நின்றேன் .



அங்கு  சிறிது  நேரத்தில்  ஒரு  சிவாச்சாரியார்  வந்தார்.  கங்கைக்கரையின்  சிறப்பு ,  காசி நகரின்  சிறப்பு ,  அந்த  தச  அஸ்வமேத  காட்  சிறப்பு  (  இதற்கே  தனியாக   ஒரு  பதிவு  போடலாம் )...........மஹா  சங்கல்பம் ..........அதாவது  இதுவரை   செய்த  பாவங்கள் .........பொய் , கோள்மூட்டுதல் , சாதுக்களை  நிந்தித்து , வறியோருக்கு  இல்லையென்றது ..........சிவ, விஷ்ணு , குரு  நிந்தனைகள்,  மற்றவர்களை  எண்ணம் , சொல் , செயலால்   அறிந்தோ .....அறியாமலோ   துன்புறுத்தியது ...... .......................அம்மா !  கங்கா  உன்னில்  மூழ்குவதால்   விலகிடும்.....ஆனாலும்  மீண்டும்  அவற்றை  செய்யாத  உறுதியும் , வைராக்கியமும்   தந்து  அருளி ,  அத்தகைய   சூழ்நிலைகளை  தராமல்  காத்து 

அருள   வேண்டும்   என்று  வேண்டி ..........இந்த  புண்ணிய  பயணம்  செய்ய  உதவிய  அனைவருக்கும் ...........(பின்பு  இந்த  அனுபவத்தை  படிக்கும்   அனைவருக்கும் ) உன்னில்  நீராடிய  பலனும்,  நற்பண்புகளும் ...........முக்தியை  அடைவதற்கு   தேவையான  அனைத்தும்  அவரவர்  பக்குவத்திற்கு  ஏற்ப  அருளி .........கடைத்தேற்ற  சூழ்நிலை  அமைத்துத்  தருமாறு  பிரார்த்தித்து ..........கங்கையில்   மூழ்க .........ராம ராம ராம .........

  உடல் ,  மனம் ,  ஆன்ம .........அனைத்தும்   இனம்  தெரியாத   உணர்வில் ......கங்காமா ....கங்காமா   எனக் .(.உடல்   இருப்பதே   உணரவில்லை ..)  கரைந்து ..........ஒரு   குழந்தையாகி....... அபிஷேகத் தீர்த்தக்  குவளையுடன்  விசாலாக்ஷி  சமேத  விஸ்வநாதரின்   பின்னே   அவர்களுடன்  சென்றோம் .


 இந்த   தம்பதியினர்   தங்களின்   குழந்தையைப்   போன்றே   யாத்திரை   முழுதும்  எம்மைப்    பார்த்துக்கொண்டனர்.




அந்த   அதிகாலையிலும்  சாதுக்கள் ......சிவ..சிவா...ஓம்  நமசிவாய ....சிவாய நம ....ராம  ராம  ராம ......என்றோ .......கங்கைக்கரை   இறை  உணர்வில்  திளைக்கிறது . கோவிலுக்கு   செல்லும்  வழி  மிக  குறுகலான  சந்துகள் .....முகலாயர்களின்   படையெடுப்பு  அடிக்கடி  நிகழ்ந்ததால் ..........உள்ளே   குதிரைகள் ...படைகள்   செல்ல   இயலா  வண்ணம்  மிக  நெருக்கமாக   அமைந்த   சந்துக்களே ..... அங்கு  தெருக்கள்.




வழியில்  4 அடுக்குகளாக  போலீஸ்  பாதுகாப்பு .......எல்லாம்  முடிந்து  உள்ளே  சென்றோம் ,...வலது, இடது   வரிசைகள்  சென்றன .  எம்மை  அழைத்துச்  சென்ற  தம்பதியர்  வலது  வரிசையில்  செல்ல .........அவர்களுடன்  யாமும்  நின்றோம்.



    குறுகலான   சந்துக்கள் .........விஸ்வநாதரை   நோக்கி  செல்லும்  வழி 

 .........இன்னும்   சிறிது  நேரத்தில்  நமது  கைகளாலேயே   விஸ்வநாதருக்கு   அபிஷேகம்   என்றிடும்  நிலை ........எத்தனை   எத்தனை  மகான்கள்  உன்னை  தொட்டு  ....எப்படி   எப்படி   உன்னை   உணர்ந்தனரோ ..இவனின்   குற்றங்களை   பொறுத்துக்கொண்டு   ...அழைத்து   வந்துள்ளாயே! ..சிவமே ....ராமா ...உன்னை   உள்ள  படி   உணரும்   உணர்வு   தந்து   அணைத்துக் கொள்ளேன் ..........கண்களில்   அருவியாய்   நீர்  வழிந்தன.

