Monday, September 29, 2014

உத்தமனுடன்  உரையாடல் :



எம்  தலைவ!   சாந்தி  அடைவது  எங்ஙனம் ?

ஆணவத்தை  அழிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!  ஆணவத்தை  அழிப்பது  எங்ஙனம் ?

இன்றே,  இப்பொழுதே  என்னிடம்  சரணடைவதன் மூலம் !

எம்  தலைவ!  உன்னைச்   சரணடைவது  எவ்வாறு ?

" நான்  ஒரு  அஸக்தன் "  என்று  அறிவதன்  மூலம் !

எம்  தலைவ!  நான்  ஒரு  ஆதரவற்ற  அஸக்தன்  என்பதை  எப்படி  அறிவது ?

அருள்  தாரையில்   இடைவிடாது   நனைவதன்  மூலம் ! 

எம்  தலைவ!  அருள்  எப்போது  உதிக்கும் ?

நீ  உன்னுடைய  முயற்சிகளில்  தோற்கும்போது ......!

எம்  தலைவ! இம்  முயற்சி  என்பது  எது ?

உள்ளத்தையும்,  உடலையும்  தூய்மை  ஆக்கலே !

எம்  தலைவ!  எம்  உள்ளத்தை எப்படித்  தூய்மையாக்குவது ?

பக்தி  மற்றும்   தன்னலமின்மையால் ...........!

எம்  தலைவ! எப்படி   தன்னலமின்மையை  அடைவது ?

அஹங்காரத்தின்   செயல்பாடுகளை   இடையறாது  கவனிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!   பக்தியை   எங்ஙனம்   பெறுவது  ?

இடையறாது  என்னை  எண்ணுவதால் !

எம்  தலைவ!  எங்ஙனம்  உன்னை  எண்ணுவது ?

என்னுடைய   திருநாமத்தை  இடைவிடாது  ஜபிப்பதன்  மூலம் !

எம்  தலைவ!  ஜபிக்கும்  திறனை  எங்ஙனம்  பெறுவது ?

ஜபத்தில்  அழ்ந்திருக்கும்   எம்  பக்தர்  தொடர்பால் ..!

எம்  தலைவ!  உன்  பக்தர்களை  எங்ஙனம்  அறிவது ?

அவர்   தம்மைச் சூழ்ந்திருக்கும்  அன்பு  மற்றும்  சாந்தியின்  மணத்தால் .....!



                                       நன்றி :  நொச்சூர்  வெங்கட்ராமன் ,  ரமணோதயம் .














No comments:

Post a Comment