அப்போது   ஒரு   அந்தணர்   வந்தார் .........இது   ருத்ராபிஷேகம்  செய்யும்   வரிசை   எனவும் ........அவருக்கு   ரூபாய்  300  தந்தால்  எல்லாம்   சிறப்பாக   உடனிருந்து  செய்து  வைப்பதாகவும்  கூறினார்.



உடன்   வந்த  இரண்டு   தம்பதியர்  ரூ.600  கொடுக்க ........எமக்கோ ...அங்கு   பணம்  இல்லை .......விருப்பமும்  இல்லை . எமது   தந்தை ,  தாயை   பார்க்க .......பணமா ?......உள்ளே   கதறல்   வெளியேறியது ......எம்மை  வெளியேற்ற ......கண்ணீருடன்   எந்த  எண்ணமும்,  சலனமும்  அற்று  வெளியேறி  நிற்க ........ 

எங்கிருந்தோ   ஒருவர்  வந்தார் .......எமது  நிலையைக்   கண்டவர் .....கண்களில்   நீர்   வழிய ..........ஒன்றும்   சொல்ல   இயலாமை  கண்ட  அவர்   ......எமது   கைகளை  பற்றி   இடதுபுறம்   அழைத்துச்  சென்று ...........உள்ளே  காட்டினார் .

எம்மை   கைபிடித்து   விஸ்வநாதரின்   அருகினில்   அமரவைத்து ...........எமது  கைகளால்  அபிஷேகப்  பொருட்கள்  கலந்த  கங்கை  நீரை  .........விஸ்வநாதரின்   சிரசினில்   பொழிந்திடச்   செய்தார்.

எமக்கோ  ஹிந்தி  தெரியாது,  அவரோ  ஹிந்தியில்  ....கிட்டத்தட்ட   கட்டளை  இடுகிறார்!
அவர்  கூறியதை  புரிந்தாற்போல  அங்கு  செய்துள்ளேன் ......பெற்றோரிடம்  கட்டுண்ட  குழந்தையை  போல,  எந்த  கேள்வியும்  கேட்காமல்  அவர்  கட்டளையிட   கீழ்படிந்துள்ளேன் ............

ஊன், உயிர்   ஒடுங்க ............உள்ளே   எதுவோ ......   கரைந்து ,  கரைந்து ..........ஆனந்தமாய்   பொங்கிட ..............இன்னும்    இருமுறை   இதேபோல  ..........அதே  குவளையில்   வில்வம்  மற்றும்   நீரால்   அபிஷேகம்   நடந்தது . 


"  எம்மை   இழந்த  நலம் "  -   இது   ஒன்று தான்   சொல்ல முடியும் .   வெளியில்   வந்து   அவருக்கு   நன்றி  சொல்ல  கண்ணீருடன்  தேடினால்  ............அங்கு   அவர்   இல்லை .....மீண்டும்   சுற்றி   சுற்றி   வந்தேன் ........அவர்   இல்லை .


இப்போது ,.... இன்னும்   அந்த  தம்பதியினர்  அங்கு   வரிசையிலேயே  நின்றிருந்தனர் .  எம்மைப்   பார்த்ததும்  ,  அவர்களுக்கும்   ஆனந்தம் .......

"  என்னப்பா !   தரிஷனம்  ஆயிடுத்தோ !  உன்னை   அழைசிண்டு   போன   பெரியவர்   எங்கே? "  நாங்களும்   உன்கூடவே   வந்திருக்கலாம் !  "   என்று    சொல்லிக்கேட்க   ..........எமக்கோ    கண்களில்   நீர் ........என்ன   சொல்ல   இவர்களிடம் ?  ..........


  வந்த  பெரியவர்   யாரென்று   சொல்ல?..........விஸ்வனாதரே ! ..............என்றால்  புரியுமோ ?..............இல்லை ,  எங்களுக்கு  எல்லாம்   தெரியாதவர்   அதெப்படி   உனக்கு   மட்டும்  வருவார் ? ...இடக்கு,  மடக்காக  கேள்வி   வருமோ ?.... 


"  அவரைத்தான்   தேடிட்டு   இருக்கேன் "   என்று  கூறிவிட்டு  ,   ஓரிடத்தில்   அமர்ந்து  கண்களில்  வழியும்  நீரைத்  துடைத்துக்கொண்டு .... கண்களை   மூடிக்கொண்டோம்!  அமைதியாக ..!



No comments:

Post a Comment